கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நான்கு கட்டங்களாக நிரந்தர மீளக்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ எம்.பி

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்தோர் நான்கு கட்டங்களாக சொந்த இட ங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த உறுதியான திட்டத்தின் மூலம், ஏப்ரல் மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  கடந்த வியாழனன்று அமைச்சுக்களின் செயலாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் முழுமையாகச் செய்து வருகிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

புலிகளின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு முதல்நாள் சூடான சாப்பாடும், சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். யு.என். எச். சி. ஆர். மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனங்கள் இவர்களுக்கான கூடாரங்களை வழங்கவுள்ளதெனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு தேவையான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் செய்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமான்

seeman-1302.jpgதமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?  இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான்  பங்கேற்று பேசினார்..

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.  எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார்.  சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் பெண் அமைச்சர்.

saudi-arabia.jpgசவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான பணி. எனக்கு துணை கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோல மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை நிலைவரம் அமெரிக்க செனட் குழு – பெப். 24 இல் விசாரணை

u-s-a-flag.jpgஇலங் கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுகளுக்கான செனட் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடி விசாரணை நடத்தவுள்ளது. டேர்க்சென் செனட் கட்டிடத்தில் இந்த விசாரணை இடம்பெறுமென குழுவின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் கெரி இந்த விசாரணைக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி ஜே.லன்ஸ்ரட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரட், பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் பொப்டியற்ஸ் ஆகியோர் இந்த விசாரணையின் போது சாட்சியமளிக்கவுள்ளனர். 1989 இன் பின்னர் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர்களாகப் பணியாற்றிய லன்ஸ்ரட் உட்பட முன்னாள் இராஜதந்திரிகள் இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை தொடர்பாகவும் முன்னாள் தூதுவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர 

லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

protestsin.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேல் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வாக்கு சாவடிகளிலேயே எண்ண ஏற்பாடு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். மாலை 4.00 மணிக்கு வாக்களிப்புகள் நடைபெற்று முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். தபால் வாக்குகள் மட்டுமே வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் வைத்து எண்ணப்படும் என்றும் கூறினார். முதல்முறையாக இந்நடவடிக்கை செய்யப்படுவதாகக் கூறிய ஆணையாளர், வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது இவ்வாறு நடைபெறமாட்டாது என்றும் கூறினார்.  மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி தினமான 26ம் திகதியிலிருந்து 36 முதல் 56 வரையிலான தின காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்க ப்படும். அது ஒரு சனிக்கிழமை தினமாக இருக்கும் என் றும் கூறினார்.  2004 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மேல் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2004 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது

திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ – புதியஅமைப்பு

india_map_.jpgஇலங்கை யில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.

இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

civilians.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லை கடலேரியில் தற்கொலை படகுகள் மீது விமானத் தாக்குதல்

boats-1002-2.jpgமுல்லைத் தீவு கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு ஏரிக்கு வடக்கே புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்றினை அவதானித்த விமானப் படையினர் கிபிர் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.35 மணியளவில் புலிகளின் இலக்குகளைத் துல்லியமாக அவதானித்ததன் பின்னர் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு விசுவமடுவில் இராணுவத்தின் 58 ஆம் படைப் பிரிவினரிடம் நேற்று முன்தினம் மாலை 541 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். மேலும், படகில் வந்த ஏழு சிவிலியன்கள் யாழ்ப்பாணம் முனை கடற்படை முகாமில் தஞ்சமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்