கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-

24-moammar-gadhafi.jpgகாஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது. பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை  நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல. பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

இன்று சம்பியன் கிண்ணத்தின் மூன்றாவது ஆட்டம் – South Africa won by 5 wickets

240909new-vs-sa.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான ‘பி’ பிரிவின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து -தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  பகல் நேர ஆட்டமாக தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் ஸ்கோர் விபரம் கீழே தொகுத்துத் தரப்படுகிறது.

South Africa won the toss and elected to field

ICC Champions Trophy – 3rd Match, Group B
ODI no. 2895 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion
24 September 2009 (50-over match)
Umpires Aleem Dar (Pakistan) and Asad Rauf (Pakistan)
TV umpire DJ Harper (Australia)
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire IJ Gould (England)

New Zealand innings 

BB McCullum†  c Duminy b Botha  44 
 JD Ryder  c van der Merwe b Parnell  8 
 MJ Guptill  c Amla b Parnell  21 
 LRPL Taylor  lbw b Parnell  72 
 GD Elliott  b van der Merwe  39
 NT Broom  lbw b van der Merwe  1 
 GJ Hopkins  c Duminy b Parnell  13 
 KD Mills  c de Villiers b Steyn  0 
 DL Vettori*  not out  1
 DR Tuffey  c Duminy b Parnell  4
 SE Bond  c de Villiers b Steyn  0 
 Extras (b 4, lb 5, w 1, nb 1) 11     
      
Total (all out; 47.5 overs) 214 (4.47 runs per over)
Fall of wickets1-12 (Ryder, 3.6 ov), 2-58 (Guptill, 12.6 ov), 3-92 (McCullum, 23.1 ov), 4-163 (Elliott, 38.6 ov), 5-171 (Broom, 40.5 ov), 6-203 (Hopkins, 44.6 ov), 7-204 (Mills, 45.5 ov), 8-209 (Taylor, 46.3 ov), 9-213 (Tuffey, 46.5 ov), 10-214 (Bond, 47.5 ov) 
        
 Bowling
 DW Steyn 9.5 1 32 2
 WD Parnell 8 0 57 5
 JH Kallis 8 0 24 0
 JA Morkel 3 0 13 0 
 J Botha 9 1 44 1
 RE van der Merwe 10 1 35 2

South Africa innings (target: 215 runs from 50 overs)
 
GC Smith*  c Vettori b Tuffey  7
HM Amla  lbw b Vettori  38
 JH Kallis  c †McCullum b Bond  36 
 AB de Villiers  not out  70
 JP Duminy  c †McCullum b Mills  11
 MV Boucher†  c †McCullum b Tuffey  28
JA Morkel  not out  19  
Extras (lb 2, w 4, nb 2) 8     
      
Total (5 wickets; 41.1 overs) 217 (5.27 runs per over)
Did not bat J Botha, RE van der Merwe, DW Steyn, WD Parnell 
Fall of wickets1-22 (Smith, 5.6 ov), 2-74 (Kallis, 16.3 ov), 3-108 (Amla, 23.2 ov), 4-138 (Duminy, 26.5 ov), 5-180 (Boucher, 35.5 ov) 
        
 Bowling
 KD Mills 8.1 0 45 1
 SE Bond 10 0 51 1
 DR Tuffey 9 1 52 2 
 DL Vettori 10 1 34 1 
 JD Ryder 2 0 15 0  
 MJ Guptill 1 0 13 0  
 GD Elliott 1 0 5 0

Player of the match WD Parnell (South Africa)

மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

malaysia.jpgமலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது.  28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா  உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.

2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

கலாமுக்கு மீரட் பல்கலையின் கெளரவ டாக்டர் பட்டம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மீரட்டில் உள்ள செளத்ரி சரன்சிங் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கே.காக் கூறுகையில், கூறுகையில், பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழா நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படும் என்றார்.

விண்ணில் பாய்ந்தது ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்

230909ossaan.jpgகடல் ஆய்வு, கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி 14 செலுத்து வாகனம் (ராக்கெட்) ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளையும், 6 சிறியரக (நானோ) செயற்கைக்கோள்களையும் தாங்கிக் கொண்டு, சரியாக நேற்று நண்பகல் 11.53 மணிக்கு விண் வட்டப்பாதையை நோக்கி பாய்ந்தது.

ஜூவாலையைக் கக்கிக் கொண்டு விண்ணில் பயணித்த பி.எஸ்.எல்.வி. திட்டமிட்டபடி விண்வட்ட நீள் பாதையில் எட்டியதும் ஒவ்வொரு செயற்கைக் கோள்களாக புவிச் சுழற்சிப் பாதையில் துல்லியமாகச் செலுத்தியது. செயற்கைகோள்கள் அனைத்தும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் டாக்டர் ஜி. மாதவன் நாயர் உட்பட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாட்டுப் பயன்களைத் தொடரவும், புதிய பயன்பாடுகளுக்காகவும் 960 கிலோ எடை கொண்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. 720 கி.மீ. எஸ்.எஸ்.ஓ விண்வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை: இந்தியா மீண்டும் முதலிடம்

sep-14-2009-india.jpgசர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் ஒருநாள் அணிகளுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் தென்ஆப்ரிக்க அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் கோலகலமாகத் துவங்கியது. பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான தோல்வியின் காரணமாக ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்ரிக்க அணி (123 புள்ளிகளுடன்) தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் 2வது இடத்தில் இருந்த இந்தியா (126 புள்ளிகள்) முதலிடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த ஆஸ்ட்ரேலியா (125 புள்ளி) 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

சாம்பியன்ஸ் கோப்பை : 2nd Match – Pakistan won by 5 wickets

west-indies.jpgஇன்று இரண்டாவது ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மேற்கிந்தியஅணிகள் மோதுகின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக (ஏ, பி) பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, இலங்கை, நியூஸீலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று நடக்கும் பாக்கிஸ்தான் மேற்கிந்திய அணிகளுக்கியிலான  போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

West Indies won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Match, Group A
ODI no. 2894 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
23 September 2009 – day/night (50-over match)

Umpires SJ Davis (Australia) and DJ Harper (Australia)
TV umpire SJA Taufel (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire BF Bowden (New Zealand

 West Indies innings (50 overs maximum)
 DM Richards  c & b Mohammad Aamer  01
ADS Fletcher  c Imran Nazir b Naved-ul-Hasan  07
 DS Smith  c Umar Akmal b Umar Gul  18 
 TM Dowlin  c †Kamran Akmal b Mohammad Aamer  00 
 FL Reifer*  c Misbah-ul-Haq b Umar Gul  07 
 DE Bernard  b Mohammad Aamer  06
  DJG Sammy  b Saeed Ajmal  25
 CAK Walton†  lbw b Umar Gul  00 
 NO Miller  c Shoaib Malik b Shahid Afridi  51 
 TL Best  st †Kamran Akmal b Saeed Ajmal  08 
 GC Tonge  not out  4
 
 Extras (w 5, nb 1) 6     
      
Total (all out; 34.3 overs) 133 (3.85 runs per over)
Fall of wickets1-2 (Richards, 0.6 ov), 2-11 (Fletcher, 3.6 ov), 3-14 (Dowlin, 4.5 ov), 4-36 (Smith, 10.3 ov), 5-43 (Bernard, 13.3 ov), 6-47 (Reifer, 14.3 ov), 7-47 (Walton, 14.4 ov), 8-85 (Sammy, 24.5 ov), 9-121 (Best, 31.1 ov), 10-133 (Miller, 34.3 ov) 
        
 Bowling
 Mohammad Aamer 7 1 24 3 
 Naved-ul-Hasan 7 0 26 1 
 Umar Gul 8 2 28 3 
 Shahid Afridi 8.3 0 39 1 
 Saeed Ajmal 4 0 16 2 
   
Pakistan innings (target: 134 runs from 50 overs)

 Imran Nazir  b Tonge  5
 Kamran Akmal†  c †Walton b Tonge  5
 Shoaib Malik  c †Walton b Tonge  23 
 Mohammad Yousuf  c †Walton b Tonge  23
 Misbah-ul-Haq  c †Walton b Bernard  6 
 Umar Akmal  not out  41
 Shahid Afridi*  not out  17  
 Extras (lb 2, w 9, nb 3) 14     
      
Total (5 wickets; 30.3 overs) 134 (4.39 runs per over)
Did not bat Naved-ul-Hasan, Mohammad Aamer, Umar Gul, Saeed Ajmal 
Fall of wickets1-5 (Imran Nazir, 1.1 ov), 2-21 (Kamran Akmal, 5.1 ov), 3-54 (Shoaib Malik, 13.3 ov), 4-61 (Mohammad Yousuf, 15.1 ov), 5-76 (Misbah-ul-Haq, 22.3 ov) 
        
 Bowling
 DJG Sammy 7 0 29 0  
 GC Tonge 10 3 25 4 
 TL Best 6.3 0 50 0  
  DE Bernard 7 0 28 1

Pakistan won by 5 wickets

நளினி- ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்

nalini-111.jpgராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்று காலை உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே போன்று, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இவர் ராஜீவ் ‌கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பி‌டத்தக்கது

காஸ்பரோவ்- கார்போவ் மீண்டும் பலப்பரீட்சை

செஸ் ஜாபவான்களான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் அனாடோலி கார்போவ் இருவரும் வாலென்சியா நகரில் இன்று துவங்கும் செஸ் போட்டியில் மோதுகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு இடையே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர், 5 மாதங்களாக நடந்தது.  இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால், வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்தத் செஸ் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செஸ் ஜாம்பவான் யார் என்பதை நிரூபிக்க இருவரும் மீண்டும் விளையாடுகின்றனர். இப்போட்டி ஸ்பெயினின் வாலென்சியா நகரில் இன்று துவங்குகிறது.

இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காஸ்பரோவ் பேசுகையில், “சர்வதேச தர செஸ் விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்பரோவை எதிர்த்து விளையாட உள்ள கார்போவுக்கு தற்போது 58 வயதாகிறது. எனவே, காஸ்பரோவின் நகர்த்தலுக்கு கார்போவால் ஈடுகொடுக்க முடியாது என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.