::விளையாட்டு
::விளையாட்டு
இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

“Manchester Originals” அணியினால் வனிந்து ஹசரங்க இவ்வாறு வாங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இவர் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்
ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.