கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

கம்பஹா, களுத்துறையில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகம்

caffe.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்காக கம்ஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :

மேல் மாகாண சபைத்தேர்தல் வன்முறை தொடர்பாக நாம் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் சனிக்கிழமை வரை நாம் மொத்தமாக 69 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் 54 சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்களாகும்.  தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக முறையே 10 முறைப்பாடுகளைப் பெற்ற அதேவேளை அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்றும் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் பெயர், விலாசம், என்பன மாற்றப்பட்டு பல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எவ்வளவு தொகை இவ்வாறு மேலதிக வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயவுள்ளோம் என்றார்.

ஜெயலலிதாவிடம் மக்கள் சக்தி உள்ளது: ராமதாஸ்

india-election.jpgதிரு வண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் குருவை ஆதரித்து பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நான் 30 ஆண்டுகள் மருத்துவராக இருந்து நோயாளிகளின் நாடி பிடித்து சிகிச்சை அளித்தவன். தற்போது அரசியலில் நாடி நரம்பை பிடித்து பார்ப்பவன். அதை வைத்துதான் சொல்கிறேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். அப்போது எங்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தார்கள். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 2001ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன்பிறகு திமுகவுடன் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 13 இடங்களில் குழி பறித்து விட்டார்கள்.

கூட்டணி என்றால் அதிமுகவுடன் வைப்பதுதான் இயற்கையான கூட்டணி. அதிமுகவினர் எதிர் அணியில் இருந்தாலும் நம்மை முகமலர்ச்சியோடு பார்பார்கள். திமுகவினர் நம்மோடு கூட்டணியில் இருந்தாலும் சிடு சிடு என்றுதான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு மக்கள் சக்தியே காரணம். இந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவிடமே உள்ளது என்றார்.

இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்

dvd_.jpgதூத்துக் குடியில்  காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள்,  முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது. இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழுவதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும்  காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர். தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

dvd_.jpg

மழையின் மத்தியிலும் வன்னியில் தாக்குதல்.

army-attack.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைக்கும் மத்தியில் நேற்று படையினர் நடத்திய ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர் 75 பேர் படுகாய மடைந்துள்ளனர்  என்று இணையத்தளத் தகவல்கள் தெரிவித்தன.

அவை மேலும் தெரிவித்ததாவது: மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை படையினர் ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மரணமானோரை புதைக்க முடியாமலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளதாகக் கூறப்பட்டது.

ஈஸ்டர் திருநாளில் போர் நிறுத்தம் ஏற்படட்டும்: ஜெயலலிதா

jaya.jpgஅன்பும்,  இரக்கமும் உயிர்த்தெழட்டும் என்று, ஜெயலலிதா தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் இயேசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம். எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்தம்

mahinda.jpgதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் நாளையும், நாளை மறுநாளும் (13, 14)  இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சே இன்று (12) அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட  அறிக்கையில்; தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்திவைக்கும்.

இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள்  அனுமதிக்கப்பட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் புலிகள் படையினர் மீது தாக்குதல் மேற்கொhண்டால் தவிர பாதுகாப்பு வளையப் பகுதியில் மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகத்துறை  அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறுகையி்ல் நாளையும், செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.

புலிகள் அமைதி:

ஆனால், அரசின் இந்த அறிவிப்பு குறித்து புலிகள் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக உண்மையான தமிழ் இன உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு: விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgதிமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.

விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணி ஆரம்பம் – பெருந்தொகையானோரை தங்கவைக்க செட்டிக்குளத்தில் விரிவான ஏற்பாடு

_mullai_1.jpgபாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளதையடுத்து பெருமளவிலான மக்கள் அங்கிருந்த வரலாம் எதிர்பார்ப்புடன் அம்மக்களை என்ற தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்கள் (டெண்டுகள்) அமைக்கப்படுகின்றன. யூ. என். எச். சீ. ஆர் சுமார் 12,000 தற்காலிக கொட்டில்களை வழங்க முன்வந்துள்ளது. இப்போது சுமார் 9000 கொட்டில்களை அமைக்கும் ஆயத்த நிலையில் உள்ளன. என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

மேலும் இப்பிரதேச செயலகப் பிரிவிலேயே 700 ஏக்கர் பகுதியும் துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலும் மக்களை தங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. கொட்டில்களில் மக்களை தங்க வைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட மலசல கூட வசதிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. வவுனியாவில் தங்கியுள்ள ஐ. நா. மனிதாபிமான அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கென பெரிதும் உதவி வருவதாகவும் செயலாளர் ஹால்தீன் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவுக்குள் சுமார் 64,000 பேரளவில் வந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கு எதுவாக வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களுள் சுமார் 400 பேர் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், மேலும் 1200 பேர் ஒமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 பேர்; படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஈழமக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும்: புதிய தமிழகம்

election_ballot_cast.jpgபாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,

பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.

இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.

புலிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அமெரிக்க உதவி அமைச்சர் விருப்பம்

richard_boucher0.jpgபுலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்  என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம்  நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.