அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

Tamil Parties Recognize Need for Unity and Consensus for Durable Solution : TIC Press Release

tic_logoAfter a three-day conference in Switzerland, the political parties of the Tamil speaking peoples of Sri Lanka, recognizing the need for unity and consensus, committed themselves to the engagement by all segments of society towards a just and durable political solution in the island through a dignified, respectful and peaceful process. The parties also agreed to continue the discussions.

The conference from 20 to 22 November 2009, titled “The role of the elected representatives of Sri Lanka’s Tamil and Muslim population in a process of national reconciliation, reconstruction and reform” was jointly organized by the Tamil Information Centre (TIC), the International Working Group on Sri Lanka (IWG) and the Initiative on Conflict Prevention through Quiet Diplomacy (ICPQD) at the University of Essex. It was hosted by the Swiss Federal Department of Foreign Affairs. The following Tamil parties were represented at the conference: All Ceylon Muslim Congress, All Ceylon Tamil Congress, Ceylon Workers Congress, Democratic Peoples Front, Eelam People’s Democratic Party, Eelam People’s Revolutionary Front, Eelam Revolutionary Organisation of Students, Ilankai Tamil Arasu Kadchi, Pathmanabha Eelam Peoples‘, Revolutionary Liberation Front, People’s Liberation Organisation of Tamil Eelam, Sri Lanka Muslim Congress, Tamil Eelam Liberation Organisation, Tamil Makkal Viduthalai Pulikal , Tamil National Alliance, Tamil United Liberation Front and Up-Country Peoples Front.

The conference was arranged in a climate of extreme unease in Sri Lanka and abroad in relation to the future of the Tamil speaking peoples in the island. Five months have elapsed since the Sri Lanka government announced the military defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), but despite the assurances of the government, little visible progress has been made towards addressing minority rights and grievances. Some suspect that there is no serious intention to implement meaningful reforms in the long-term and fear further erosion of minority rights. The most egregious sign of a lack of progress is the treatment of 300,000 internally displaced Tamil civilians, many of whom continue to be held against their will in miserable inhuman conditions. The political opposition, civil society and journalists who call for the protection of the IDPS or minority rights are portrayed as enemies of the state and have been silenced through assassination, violence and imprisonment or forced to flee the country.

Under these circumstances it is essential for the representatives of the Tamil speaking peoples to unite to develop an effective common programme to hold the government accountable for the protection of minorities, and to act as a serious and dependable negotiating partner representing the demands of minorities in the development of meaningful proposals for reform in Sri Lanka.

In this light, the short and long-term aims of the conference were as follows:

*  To provide a safe and facilitated space for dialogue and engagement between the representatives of Sri Lanka’s main political parties of the Tamil-speaking peoples;

*  To build on preparatory discussions with and between the parties aimed at  bridging divides and identifying common ground on substantive issues; 

*  To explore the possibilities for future cooperation towards the development of a common political platform for the representation of Sri Lanka’s Tamil speaking peoples within the political framework of pre and post-election Sri Lanka;
 
*  In the long-term, to support Sri Lanka’s Tamil speaking political parties to play a meaningful role in a process of national reconciliation and a programme of political, institutional and constitutional reform aimed at addressing their grievances and preventing a return to armed conflict.

The meeting was conducted in a spirit of openness, mutual respect and constructive debate.  The representatives expressed their full commitment to unity and to a common forum to seek a just and durable political solution. The participants obtained important clarifications and achieved common understanding. They also pledged commitment to continue their discussions in the interest of achieving full respect for the rights of the Tamil-speaking peoples and to building a peaceful, dynamic and prosperous society.

Among the issues discussed were shared concerns of the long, medium and short-term.  These included an in depth discussion on the evolution of an acceptable, inclusive political solution to the conflict. Also discussed were principles for and solutions to urgent matters such as the situation of internally displaced persons, Muslim IDPs, detainees and the disappeared, demilitarisation and the rule of law.  Also discussed was the urgent need for the facilitation of voluntary return of all internally displaced persons to their homes and land in conditions of safety and dignity, and to expeditiously provide for their housing and livelihood requirements under competent and independent civilian supervision. 

At the end of the conference, the participating political parties issued the following joint statement:

Joint Statement

We, the representatives of the political parties of the Tamil-speaking peoples unanimously:

Affirm the historic meeting enabling an exchange of views, and express a full commitment to a common forum among representatives of all Tamil-speaking peoples

Recognize ‘Tamil-speaking peoples’ comprise three distinct peoples: Tamils, Muslims, and Tamils of Indian origin

Respect the distinct and separate identities, interests and positions of the parties

Recognize and affirm the need for unity and consensus among the Tamil-speaking peoples while acknowledging differences with regard to some issues and the paths to pursue them

Commit to the engagement by all segments of society towards a just and durable political solution through a dignified, respectful and peaceful process;

Agree and commit to continuing our dialogue.

Names:

Mr. Veerasingham Anandasangaree, Tamil United Liberation Front

Mr. Periyasamy Chandrasekaran, Up-Country Peoples Front

Mr. Douglas Devananda, Eelam People’s Democratic Party

Mr. Abdul Rauff Hakeem, Sri Lanka Muslim Congress

Mr. Mohamed Hizbullah, All Ceylon Muslim Congress

Mr. Mano Ganeshan, Democratic  Peoples Front

Mr. Kulasekaram Mahenthiran, Tamil Eelam Liberation Organisation

Mr. Sivasubramaniam Nanthakumar, Eelam Revolutionary Organisation of Students

Mr. Gagendrakumar Ponnambalam, All Ceylon Tamil Congress

Mr. Suresh Premachandran, Eelam People’s Revolutionary Front

Mr. R. Sampathan, Tamil National Alliance

Mr. Sivanesathurai Santhirakanthan, Tamil Makkal Viduthalai Pulikal

Mr. Mavai S. Senathirajah, Ilankai Tamil Arasu Kadchi

Mr. Dharmalingam Sithadthan, People’s Liberation Organisation of Tamil Eelam

Mr. Thirunavukarasu Sritharan, Pathmanabha Eelam Peoples‘ Revolutionary Liberation Front

Mr. Arumugan Thondaman, Ceylon Workers Congress

Tamil Information Centre
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)

Telephone: +44 (0)20 8546 1560    +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: admin.tic@sangu.org
Related Articles:

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

‘இயக்கத்தின் பின்னடைவிற்கு சர்வதேச செயற்பாட்டாளர்களே காரணகர்த்தாக்கள்!’ தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கைகள்

LTTE_PressReleaseதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவைத் தொடர்ந்து அவ்வமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதில் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து உள்ளது. இந்த நெருக்கடிகள் பெரும்பாலும் வெளி அழுத்தங்களால் ஏற்பட்டது என்பதிலும் பார்க்க உள்ளிருந்து கிளம்பிய சுயநலன் சார்ந்த முரண்பாடுகளே பிரதான காரணமாக அமைந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் உள்ள தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன், ரிஆர்ஓ தலைவர் ரெஜி, பிரிஎப் யை பின்னிருந்து இயக்கும் ரூட் ரவி மற்றும் தனம் போன்றவர்களின் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டுகின்றது.

இந்த யுத்தத்தால் எவ்வித பாதிப்புக்கும் முகம்கொடுக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு தங்கள் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் அமைப்பின் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததையே மூடிமறைத்தனர். இதுவே விடுதலைப் புலிகளின் சர்வதேச முகாமில் பிளவை ஏற்படுத்தியது. புலம்பெயர் நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்புகளைத் தங்கள் கைவசம் வைத்துள்ள கடும்போக்கான புலிகள் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததை மூடிமறைத்து தங்கள் இருப்பையும் பொருளாதாரக் கட்டமைப்பையும் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார் போன்ற அறிக்கைகளையும் செய்திகளையும் ஊடகங்கள் ஊடாக கசியவிட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கெ பத்மநாதன் வே பிரபாகரன் உயிரிழந்த செய்தியை அறிவித்த போது அவரை துரோகி என புலம்பெயர் புலிகள் அறிவித்தனர். அச்சமயத்தில் இலங்கையில் உள்ள போராளிகளோடு தொடர்பைக் கொண்டிருந்த கெ பத்மநாதன் அங்குள்ள போராளிகளை தன்பக்கம் வென்றெடுத்திருந்தார். இதுவரை பத்மநாதனைத் துரோகி என அறிவித்த புலம்பெயர்ந்த புலி ஆதரவு முகாம் தற்போது மிஞ்சியிருந்த தளபதி ராமும் அங்குள்ள போராளிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து விட்டதாகவும் அவர்களும் துரோகிகள் என்றும் செய்திகளைக் கசியவிட்டுள்ளனர்.

மாவீரர் நாளையடுத்து மாவீரர் உரையை வழங்கவுள்ள ராம் தங்கள் காலம்சென்ற தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதை அடுத்தே இந்த துரோகி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை:

LTTE_PressRelease

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை.

முஸ்லிம் சமூகத்தை ஏளனம் செய்த பொன்சேகா வெட்டும் குழியில் எவரும் வீழ்ந்து விடவேண்டாம் அலவி மௌலானா கோரிக்கை

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்றும் நாட்டின் நிருவாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்று முஸ்லிம் சமூகத்தை அவமதித்து ஏளனம் செய்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா என கண்டனம் தெரிவித்திருக்கும் மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா அவரால் வெட்டப்படும் குழியில் எவரும் விழுந்து விடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் மக்களின் கவனத்துக்கென ஆளுநர் அலவிமௌலானா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நமது நாட்டில் நடந்து முடிந்துள்ள யுத்தத்தினாலும், பல்வேறுபட்ட பொருளாதாரச் சிக்கல்களினாலும் திணறிக்கொண்டிருக்கும் எமது மக்கள் இன்று படிப்படியான முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். சமூகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத வித்துக்களைக் களைந்து ஒரே நாடு ஒரே மக்கள் என்ற விழிப்புணர்விற்கான செயற்திட்டங்களை அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் சிந்தித்தேனும் அக்கறை கொள்ளாத சக்திகள் மீண்டும் மக்களை குழப்பி சதிசெய்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களாகிய நீங்கள் இந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளாது சதிகாரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உங்கள் வசம் மிக விரைவில் வந்தடையும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறிது காலத்துக்கு முன்பு வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களிடையே பெரும் மனக் கிலேசத்தினை ஏற்படுத்தியதை நாம் மறந்து விடமுடியாது. அவர் படைத் தளபதியாக இருந்த காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்று ஏழ்மை செய்தார். அவர்கள் நிர்வாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்றும் அவதூறு செய்தார். இவர் வெட்டிய குழியில் எவரும் விழுந்து விடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ரவூப் ஹக்கீம், மனோகணேசன் போன்றவர்களும் அதிருப்தி அடைந்தவர்களாக அன்று காட்டமான அறிக்கைகளை விட்டிருந்தனர் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான ஆக்கபூர்வமான கருத்துகளை இவர்களினாலும் இன்னும் முன்வைக்க முடியாமல் உள்ளது. எவ்வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் போதும் என்ற மனப்பான்மையை எதிர்க்கட்சிகளிலும், சுயநலத் தலைவர்களிடத்தும் மேலோங்கி இருப்பதை அறிவு சார்ந்த மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என்ற புவியியல் கோடுகளை களைந்து நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறும் காலம் உதயமாகியுள்ளது. சுதந்திர இலங்கையில் சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும் நாடு எவரிடமும் தங்கி நிற்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசினால் பேசப்பட்ட போலி சமாதானத்தில் முஸ்லிம் சமூகத்தை மோசமாகக் கையாண்டதில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை சமாளிக்கத் தக்க வகையில் முஸ்லிம் தரப்பை மூன்றாம் தரப்பாக்கி, ரவூப் ஹக்கீமை பேச்சு மேசைக்கு ஓட்டிச் சென்றதை ரவூப் ஹக்கீம் மறந்தே போய்விட்டார்.

புலிகளினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நியாயத்தினை முதன்மைப்படுத்தி மர்ஹும் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், ரணிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்குள்ளோ செல்லவேயில்லை. அவ்வாறு மர்ஹும் அஷ்ரப்பினால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் ஹக்கீம் சங்கமமாவதால் முஸ்லிம் சமூகம் என்ன நன்மையடையப் போகிறது? என்பதை ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லாதிருப்பது ஏன் என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்மைகளை விட திரைமறைவில் மோசமான கழுத்தறுப்புகள் நடத்தப்பட்டதை இங்கு பட்டியலிடலாம். துயரம் என்னவென்றால் ஹக்கீம் கோடரிக் காம்பாகி இருப்பதுடன் தனது சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை கறிவேப்பிலையாக்கிக் கொண்டிருப்பதேயாகும்.

சியோனிசக் கதிரையில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை இன்று முஸ்லிம்கள் நன்கு இனம் கண்டு வைத்துள்ளனர். வரலாறு இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

borella-protest.jpgஇலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரளை மகசின் சிறைசாலைக்கு எதிரில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய சோசலிஸ கட்சியைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினரான என்.குமரகுருபரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.

Tamil Solidarity Condemns Australian and British governments’ statements about the boat refugees

des_browneTamil Solidarity strongly condemns the Australian and British governments’ statements about the refugees. While over 250,000 people are held under armed guard in concentration-style camps and over 30,000 young people are kept in secret camps and tortured, it is absolutely disgraceful to declare that Sri Lanka is a safe country for Tamil refugees.

Australian government has acted with total disregard for human values as they continue to ignore the plight of refugees held at its border. These refugees have undertaken a most dangerous journey just to save their lives and to secure a better future for their children. Not only does it appear that no consideration was given to these refugees but that the Australian government has also signed an agreement with the Sri Lankan government to control the refugees and has agreed to offer over a billion dollars in aid to Sri Lanka as a favour. The numbers of refugees are relatively small given the scale of the repression. It would not create huge costs for Australia to respect these people’s fundamental human rights. We demand that Australia immediately recognises the rights of these people.

Today an Indonesian navy officer informed the refugees in the boat at Merak harbour that they will not allow UNHCR to meet them. They also informed them that they will not allow any media personnel to meet them. This happened directly after Australia and Sri Lanka signed the refugees agreement. Now the refugees in the boat demand validity of that claim.

They are victims of the Sri Lankan government’s chauvinist policies and human rights violations. Now the so-called international community joins with the Sri Lankan government to infringe their human rights. Appalled by this, the people in the boat sent a statement (attached below) to all the governments. They feel let down by those they believed would respect their minimum rights, such as the right to a decent life and education for their children. Tamil Solidarity joins them in their disappointment and is equally appalled by their treatment. We demand the immediate granting of asylum status to these refugees.

Des Browne – defends Sri Lankan government as usual

Britain’s special envoy to Sri Lanka, Des Browne also came to the aid of the Australian and Sri Lankan governments and announced that: “We take the view that it is safe to return people, including Tamils, to Sri Lanka”. This announcement came just a week after a parliamentary debate held on camps in Sri Lanka. Michael Foster (Parliamentary Under-Secretary, Department for International Development) announced that they will cut aid. We continue to expose their utter hypocrisy and to warn that mainstream parties will not act in the interests of oppressed Tamil-speaking people(visit Westminster Hall debates on Sri Lanka (IDP Camps)). Now Des Browne is proving that point and clearly stating where the New Labour government stands.

He also announced that the international community will not support the call for a separate state for Tamil-speaking people within Sri Lanka. He urged the peoples of Sri Lanka to find a way to talk to this brutal government, adding that Sri Lanka is a “functioning democracy”. This claim is laughable. Even the Financial Times has described the current Sri Lankan government of Mahinda Rajapakse as an “elected dictatorship”. Tamil-speaking people around the world have shown what they think about this government. Even Tamil MPs in Sri Lanka call it a dictatorship of the Rajapakse family. Trade unions and left organisations, human rights organisations in Sri Lanka and around the world have strongly condemned the Sri Lankan government. It is totally irresponsible to defend the Sri Lankan government and say Sri Lanka is safe for Tamil-speaking people.

Write your condemnation to Des Browne MP. Please forward the above statement to everyone you know and ask them also to send their condemnation.

Please also forward the message you sent to Des Browne to Tamil Solidarity, so that we can also publish it. Our mail: info@tamilsolidarity.org

 Email Des Browne MP: browned@parliament.uk

Telephone: 01563 520267         01563 520267             Fax: 01563 539439

Constituency Address:

Parliamentary Advice Centre
32 Grange Street
Kilmarnock
KA1 2DD

Parliamentary Address:

House of Commons
London
SW1A 0AA

The following appeal letter is being sent to the government of countries who have signed up to the UN refugee convention.

Refugees are also human beings

Appeal letter

As a result of the brutal attacks and human rights violations against the Tamil-speaking people in Sri Lanka a lot of people have lost their normal life, have lost their family, their relatives, their property and their right to education and more.

We, 254 people including children, pregnant women, the elderly and young men and women, are also a part of those people affected by the brutal war. We have suffered for years and in order to seek a better life on 1 October 2009 we embarked on a most dangerous sea journey to Australia, a country which has signed up on the UN refugee convention.

On 11 October 2009 our journey was intercepted by the Indonesian navy. Someone who claimed to be an officer from the Australian High Commission promised that he will talk to the Australian government regarding our fate and took us to Merak harbour on the island of Java. We informed them that we will not get off the boat until the Australian government grants us refugee status.

For the last month we have been waiting on the boat at sea with all sorts of difficulties and still we have not received any favourable outcome either from Australia or any country that respects human rights. The UNHCR, which is supposed to be an international organisation that looks after the plight of the refugees, has not only refused to recognise us as refugees, but has refused to treat us as human beings. This causes us immense suffering. We are also worried and afraid of the effect that the changes in the climate will have while we are still at sea.

The UNHCR must come to talk to us. We request that Australia or any other country grants us refuge. These are the basic things we demanded when we started a hunger strike. We gave up on the hunger strike when we were wrongly advised that this may be considered a threat. We do not intend to threaten anybody. All we demand is recognition of our plight and assistance. But we are not prepared to give up the fight for our rights.

Then we gathered and protested en masse which has been covered by the media around the world. But still we have been ignored. The hunger strike, the protest, everything we did has not brought us recognition from any country that genuinely respects human rights. Now we are writing this letter as another measure in the attempt to bring our plea to your attention.

We have no peace in our homeland. We have been refused our human rights and our children and young people have no future in our country. At least we want a better life for our children.

It is with great urgency that the UNHCR must come and meet us and listen to our plea. Remaining at sea, as the weather worsens, poses great danger and we plead with you that you consider our pathetic situation and that you take a favourable decision.

 Signed Sri Lankan refugees.

இனி புலம்பெயர் தமிழர் பொறுப்பில் தமிழீழ போராட்டம் : தமிழீழ விடுதலைப் புலிகள் & பிரித்தானிய தமிழர் பேரவை

09-tamil-protester.jpgசுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதே போன்றதொரு அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதே காலப்பகுதியில் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09.11.2009

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.

காலத்திற்குக் காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை  மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் விஷயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடத்த வேண்டிய பெரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத் தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.

உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத் தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் சடமையாகிறது.

இவ்வகையில், ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.

இந்த வழிமொழிவு இன்று ஈழத் தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத் தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல்  உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

._._._._._.

பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிக்கை:

BTF Bannerஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும், சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது.

மிகவும் அவதானமாக இலங்கை அரசியலை கவனித்து, சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும் இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் அதன் இறையாண்மையை இழந்தது. தொடர்ந்து வந்த காலனித்துவ ஆட்சிகளுக்கு அடிமைகளாக தமிழினம் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சிங்கள அரசினால் எமது தேசிய இறையாண்மை, சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது.

முப்பது வருட அறவழிப் போராட்டமும், முப்பது வருட ஆயுதப்போராட்டமும் மீண்டும் எமது தாயகத்தின் விடுதலைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் அத்திவாரமிட்டது. ஆனால் இப்போது சர்வதேசத்தின் கூட்டுச் சதியினால் எமது தேசக்கட்டுமானம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் விடுதலை மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடாகத்தான் பலர் பல தீர்வுத்திட்டங்களோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் கட்டப்பட்ட, காப்பாற்றப்பட்ட எமது தேசத்தின் இறையாண்மையை சமரசப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் எமது மக்களின் இன்றைய துயரைத் தீர்ப்பதற்க்கு பல தளங்களிலும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மறுப்பதற்க்கில்லை.

தாயகம். தேசியம். இறமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் விழுமியங்களோடு பணியாற்றும் அனைவரோடும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து பணியாற்றி வருகின்றது. ஆனால் அதேவேளை தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்தும் தரப்பினரோடோ அல்லது தமிழ்த்தேசியத்தை சமரசப்படுத்தும் தரப்பினரோடோ பேரவை ஒரு பொழுதும் சேர்ந்தியங்காது என்பதனைத் மீண்டும் தரிவித்துக் கொள்கின்றது.

பேரவை, பிரித்தானிய சட்டங்களுக்குட்பட்டு மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றது. எமது பிராந்திய கிளைகளின் ஊடாகவோ அல்லது தலைமையகத்துக்கோ தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சமகாலத்தில் பேரவையின் சார்பாக பேசவல்லவர்கள் சர்வதேச ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் ஆகியவற்றில் கிரமமான முறையில் தோன்றி பேரவையின் செயற்பாடுகள் குறித்தான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

அத்தோடு ஊடக தர்மத்தோடு இயங்கும் சகல ஊடகங்களோடும் தமிழர் பேரவை செயற்படுகின்றது. மக்கள் கட்டமைப்பை உருவாக்குதல், இதுவே எமது அரசியல் வேலைத் திட்டத்தின் அடித்தளமாகும். தற்போது பேரவைஇ மக்கள் அனைவரையும் உள்வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது பேரவைக்கு ஓர் ஜனநாயக அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க உதவும்.

அத்தோடு மக்களே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த இலக்குகளை முன்வைத்து பேரவையானது பல்வேறு செயல்த்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு எம் முன்னே காத்திருக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கான ஆட்பலம் மற்றும் அனைத்து வளங்களையும் சீர் செய்ய உதவிடும். எம் அங்கத்தவர்கள் உங்கள் அனைவரினதும் வாசல் தேடி வருகின்றார்கள்.

எமது பணியில் நீங்களும் முழுமையாக இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அத்தோடு பின்வரும் செயற்திட்டங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கின்றது. திறப்பு போராட்டம், மனித உரிமை கவுன்சிலுடனான பரப்புரை, இலங்கைக்கான ஐரோப்பிய வரிச் சலுகைக்கு எதிரான போராட்டம், இலங்கை உற்பத்தியையும் இலங்கையில் முதலீடுகளையும் எதிர்த்துப் போராடுதல். போரால் பாதிக்கப்பட்டோர் பதிவு, போர்க்குற்றத்தை நிருபித்தல், இனப்படுகொலையை வெளிக்கொணரல்.

எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்தின் ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் மனங்களை வெல்லவேண்டும் . அதேவேளை ஈழத்தில் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இயல்பு நிலைவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இந்த இலக்குகளை அடைய வேண்டிய பெரும் பணி நம் முன்னே இருக்கின்றது இதற்க்காக தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதேவேளையில் மக்களின்முன் வெளிப்படையாக அரசியல் பணிகளை முன்னெடுக்காது இரட்டைக் கொள்கையுடன் இயங்கும் அமைப்புக்கள், தனி நபர்களை மக்கள் உடனே இனங்கான வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி

பிரித்தானியத் தமிழர் பேரவை

‘கலைஞர் தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.’ வீ ஆனந்தசங்கரி தலைவர் த.வி.கூ

Anandasangaree V30-10-2009

மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை

பெருமதிப்புக்குரிய ஐயா,

தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன்.  எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரயோகித்து இலங்கை அரசுக்கு பிரச்சினையை தீர்க்க உதவுமாறு வேண்டியிருந்தேன். அத்தகைய கடிதங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைத்துள்ளேன். இனப்பிரச்சினைத் தீர்வு இந்திய அரசியல் சாசனத்தின் முன் மாதிரியாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். சிறிதும் எதிர்பாராத இடங்களில் இருந்தும்கூட அந்த ஆலோசனைக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையொத்த அதிகாரப்பகிர்வு இலங்கையின் மாகாணசபைகளுக்கு வழங்கினால் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு இலங்கைவாழ் மக்களின் பெரும்பாலானோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதோடு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினைக்கு  தீர்வு காண உதவிய பெருமையும் தமிழகத்திற்கு சேரும். அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தபோது விரைவில் இலங்கையிலிருந்து ஒரு உயர்மட்டக்குழு புதுடில்லிக்கு வர இருப்பதாகவும் அவர்களுடன் முக்கிய இரு பிரச்சினைகளான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம்  போன்றவை பற்றி பேசும் சந்தர்ப்பம் உண்டென குறிப்பிட்டதாக அறிகின்றேன். இந்த விடயமே இக் கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது.

50 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன் என்பது பற்றியும் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முதற் காரணமாக இருந்த பிரஜா உரிமை சட்டம் 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதும், 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டம் ஆகியன மேலும் நிலைமை மோசமடைய காரணமாக இருந்த இக்காலகட்டத்தில் நான் வாழ்ந்தவன் என்பதால் இவை பற்றி நன்கறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் கடும் போக்காளர்களின் செயற்பாட்டால் குழப்பத்திற்குள்ளாகி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்;டதோடு மறுநாள் அதன் தலைவர் இறந்ததுடன் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது. மொத்த விளைவு இலங்கையின் 25 மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 08 மாவட்டங்கள் அழிந்தன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் எதுவித வேறுபாடின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொது சொத்துக்களும் அரச சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏனைய சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லீம், தமிழ் மக்களின் உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் மிகக் கூடுதலானவை எனக் கூறலாம். கிழக்கு மாகாணத்தில் 45,000 பேரும் வட மாகாணத்தில் அதே போன்ற தொகையினர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அரச தரப்பு போர் வீரர்களின் மனைவியரும் பெருமளவில் விதவையாக்கப்பட்டுள்ளனர்.

அநாதையாக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்ததல்ல. இன்றும் கூட 1100 க்கு மேற்பட்ட, முகாம்களில் உள்ள அநாதைகளை பொறுப்பேற்க ஒரு சிறு உறவினர்களைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் இறந்துள்ளனர். அனேகர் தம் கால்கள், கைகளையும், கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், தம் நெருங்கிய அன்பு உள்ளங்களையும் இழந்துள்ளனர். நம்பிக்கையானதொரு தகவலின்படி முகாம்களில் பத்துக்கு ஒருவர் அங்கவீனர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மீன் பிடி, விவசாயம்,  பல்வேறு தொழில்கள்  பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக நிறுத்தப்பட்டும் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்ட மக்கள்  முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்த போதும் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்;தவித பாகுபாடின்றி அரசு அப் பிரதேசத்திற்கு உணவு அனுப்பியது. மக்களும் தம் சொந்த முயற்சியால் கஷ்டமின்றி வாழ்ந்தனர். அநேகர் லொறி, ட்ராக்டர், கார், பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் சைக்கிள்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். கணிசமான தொகையினர் பாற்பண்ணை, கோழிப்பண்ணை  நடத்தியதோடு பெருமளவில் விவசாயமும் மேற்கொண்டனர். இன்று இவைகள் அனைத்தும் அற்றுப் போயின.

இடம் பெயர்ந்த மக்கள் இடத்துக்கு இடம் மாறி இறுதியில் உடைமைகள், அத்தனையையும் இழந்தனர். சிலர் தமது மனைவியர், அன்பு பெற்றோர், மக்கள் ஆகியேரை இழந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்ததும், அரசால் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவேளை அவர்கள் எதுவுமற்றவர்களாகவும், உடுத்த உடையுடனும் வந்து சேர்ந்துள்ளனர். இரு மாதத்திற்குள், அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்ததன் பின், அத்தனை பேரும் பரம ஏழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட துன்பங்களை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பலாத்காரமாக எதுவித தேவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு;ள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் முகாம்களில் இருந்து தப்பி சென்று விட்டனர். 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் அப்பாவி பிள்ளைகள் 10,000 இற்கு மேற்பட்டோர் புலிகளின் சிறுவர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகளுக்காக புனர் வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று பாடசாலைகளில் கல்வி போதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கல்வியில் மிகவும் திறமைசாலிகளாக முன்னேற கூடியவர்கள். அப்பாவிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற வேளையில் உண்மையான குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.  வயதில் முதிர்ந்தோர், கர்ப்பிணி தாய்மார்கள், பிள்ளைகள், காயமுற்றோர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியாததொன்று.  அரசாங்கம் தற்போது முகாம்களில் உள்ளவர்களை பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்துவதற்காக விடுவித்து வருகின்றது. அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு போதுமான உலர் உணவு, விவசாய கருவிகள் சிலவையும், சொற்ப உதவி பணத்தொகையும் மட்டும் வழங்குவது போதுமானதல்ல. சகல இடம் பெயர்ந்தோருக்கும் அவர்களுடைய இழப்புக்களுக்கு ஏற்ப நட்டஈடு வழங்ப்பட வேண்டும். தங்களின் பங்களிப்புடனேயே இவர்கள் நட்டஈடு பெறுவது சாத்தியமாகும்.

நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்கே யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன் வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய தமது அரசிலமைப்பை உருவாக்கியுள்ளமையால் அம் மாதிரியான அமைப்புமுறை “ஒற்றையாட்சி” “சமஷ்டி” ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளை தாங்கள் ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாக கேட்டுக் கொள்கிறேன். தங்களை சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்

261009school_child_dp.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான முதலாம் கட்ட மாதிரி வினாத்தாள்களை இவ்வாரம் வழங்கவுள்ளது.

தற்போது அகதி முகாம்களிலுள்ள மக்கள் பலவிதமான தேவைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் கூட,  நீண்ட கால அடிப்படையைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற்உம் கல்விசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னேடுக்க திட்டமிட்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டது. முதற் கட்டமாக தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டும் பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை உயர்த்தும் முகமாக முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி உதவிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாகவே க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினை வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்தில் கொண்டோம்.

01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாடஅலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04. நிவாரண கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ,  வசதிகளோ இல்லாதிருந்தமை.

05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட, யுத்த சூழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக் கூடிய நிவாரண கல்விச் செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம். எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கும் 30 மாதிரிவினாத்தாள்களையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் ஐந்தையும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.  

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும்,  எமது இத்திட்டத்துக்கு லண்டனிலிருந்து 2000 பவுண்களும், கனடாவிலிருந்து 1180.00. CDN மாத்திரமே கிடைத்தன. இதனால் நாம் திட்டமிட்ட மாதிரிவினாத்தாள்களில் முதலாம் கட்ட மாதிரிவினாத்தாள்கள் ஐந்தை மாத்திரமே எம்மால் வழங்க முடியுமாக இருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களை ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதத்தின் பிரதியொன்றை கீழே தங்கள் தெளிவுக்காக இணைத்துள்ளோம். அக்கடிதப் பிரதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால்,  வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் சில முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்கள் வினாப்பத்திரங்கள் தயாரிப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அதே போல வத்தேகம கல்விப்பணிப்பாளர் திரு சிவநாதன் அவர்களும்,  எமக்கு ஆலோசணைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்.  இவ்விடத்தில் இவர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு என்பதை எமது இம்முயற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே,  ஒரு உண்மையான இலக்கை நோக்கி திட்டம் தீட்டுவதும் அதை நடைமுறைப்படுத்த முனைவதும் அர்த்தமற்ற ஒரு விடயம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறாயினும் கூட, தரம் 05 மாணவர்களுக்கு சுமார் 15ஆயிரம் பவுண் பெறுமதிமிக்க செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். ஆனால் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சுமார் 2500 பவுண் பெறுமதியான உதவிகளை அதாவது ஒரு மாணவனுக்கு சுமார் 39 பென்ஸ்  பெறுமதியான உதவிகளை மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது.

இதனையொரு தோல்வியாக நாம் கருதவில்லை. நாம் அகதி மாணவர்களுக்கு உதவ முழுமையாக முயற்சிகள் செய்தோம். எமது முயற்சியால் அம்மாணவர்களுக்கு 5 மாதிரிவினாத்தாள்கள் அனுப்புவதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகக் கொள்கின்றோம்.

மீண்டும் இவ்விடத்தில் நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன்  தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

._._._._._. 

வன்னி நிவாரண முகாம் மாணவர்களுக்கு நாம் வழங்கிய அதே மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையுமே சிந்தனை வட்டம்  அகில இலங்கை ரீதியிலும் விநியோகித்தது. அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லோ. ஸ்ரீகர்சன் அவர்களும் சிந்தனை வட்ட மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் படித்தவரே. நிவாரணக் கிராம  மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்ததும் அவற்றை பூரணமாக தங்களுக்குத் தருவோம்.

jafna-1.jpg

jafna.jpg

._._._._._. 

கடிதப்பிரதி- இணைப்பு

அதிபர் அவர்கட்கு,

வவுனியா நலன்புரிநிலையங்களில்
க.பொத. சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்தி
நிவாரண நடவடிக்கைகளில்
தங்களையும் இணைத்துக் கொள்ளல்.

2009ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி சுமார் 28இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 04 வழிகாட்டி நூல்களையும் 30 மாதிரிவினாத்தாள்களையும் தனித்தனியாக 4872 மாணவர்களுக்கு வழங்கி நலன்புரிநிலைய ஆசிரியர்கள் துணையுடன் அம்மாணவர்களை வழிகாட்டி சிறந்த முறையில் பரீட்சையை எதிர்நோக்க எமது சிந்தனைவட்டம் வழியமைத்துக் கொடுத்ததை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அதேபோல 2009 டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டியும் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தின் கீழ் கல்வி நிவாரண செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கிலுள்ள நலன்புரிநிலையங்களில் மொத்தம் 6290 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்கள் தற்போது கீழ்க்காணப்படும் நிவாரண முகாம்களில் பின்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்.

வலயம் 0 –     535 மாணவர்கள்
வலயம் 01 –   1261 மாணவர்கள்
வலயம் 02 –   1401 மாணவர்கள்
வலயம் 03 –     912 மாணவர்கள்
வலயம் 04 –     907 மாணவர்கள்
வலயம் 05 –       99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம்    156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம்    116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம்    136 மாணவர்கள்
IDP பாடசாலைகள்   583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரிநிலையம்  184 மாணவர்கள்
மொத்தம்    6290 மாணவர்கள்

பல்கலைக்கழக மட்டத்திலும் சில புத்திஜீகளுடன் இணைந்து நாம் தயாரித்த செயற்றிட்ட அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் 05 பிரதான பாடங்களை மையமாகவும் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 06 மாதிரிவினாத்தாள்களையும்,  பாட அலகு ரீதியான 42 வழிகாட்டிக் கையேடுகளையும் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

பிரதானமாக புதிய பாடத்திட்டத்திற்கமைய கணிதம், விஞ்ஞானம்,  வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும்,  ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களுக்கும் இத்தகைய மாதிரிவினாத்தாள்களையும்,  கையேடுகளையும் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தங்கள் கல்லூரியில் அனுபவமிக்க ஆசிரியர்களின் துணையுடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரித்துதர விருப்பமுள்ள மாதிரிவினாத்தாள்கள் –  குறிப்பிட்ட 05 பாடங்களுக்குமான கையேடுகள் அல்லது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான குறிப்புகள் காணப்படின் அவற்றின் புகைப்படப் பிரதிகள் ஆகியவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் எமது கல்வி அபிவிருத்தி சபையின் வழிகாட்டலுடன் அவற்றை வடிவமைத்து நலன்புரிநிலைய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.

எனவே,  சுமார் 06 மாதங்களுக்கு மேல் பாடசாலை மண்ணையே மிதிக்காத நிலையில் சகலதையும் இழந்து, மிகவும் சிரமங்களின் மத்தியில் கல்வியைக் கற்றுவரும் அகதிமுகாம் மாணவர்களுக்கு இந்த சிறு உதவியை செய்யுமிடத்து அவர்களுக்கான மாபெரும் உதவியாக இருக்கலாம்.

எனவே,  இது விடயமாக கரிசனைக் காட்டி தங்கள் கல்லூரியில் திறமை வாய்ந்த,  அனுபவமிக்க ஆசிரியர்களினூடாக தயாரிக்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள்,  பாட அலகு ரீதியான கையேடுகள் இருப்பின் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பீர்களாயின் பேருதவியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களிலும், கையேடுகளிலும் உரிய ஆசிரியர் பெயர்,  பாடசாலை முகவரி ஆகியவற்றையும் பிரசரித்தே வழங்குவோம்.

சேவைநல நோக்கில் – பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காக உதவும் இத்திட்டத்திற்கு மேற்குறித்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

மாதிரிவினாத்தாள்களையும், கையேடுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:

KALAPOOSHANAM  P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA  MADIGE,
UDATALAWINNA – 20802

மிக்கநன்றி
தங்கள்

கையொப்பம் -கலாபூசணம் புன்னியாமீன்
(சிந்தனைவட்டம்)
02.09.2009

மேலதிக வாசிப்புக்கு
http://thesamnet.co.uk/?p=17063

எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்! : கப்பல் அகதிகளின் கோரிக்கை.

Tamil_Boat_Refugeesகடந்த அறுபது வருட காலமாகச் சிங்கள பௌத்த இனவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாகி வரும் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக இயங்க உலகின் எந்த அரசும் சரியான முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மனித உரிமை மீறல்களைச் செய்து வந்த இலங்கை அரசின் இனவாதத்தின் உச்சக்கட்டமாக அண்மையில் நடைபெற்ற யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் காவு கொண்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். பலர் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையுமே இழந்துள்ளார்கள். கல்வி உரிமைகளை இழந்துள்ள சிறுவர்கள், தம் வாழ்வியல்புகளை இழந்த பல உறவுகள் என்று தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காது.

யுத்தம் முடிவுற்றதாக அரசு கூறிவரும் நிலையில் 250 000க்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் அகதிமுகாம் என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில் படும் கோரக் காட்சிகளை கண்டு உலகமே இன்று அதிர்ந்து போயுள்ளது. கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் இன்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் அழிக்கப்படுகின்றார்கள்.

அவர்களது வாக்குமூலம்:

உறவுகளையும் வாழ்வியல்புகளையும் இழந்து பாதிப்புற்ற நாம் எம் உயிரையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை நாட்டை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்து மற்றும் வாழ் உரிமைகளை வழங்கும் நாடு அவுஸ்திரேலியா என்ற நம்பிக்கையில் அந்நாடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த 11-10-2009 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு எமது பயணம் திசைமாற்றப்பட்டு இந்தோனேசியாவில் அமைந்துள்ள மேராக் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். ஆறு மாதக் குழந்தை முதல் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட அறுபத்தாறு வயதுள்ளவர் வரை கடலில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு கிழமைகளாக உலகின் ஒரு நாடாவது எம்மை ஏற்றுக்கொள்ளாதா என்று காத்திருக்கிறோம்.

பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழக் கூடியதாகவும் மற்றும் 400க்கும் மேற்பட்ட மொழிகள் பழக்கத்தில் உள்ளதாகவும் இருக்கும் இந்தோனேசியாவில் சிறுபான்மை மொழிகள்கூட தேசிய மொழியாக இருப்பது போன்ற ஜனநாயக முறைகள் பழக்கத்தில் உள்ளதை அறிந்து எமது ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். எவ்வித குற்றங்களையும் புரியாது அகதிகளாக வந்த எம்மை தடுப்பு காவலில் வைக்க முயல்வது எம்மை மட்டுமல்லாது எமக்கு ஆதரவு தரும் தமிழ் பேசும் முழுச்சமூகத்தையுமே துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உரிமைகள் மறுக்கப்பட்டு உறவுகள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தேடிச்செல்வது எம்மை தடுப்பு காவலில் வைக்காது எமது இளையோரின் கல்வி உயிருக்கு உத்தரவாதம் மற்றும் இதர உரிமைகளை வழங்கக்கூடிய ஒரு நாட்டையே.

ஏதாவது ஒரு அரசு எமது துயர நிலையை அறிந்து ஜக்கிய நாடுகள் சபை மூலம் அல்லது ஏதாவது ஒரு முறையில் ஆவனை செய்யும்வரை நாம் கப்பலை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது தேவைகளையும் அவலத்தையும் உணர்ந்து எமது உரிமைகளை வழங்கக்கூடிய அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு எம்மை ஏற்றுக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு கப்பலிற் காத்திருக்கிறோம்.

· இந்தோனேசிய, அவுஸ்திரேலிய வாழ் மக்கள் மற்றும் அங்குள்ள தொழிற் சங்கங்கள் மனித உரிமை அமைப்புக்கள் பென்கள் அமைப்புக்கள் தயுவுசெய்து எமது துயர் அறிந்து எமது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம்.

· மனித உரிமைக்காக குரல்கொடுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் உலகெங்கும் இருக்கும் அமைப்புக்கள் எமக்கு முடிந்தளவு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

· தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் வாழும் எமது சகோதர சகோதரிகளிடமும் எம்மைப் போலவே இலங்கை அரசின் அடக்குமுறைக்கு பலியாகி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களை எங்களுக்காக குரல்கொடுக்கும்படியும் உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம்.

எமது குரல் கேட்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எமக்கு ஆதரவு கோரி வரும் திங்கள் 26-10-2009 அன்று கப்பலில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். எமக்கு வேறுவழி தெரியவில்லை. நாம் எமது இந்தக் கோரிக்கையைத் தமிழ் ஒருங்கமைப்பு மூலமாகவும், தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு மூலமாகவும் உங்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

._._._._._.

Tamil_Boat_Refugeesஇந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கைத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒக்ரோபர் 10ல் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டது. அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இவர்கள் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டதை அடுத்து அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுமதிக்க வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் இந்தோனேசியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே இக்கப்பல் அகதிகளின் விபரங்களைத் திரட்டி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு ஒக்ரோபர் 18ல் அறிவித்து இருந்தது.

தங்களுக்கு ஏதாவது நாடு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று கோரி கப்பலில் இருந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் அவரகள் உண்ணாவிரதத்தை பின்னர் கைவிட்டனர். இம்மக்களுடைய கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கக் கோரி லண்டணில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது பற்றிய விடியோச் செய்தி: http://www.youtube.com/watch?v=Qbr5kgJK3_E

இது பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:

Continued Persecution of Tamil Speaking People must STOP.

Protest Called by Tamil Solidarity

Tamil_Boat_RefugeesTamil-speaking refugees on a boat off the Indonesian coast have contacted Tamil Solidarity. Their continued suffering and the denial of their rights demands an urgent response.

Join the Tamil Solidarity protest

Monday 26 October 2009 – 4:00 pm

Australia House, Strand, London W2B 4LA

War and Aftermath:
Over the last year the brutal oppression of the Tamil-speaking people in Sri Lanka by the Sinhala nationalist government has reached new levels of horror. Under the Rajapakse regime these people have faced an unending nightmare. It is estimated that over 20,000 people were killed in the last week of the war alone.

Since the government declared the end of the war in May 2009 over 300,000 people have been forcefully detained in concentration-style camps and denied the right to return to their homes.

It is estimated that among those incarcerated, without proper access to shelter, food and medicine, are 31,000 children. While the government was prepared to pour an estimated $5 million per day into its vicious war effort, little is spent to protect those in the camp against the oncoming monsoon floods which threaten a humanitarian catastrophe.

While around the world the Tamil diaspora conducted a ferocious anti-war campaign, governments in the west and in Asia remained deaf to the suffering of the Tamil-speaking people in Sri Lanka, preferring to maintain trade links with and sell arms to the Sri Lankan government.

Suffering Continues:
Now, forced by these horrendous conditions, a small number of Tamil-speaking people have managed to escape. Around the world there will be shock and anger to hear that these people, who have seen their families massacred, have so far been denied the refuge they seek.

Over 250 Tamil-speaking people remain on a boat in Merak harbour, Indonesia. 207 Sri Lankan asylum-seekers are held at the Immigration Detention Centre at Kuala Lumpar International Airport, and there are 108 Sri Lankan refugees detained at Pekan Nanas Immigration Detention Centre in Malaysia. After Canadian authorities intercepted a ship the 76 men on board were taken to jail for questioning.

Not only have these governments not acted decisively to assist the traumatised Tamil-speaking people, but they have extended their detention. That it has been suggested they be returned to Sri Lanka, to the situation they have fled, is a further indictment of the international ruling elite who has no interest in acting in the interests of ordinary people.

Solidarity Needed:
Tamil Solidarity has been in contact with the people on the boat in Merak harbour and calls for immediate solidarity action to assist their appeal for refuge. We call for a protest outside the Australian embassy in London and other countries to expose the rotten role of this government. It is clear that it is actions like this, of ordinary people in the Tamil diaspora and all communities in the trade unions, universities, schools and colleges, that are required to build a movement against the camps, against the racist discrimination against refugees and against governments who stand in the interests of big business and the rich no matter the consequences for ordinary people.

Tamil Solidarity:
For the rights of all workers and oppressed people in Sri Lanka.

Contact Senan on 07908050217 or on senan@tamilsolidarity.org

Related News: APPEAL FROM TAMIL PEOPLE FROM THE BOAT HELD AT MERAK ON THE NORTH-WESTERN TIP OF JAVA, INDONESIA : Tamil People from the boat

APPEAL FROM TAMIL PEOPLE FROM THE BOAT HELD AT MERAK ON THE NORTH-WESTERN TIP OF JAVA, INDONESIA : Tamil People from the boat

Tamil_Boat_RefugeesThis appeal has been communicated via Tamil Solidarity and Committee for Workers International (CWI).We will be sending more information of further action soon.

Call Senan on  07 90 80 50 217 or 07 90 80 50 217 : www.tamilsolidarity.org

255 held from 10 October by Indonesia authorities after leaving Malaysia.

We took to the sea to escape Malaysia, where we were not given asylum after fleeing Sri Lanka. After hellish days at sea, full of fear and uncertainty on our small boat, we are all suffering from fatigue and are very depressed that still our lives are hanging in the balance.

There are no real facilities in the boat. We all are sharing just one toilet for example. 17 children among us are suffering from malnutrition. Majority of us are very frustrated and pushed to the edge of life. Numbers of refugees have already threatened to jump off the board into the sea.

Tamil_Boat_RefugeesWe have suffered enough at the hands of the Sri Lankan government. Our life so far has been wasted by the war. We were forced to escape as a result of the horrific attacks on Tamil-speaking people in Sri Lanka. Thirty year long war in Sri Lanka had devastated our lives. International governments, who refused to protect the lives, were also responsible for the death of thousands. The Sri Lankan government is still holding 250,000 Tamils in small camps in horrific conditions. There is no way we want to go back to that horrendous life. Return to Sri Lanka will mean being returned to hell and all our lives will be in danger.

We have wasted half of our lives for war and in the camps. All we demand is a right to have a decent life with basic democratic rights including right to education for our kids. We are determined not to waste rest of our life in another detention camp which denies us our fundamental rights. There are other Sri Lankan refugees living in Indonesia who are not given their full democratic rights. We also believe that Indonesian government using us to meet their political aims with Australia and with some aid agencies. With no trust that Indonesian government will respect our rights we refuse to come out of the boat. We appeal to Indonesian masses to understand our plea and support us.

We are also very disappointed to learn that Australian prime minister Kevin Rudd made a phone call to Indonesia’s president Susilo Bambang Yudhoyono to stop our boat and keep us away from Australia. We are harmless peaceful people who are trying to save our lives and asking our fundamental rights to be respected. We pose no threat. We have stopped our hunger strike with the belief that our plea will be listened to. However we are determined to continue to stay in the boat until our demands for basic rights are respected. In that respect we are disappointed with UN which should be standing on our site negotiating a better life for us. We appal to the UN and its general secretary Ban Ki-Moon to take necessary steps immediately.

All we demand is a better life that all human beings deserve in the world. We won’t get off the boat until any country that can provide our rights comes forward to take us.

Tamil People from the boat held at Merak.