கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சம்பியன் கிண்ணம் 7 ஆவது போட்டி. New Zealand won by 38 runs

270909n-s.bmpசம்பியன் கிண்ணத்துக்கான 7 வது போட்டி இன்று இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையில் பகல்நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்’போட்டி இரண்டணிகளுக்கும் முக்கியத்துவமிக்க போட்டியாகையால் இன்றைய போட்டி மிகவும் விருவிருப்பாக அமையுமென விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Sri Lanka won the toss and elected to field

ICC Champions Trophy – 7th Match, Group B
ODI no. 2899 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
27 September 2009 (50-over match)

Umpires IJ Gould (England) and DJ Harper (Australia)
TV umpire Aleem Dar (Pakistan)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SJA Taufel (Australia)

New Zealand 315/7 (50.0 ov)

New Zealand innings (50 overs maximum)
 BB McCullum†  c Dilshan b Mathews  46 
 JD Ryder  c †Sangakkara b Kulasekara  74 
 MJ Guptill  b Malinga  66
 LRPL Taylor  c Jayawardene b Jayasuriya  4 
 GD Elliott  lbw b Mathews  0
 NT Broom  c Jayawardene b Jayasuriya  15 
 DL Vettori*  c sub (CK Kapugedera) b Jayasuriya  48 
 JEC Franklin  not out  28
 KD Mills  not out  18
 
 Extras (b 3, lb 2, w 8, nb 3) 16     
      
Total (7 wickets; 50 overs) 315 (6.30 runs per over)
To bat DR Tuffey, SE Bond 
Fall of wickets1-125 (Ryder, 19.6 ov), 2-128 (McCullum, 21.5 ov), 3-133 (Taylor, 22.5 ov), 4-140 (Elliott, 23.5 ov), 5-161 (Broom, 30.2 ov), 6-230 (Vettori, 41.4 ov), 7-284 (Guptill, 47.6 ov) 
        
 Bowling
 KMDN Kulasekara 7 0 52 1
 T Thushara 7 0 50 0
 SL Malinga 10 0 85 1 
 BAW Mendis 9 1 49 0
 AD Mathews 6 0 33 2
 ST Jayasuriya 10 0 39 3 
 SHT Kandamby 1 0 2 0  
   
 Sri Lanka innings (target: 316 runs from 50 overs)

TM Dilshan  c sub (JS Patel) b Mills  41
 ST Jayasuriya  c Mills b Tuffey  24
 KC Sangakkara*†  c Taylor b Franklin  11
 DPMD Jayawardene  not out  19
 TT Samaraweera  c Broom b Vettori  18 
 SHT Kandamby  run out (Vettori/Elliott)  11 
 AD Mathews  c Guptill b Franklin  2 
 KMDN Kulasekara  not out  57 
 T Thushara  c Guptill b Mills  11 
 SL Malinga  c Taylor b Mills  15 
 BAW Mendis  c Vettori b Tuffey  3
 Extras (lb 2, w 5, nb 1) 8     
      
 Total (all out; 46.4 overs) 277 (5.93 runs per over)
Fall of wickets1-66 (Jayasuriya, 7.5 ov), 2-67 (Dilshan, 8.5 ov), 3-85 (Sangakkara, 12.3 ov), 4-114 (Samaraweera, 18.4 ov), 5-137 (Kandamby, 24.3 ov), 6-141 (Mathews, 27.2 ov), 7-219 (Jayawardene, 38.2 ov), 8-243 (Thushara, 42.1 ov), 9-262 (Malinga, 44.6 ov), 10-277 (Mendis, 46.4 ov) 
        
 Bowling
 KD Mills 10 0 69 3
SE Bond 9 0 82 0  
 DR Tuffey 8.4 1 39 2
JEC Franklin 9 0 40 2
DL Vettori 10 0 45 2

Player of the match DL Vettori (New Zealand)
 

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) – புன்னியாமீன்

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா நாள்  (World Tourism Day)  உலக சுற்றுலா நிறுவனத்தின்  (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுற்றுலாத்துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தின் (IUOTO) 1925 இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாக உலகச் சுற்றுலா நிறுவனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதற்கான யாப்பு 1970 செப்டெம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய (IUOTO) நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக,  கலாசார,  அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகின் பல்வேறு இடங்களில்,  பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுற்றுலா நாளின் பிரதான கருப்பொருள் சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும்,  எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும்,  அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும்,  மதிக்கவும் உதவுதலும் இவற்றினூடாக சுற்றாடலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.

அக்டோபர்,  1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: இதற்கமைய 2006 இல் ஐரோப்பாவிலும், 2007இல் இலங்கையிலும், 2008இல் அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டன. 2009இல் ஆபிரிக்காவில் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: “சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன” (Tourism opens doors for women). என்பதாகும்.

சுற்றுலா என்பதைத் வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும்,  ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும்  சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது.

வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும் போது போக்குவரத்து,  தொலைதொடர்பு.  விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கையைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலை தூக்கியதும் படைவீரர்கள்,  வணிகர்கள்,  சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டு பிற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை பெற்றனர்.

வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர் உணவுக்காவும்,  உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணிகள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி,  அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல் தங்குமிட வசதிகள் உணவு,  பாண வகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு,  காடுகள்,  வனாந்திரம்,  வன ஜீவராசிகள்,  பறவைகள்,  கடற்கரைகள்,  சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள்  (Crystala) மலைத்தொடர்,  நீர்வீழ்ச்சி,  மாணிக்கம்,  தோட்டங்கள்,  பூஞ்சோலைகள்,  அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.

சுற்றுலாவுக்கு,  இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று நேரம் மற்றையது பணம் என்று பசுபிக் ஏசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து தீவிர சேவையின் பின்னர் இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால ஐ.பி.எஸ்.ஸிடம் கூறினார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை. பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்று அவர் விளக்கி கூறினார். மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால்,  உயர்மட்ட செல்வத்தை அடையும் அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக,  உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.

கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள்,  புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா,  சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில்,  எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.

நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால்,  சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும்  பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத,  கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள்  அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

ஹோட்டல் கழிவுகள்,  நீர்மாசமடைதல்,  சட்டவிரோத குடிசைகளும்,  விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா,  கடற்கரைச் சிறுவர்கள்,  போதைவஸ்து பாவனையும் கடத்தலும்,  அந்நியரின் அரைநிர்வாணப்பவனி,  கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை,  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள்,  பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும். 

இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த  காலம் இன்று மாறி விட்டது. அதே  வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும்.  இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு  வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.  உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)

பர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க ஆங் சான் சூச்சி யோசனை

270909suukyi.jpgபர்மா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது தொடர்பில் பர்மீய இராணுவ தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாக ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு சீரமைப்புகளை கொண்டு வரும் முகமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக செயற்பட்டார் ஆங் சான் சூச்சி.

முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் பர்மா தொடர்பான தன்னுடைய கொள்கையில் மாற்றம் இருப்பதாக அமெரிக்கா கூறியது.

தாங்கள் விதித்துள்ள தடைகள் போதுமானதாக இல்லை என குறிபிட்ட ஒபாமா அரசு, பர்மிய இராணுவத்துடன் நேரிடையாக பேசப்போவதாக கூறியது.

பெளத்த மத குருக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பர்மிய இராணுவத்தால் அடக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

சம்பியன் கிண்ணம் 6 ஆவது போட்டி : Pakistan won by 54 runs

sep-14-2009-india.jpgசம்பியன் கிண்ணத்துக்கான 6 வது போட்டி இன்று இந்தியா – பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் பகல் இரவு நேர ஆட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

6th Match, Group A: India v Pakistan at Centurion – Sep 26, 2009

Pakistan won the toss and elected to bat

Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Harbhajan Singh b Nehra  20
 Kamran Akmal†  b Nehra  19 
 Younis Khan*  c †Dhoni b Singh  20 
 Shoaib Malik  c Pathan b Harbhajan Singh  128 
 Mohammad Yousuf  b Nehra  87 
 Shahid Afridi  c †Dhoni b Pathan  4 
 Umar Akmal  c †Dhoni b Nehra  0 
 Naved-ul-Hasan  not out  11  
 Umar Gul  c Raina b Sharma  0 
 Mohammad Aamer  c Kohli b Sharma  0
 Saeed Ajmal  not out  0
 Extras (lb 1, w 12) 13     
      
 Total (9 wickets; 50 overs) 302 (6.04 runs per over)
Fall of wickets1-29 (Imran Nazir, 4.2 ov), 2-53 (Kamran Akmal, 8.5 ov), 3-65 (Younis Khan, 14.4 ov), 4-271 (Mohammad Yousuf, 45.6 ov), 5-278 (Shahid Afridi, 46.6 ov), 6-289 (Umar Akmal, 47.5 ov), 7-300 (Shoaib Malik, 48.6 ov), 8-301 (Umar Gul, 49.3 ov), 9-302 (Mohammad Aamer, 49.5 ov) 
        
 Bowling
 A Nehra 10 0 55 4
 RP Singh 9 1 59 1
 I Sharma 8 2 39 2
 V Kohli 3 0 21 0
 YK Pathan 10 0 56 1
Harbhajan Singh 10 0 71 1   

India innings (target: 303 runs from 50 overs)
 
 G Gambhir  run out (Younis Khan)  57 
 SR Tendulkar  c †Kamran Akmal b Mohammad Aamer  8 
 R Dravid  run out (Umar Gul/†Kamran Akmal)  76 
 V Kohli  c Umar Gul b Shahid Afridi  16 
 MS Dhoni*†  lbw b Shahid Afridi  3
 SK Raina  lbw b Saeed Ajmal 
 YK Pathan  c sub (Misbah-ul-Haq) b Mohammad Aamer  5 
 Harbhajan Singh  b Saeed Ajmal  13 
 RP Singh  c Mohammad Yousuf b Naved-ul-Hasan  2
 I Sharma  b Naved-ul-Hasan  0 
 A Nehra  not out  0 
Extras (lb 4, w 11, nb 7) 22     
      
Total (all out; 44.5 overs) 248 (5.53 runs per over)
Fall of wickets1-23 (Tendulkar, 4.1 ov), 2-90 (Gambhir, 13.5 ov), 3-126 (Kohli, 21.3 ov), 4-133 (Dhoni, 23.5 ov), 5-205 (Raina, 34.6 ov), 6-218 (Pathan, 38.2 ov), 7-238 (Dravid, 41.6 ov), 8-243 (Singh, 43.4 ov), 9-244 (Sharma, 43.6 ov), 10-248 (Harbhajan Singh, 44.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 Mohammad Aamer 8 0 46 2 
 Naved-ul-Hasan 9 0 48 2
 Umar Gul 6 0 55 0 
  Saeed Ajmal 8.5 0 31 2
Shahid Afridi 10 0 39 2
 Shoaib Malik 3 0 25 0  

 Player of the match Shoaib Malik (Pakistan)
 Pakistan won by 54 runs

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் – 2 விமானங்கள் ரத்து

26-air-india.jpgஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம் சமீபத்தில் ஓய்ந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உற்பத்தியுடன் கூடிய போனஸில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதற்கு விமானிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து விமானிகளில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று டெல்லியிலிருந்து மும்பை மற்றும் காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காபூல் செல்ல வேண்டிய பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விமானிகள்  சங்க பிரதிநிதி கேப்டன் பல்லா கூறுகையில், ஊதியக் குறைப்பு காரணமாக எந்த பைலட்டுமே வேலை பார்க்கும் மன நிலையில் இல்லை. எனவே யாரும் வேலை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 எக்சிகியூட்டிவ் விமானிகள் உள்ளனர்

சம்பியன் கிண்ணம் 5ஆவது போட்டி : Australia won by 50 runs

260909-aus.jpgசம்பியன் கிண்ணத்துக்கான 5வது போட்டி இன்று அவுஸ்திரேலியா மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான பகல் நேர ஆட்டமாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களை தொகுத்துத் தர தேசம்நெட் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

260909untitled.bmpICC Champions Trophy – 5th Match, Group A
ODI no. 2897 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
26 September 2009 (50-over match)

West Indies won the toss and elected to field

Umpires Asad Rauf (Pakistan) and AL Hill (New Zealand)
TV umpire BF Bowden (New Zealand)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire Aleem Dar (Pakistan)

Australia innings (50 overs maximum)
 SR Watson  b Roach  0 1
 TD Paine†  c †Walton b Bernard  33 
 RT Ponting*  st †Walton b Miller  79 
 MEK Hussey  c Fletcher b Bernard  6
 CJ Ferguson  b Roach  20 
 CL White  b Miller  4 
 JR Hopes  c †Walton b Sammy  5 
 MG Johnson  not out  73  
 B Lee  run out (†Walton)  25 
 NM Hauritz  not out  7
 Extras (lb 8, w 10, nb 5) 23     
      
Total (8 wickets; 50 overs) 275 (5.50 runs per over)
To bat PM Siddle 
Fall of wickets1-0 (Watson, 0.1 ov), 2-85 (Paine, 19.1 ov), 3-120 (Hussey, 25.2 ov), 4-148 (Ponting, 30.3 ov), 5-162 (White, 34.5 ov), 6-164 (Ferguson, 35.3 ov), 7-171 (Hopes, 39.2 ov), 8-241 (Lee, 47.6 ov) 
        
 Bowling O M R W Econ  
 KAJ Roach 10 0 73 2
GC Tonge 10 1 54 0 
 DE Bernard 10 0 63 2
NO Miller 10 1 24 2 

West Indies innings (target: 276 runs from 50 overs)
 DS Smith  c †Paine b Siddle  17
 ADS Fletcher  run out (Johnson)  54 
 TM Dowlin  c †Paine b Lee  55
 CAK Walton†  b Hopes  0
 FL Reifer*  c Hauritz b Watson  28
 DE Bernard  b Siddle  8 
 DJG Sammy  c Hussey b Watson  20 
 NO Miller  c Ponting b Hauritz  4 
 KAJ Roach  c Johnson b Hauritz  3 
 GC Tonge  not out  0
DM Richards  absent hurt  –     
 
 Extras (lb 19, w 16, nb 1) 36     
      
 Total (all out; 46.5 overs) 225 (4.80 runs per over)
Fall of wickets1-38 (Smith, 5.4 ov), 2-124 (Fletcher, 24.3 ov), 3-128 (Walton, 25.2 ov), 4-170 (Dowlin, 36.4 ov), 5-187 (Bernard, 39.1 ov), 6-215 (Sammy, 44.1 ov), 7-219 (Reifer, 44.5 ov), 8-225 (Miller, 46.4 ov), 9-225 (Roach, 46.5 ov) 
        
 Bowling
 B Lee 8 0 41 1 
 PM Siddle 8 1 37 2
 MG Johnson 10 0 44 0 
 SR Watson 7 0 34 2
 NM Hauritz 7.5 0 23 2
 JR Hopes 6 1 27 1 

 Player of the match MG Johnson (Australia

Australia won by 50 runs

 

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் – புன்னியாமீன்

piercing-the-ears.jpgசெப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. செவிப்புலனற்றோர் மீது கருணை காட்டுவதன் ஊடாக அவர்களுக்கு வேண்டிய சில நிவாரண ஏற்பாடுகளை செய்வதற்காக வேண்டியும் அவர்கள் மீது நம்பிக்கைகளை உருவாக்குவதற்காக வேண்டியும் இத்தினத்தை நலன் புரி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

செவி அல்லது காது என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மனித இனத்தின்  உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகவே பேச்சு உள்ளது. இந்தப் பேச்சினை செவிமடுப்பதன் ஊடாகவே  கருத்துப் பரிமாற்றம் முழுமையடைகின்றது. எனவே ஒலியை உணரக்கூடிய திறனே கேட்டல் எனப்படுகிறது. செவிப்புலனில் செயல்பாடு குறைதல் அல்லது செவிப்புலனில் செயல்பாடு அற்றுப் போதல் காரணமாகவே கேட்பதில் குறைபாடு ஏற்பட்டு செவிட்டு நிலைமை உருவாகின்றது.

மீன் தொடக்கம் மனிதர் வரை முள்ளந்தண்டுளிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் வேறு சிற்றினங்களைப் பொறுத்த மட்டில் அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. செவி ஒலிகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செவி கேள்வித் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

எம்மால் பிறரது உரையாடலினை கேட்க இயலாது போகும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கான பதிலினை உரிய முறையில் கொடுக்க இயலாது போகின்றது. எமது உணர்வுகளை வெளியிட முடியாத நிலை தோன்றுகின்றது.

எமது அங்கங்களில் ஒன்றான காதின் அமைப்பினை எடுத்து நோக்குவோமாயின் வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று மூன்று வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.

இவைகளில் வெளிக்காதில் காதுச் சோணையும், புறச்செவிக் கால்வாயும், காணப்படும். அதில் புறக் காதுச் சோணை வாயிலாக வெளியிலிருந்து ஒலி அலைகளானது எமது புறக்காதின் கால்வாயினை நோக்கிச் செலுத்தப்படும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி கசியிழையங்களினாலான மடல் ஆகும். இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. முதுகெலும்புளிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.

நடுக்காதானது செவிப்பறை மென்சவ்வு எனும் மிக மெல்லிய சவ்வு ஒன்றைக் கொண்டுள்ளது. புறச்செவிக் கால்வாயினூடாக வருகின்ற ஒலியினால் இம்மென்சவ்வு அதிர்ந்து உட்காதுக்குள் ஒலியை ஊடுகடத்துகின்றது. உட்காதில் ஊத்தேக்கியோவின் குழாய் எனும் அமைப்பு தொண்டையுடன் தொடர்புள்ளது. இதனால் காதினுள் நிலவும் அமுக்கமும் வெளி வளிமண்டல அமுக்கமும் ஒரேயளவில் பேணப்படுகிறது. எனவே உட்காதானது சமநிலையைப்பேணுவதில் பங்களிப்புச் செய்கின்றது.  உட்காதுக்குள் வரும் ஒலியானது மூளையினை நோக்கி கணத்தாக்கங்கள் ஊடாக கடத்தப்படும். இது ஒலிவாங்கிகளால் தூண்டப்பட்டு தகவல்கள் மூளையத்தினது ஒலி உணர் பிரதேசத்தினை அடைகின்றது. கணத்தாக்கத்தின் காரணமாகவே  நாம் தகவல்களை உணர்கின்றோம். ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது “அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்” (Olson 1957) எனும் பல கருத்துகளைத் தருகின்றது.

செவிப்புலனற்றவர்களை நாம் இருவகையானவர்களாக நோக்கலாம் இயற்கையில் தமது பிறப்பின் போது தமது செவிப்புலனை பறிகொடுத்தவர்கள். இவர்களின் நிலைக்கு பலவாறான காரணங்கள் கூறப்படுகின்றன. வைத்தியத் துறையினரின் கண்டு பிடிப்பின் படி ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தின் போது, அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களினைக் கேட்டல் அல்லது பார்த்தல், இயற்கை அல்லது செயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடல், போஷாக்கான உணவுப்பழக்கமின்மை, பரம்பரை அலகு போன்றவற்றில் ஏற்படுகின்ற தாக்கத்தின் விளைவாக அவர்களது உடலில் சுரக்கும் ஒமோன்கள் வளர்ந்து வருகின்ற நுகத்தை பாதிப்படையச் செய்வதன் காரணத்தினால் இவ்வாறு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

இயற்கையாக தமது பிறப்பின் போதே செவிப்புலனை அற்றவர்களை விடுத்து மற்றுமொரு பகுதியினர் எம்மில் இன்று காணப்படுகின்றனர். அதாவது தமது சிறுவயதில் ஏற்படுகின்ற அனர்த்தம் ஒன்றின் விளைவாக தமது கேட்கும் சக்தியினை இழந்தவர்கள் அல்லது ஒரு விபத்தின் காரணத்தினால் தமது செவிப்பறைகளில் பாதிக்கப் பட்டவர்களே அவர்கள்.

உண்மையில் முதலாவது பகுதியினரை விட இந்த இரண்டாவது பகுதியினர் அதிகளவாக பாதிப்படைவதாக குறிப்பிடப்படுகின்றது அதாவது இயற்கையாக தமது பிறப்பின் போது செவிப்புலனற்றவர்களாக காணப்படுபவர்கள் தமது இயலாமையினை தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவும் மனதளவில் தைரியமிக்கவர்களாகவும் இயற்கையோடு எதிர்த்துப் போராடக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஆனால் ஏற்பட்ட விபத்தொன்றின் காரணமாக இவ்வாறான நிலைக்குள்ளானவர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் தமது பிழையான நடவடிக்கையின்  விளைவாகத்தான் இவ்வாறான சம்பவம் தனக்கு ஏற்பட்டது என்ற மனோநிலையினையும் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பர்.

மேலும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்பட காரணங்களாக பின்வருவனவற்றையும் குறிப்பிடலாம். இயற்கை நிலையில் முதிர்வயதாகும் போது செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது. இவை தவிர சில சந்தர்ப்பங்களில் சத்தம் நிறைந்த வேலை இடங்களில் வேலை செய்பவர்களுக்கும்,   காதுகளில் சுரக்கும் மெழுகுபோன்ற பொருள் அடைப்பதினாலும்,   காதுகளில் ஏற்படும் நீண்ட நாள் நோய்தொற்றுக்களினாலும்,   காது உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களினாலும்,  டிம்பானிக் மெம்பரேன் எனப்படும் காது சவ்வில் ஏற்படும் துவாரம்,  காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாகவும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான பாதிப்புகள்  ஏற்படும்போது தோன்றும் சில அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். சிறு பிள்ளைகளாயின்  சத்தத்திற்கு அசைவோ அல்லது மறு உத்தரவோ அளிக்காதிருத்தல்,  மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளாமலிருத்தல், மற்றவர்கள் பேசும்போது உரக்க பேசுங்கள் என்று கேட்பது போன்றன சிலவாகும்.

இத்தகையோர் பின்வரும் விடயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக சத்தமுள்ள இடங்களிலிருந்து விலகியிருத்தல்,  காது கேளாமையின் காரணங்களை பரிசோதித்தறிய மருத்துவரை அணுகுதல். மருத்துவரின் ஆலோசனையுடன் காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல்.

நவீன இக்காலத்தில் கையடக்கத் தொலை பேசிப்பாவனை பொதுவாக உலகளாவிய ரீதியில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. ”கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால்,  நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து,  கையடக்கத் தொலை பேசியினால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம். ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால்,  கையடக்கத் தொலைபேசி உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே கையடக்கத் தொலை பேசி வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. கையடக்கத் தொலை பேசியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால்,  தொடர்ச்சியாக அரை மணி நேரம்,  ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, கையடக்கத் தொலை பேசியில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் கையடக்கத் தொலைபேசியை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல கையடக்கத் தொலை பேசியில்  விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். எனவே கையடக்கத் தொலை பேசிப்பாவனையாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

செவிப்புலனற்றவர்களினால் சில போது பேச இயலாதும் போய் விடுகின்றது. எனவே எமது நடவடிக்கையின் காரணமாக அவர்களை நோகடித்து விடாது அவர்களது உணர்வுகளுக்கும் மதி ப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, எம்மில் ஓர் அங்கமாக நாம் அவர்களை கருத வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது குடும்ப உறுப்பினர்களில் இவ்வாறானவர்கள் காணப்படுவார்களேயானால் அவர்களை தனிமைப்படுத்தி விடாது.  இவர்களை ஒதுக்கி விடாது எமது விடயத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தோடு இவர்களை கவனிப்பதனையும் ஒரு முக்கியமான விடயமாகக் கருதி செயற்பட வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது பிறவியிலேயே காது கேளாத பலருக்கு சத்திர சிகிச்சையின் ஊடாக கேட்கும் சக்தியினை வழங்கியிருப்பதனை அறிகின்றோம். இவ்வாறான சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அதேபோன்று எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்று இதன் வளர்ச்சி காணப்படுகின்றது. ஆனால் இச்சத்திர சிகிச்சை நிபுணர்கள் பலவாறான கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டுத்தான் இதனை செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இவர்கள் போதியளவான செவிமாற்று உறுப்புகளினை பெறுவதில் சிரமங்கள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் இன்று காணப்படுவது போன்ற சிரமங்கள் காணப்படாதிருப்பதற்காக மனிதனது கலத்தினை (Human cells) வைத்து மனித உறுப்புக்களை உருவாக்குவதற் கான முயற்சியில் இன்றைய விஞ்ஞானமானது இறங்கி யிருப்பதாகவும் நாளைய உலகில் அதன் வெற்றியின் விளைவாக இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு கண்டனம்

ramadan-mosque.jpgகிழக்கு மாகாண பள்ளி வாயல்கள் சம்மேளனம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களுக்கோ, பள்ளி வாயல்களின் தலைமைகளுக்கோ தெரியாதவாறு அறிக்கைகளும், செய்திகளும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானித்து வருகின்றோம்.

குறிப்பாக, கடந்த வருடம் பாராளுமன்ற பஜட் விவாதத்தின் போது கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்ற கடிதத் தலைப்பில் அரசாங்கத்தின் பஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற பெக்ஸ் செய்தியின் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 22.09.2009ம் திகதி தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா கடத்தப்பட்டு விடுவிப்பு என்று செய்தி வந்திருந்தது. இச் செய்தியில் பள்ளிவாயல் ஒன்றின் தலைவராகவே இல்லாத ஹனிபாவை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றது. இவ் அடையாளப்படுத்துகையானது பள்ளிவாயல்களின் பேரில் சுயலாபம் தேடுவதற்கோ அல்லது அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காகவோ எடுக்கப்படும் முயற்சியென நாம் திடமாக நம்புகின்றோம்.

மெளலவி ஹனிபா என்பவர் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலின் தலைவராக இருந்த போது அதன் பதவி வழியாக அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்திலும், கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனத்திலும் சில பதவிகளில் இருந்திருக்கிறார்., அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைமைப் பதவியில் இருந்து அவர் நீங்கிக் கொண்டது 2007.09.12ம் திகதியாகும்.

இதன்படி பள்ளவாயலின் புதிய தலைவரே மேற்படி சபைகள் கூடுகின்றபோதோ அல்லது உருவாக்கப்படுகின்றபோதோ அங்கம் வகிப்பதுவும் பதவி வகிப்பதுவும் நடைமுறை வழக்கமாகும். ஆகவே, கடந்த 02 வருட காலங்களுக்கு மேலாக பள்ளிவாயலின் தலைவராகவே இல்லாத மெளலவி ஹனீபா கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்றும், இயங்காத அச்சபையின் பெயரை பாவிப்பதிலிருந்தும், தவிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இத்தால் வேண்டுகோள் விடுத்துக் கொள்கின்றோம்.

இவ் வேண்டுகோளினை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சார்பில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயல் ஆகிய வற்றின் தலைவர்கள் கூட்டாக இணைந்து வெளியிடுகின்றோம்.  தவறும் பட்சத்தில் இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியை நாடவேண்டியதையும் தவிர்க்க முடியாமலாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த 16.09.2009ம் திகதி மெளலவி ஹனிபாவிற்கு நடந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது என நமது உலமாக்கள் கருதுகின்றனர்.

நமது பிராந்தியம் தொடர்பிலும் சமுதாய நலன்கள் தொடர்பிலும் மெளலவி ஹனிபாவைப் பற்றிய கருத்துக்கள் வித்தியாசமாகப் பேசப்படுகின்றது. அவருக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்ற காரணத்தினால் உலமா சபையினையும் அவ்வரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதனை தடுக் குமாறு நமது உலமாக்கள் கேட்டுக் கொள்கின் றார்கள்.

எனவே 23.09.2009ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாக சபைக் கூட்டத்தில் மெளலவி ஹனிபா பேசிக் கொண்ட ஒருதலைப்பட்ச விடயம் தொடர்பாக நாம் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாது என உலமாக்கள் எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர்.

எனவே, அவர் ஒரு தலைப்பட்சமாக பேசிய விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ நமது உயர் சபைகளுக்கோ, தீர்மானங்கள் என்றோ அறிக்கைகள் என்றோ வெளியிடக்கூடாது எனவும் உலமாக்கள் மேலும் கேட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் இவற்றையெல்லாம் மீறி இது தொடர்பில் ஏதாவது அறிக்கைகள் வெளியிடப்படுமானால் அவற்றிற்கு அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினர் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றாமல் டமிஃபுளு உட்கொள்ளக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் தொற்றுவதை தவிர்க்கும் வகையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான டமிஃபுளு மாத்திரையை பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே, இந்த மாத்திரரையை பயன்படுத்தினால், அது வீரியத்துடன் பயந்தரமாட்டாது என்பதே இந்த விடயத்தில் இருக்கின்ற பெரிய அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் காய்ச்சலுக்காக இந்த மருந்து பயன்படுத்தப்படும் 28 தடவைகளில், 12 தடவைகள் காய்ச்சல் தொற்றுவதை தடுப்பதற்காக முன்கூட்டியே அது பயன்படுத்தப்படுகின்றது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதற்குப் பதிலாக பலவீனமான நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அதன் பின்னர் தாமதிக்காமல் இந்த மருந்தை உட்கொள்வதே சிறந்தது என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

260909srilanka.jpgவட மாகாணத்திலிருந்து (1990ம் ஆண்டு) இடம்பெயர்ந்து முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசாலையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928