::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – ஆசியக்கிண்ண போட்டிகளை நடாத்துவதில் சிக்கல் !

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக இலங்கையில் நடத்தப்படுவது இந்த போட்டி ஆகஸ்ட் 17-ந் திகதி முதல் செப்டம்பர் 11-ந் திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவர் அர்ஜூன ரனதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை . மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம்.” என தெரிவித்துள்ளார்.

Manchester Originals அணியால் சுமார் 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க !

இங்கிலாந்தில் நடைபெறும் “த ஹன்ட்ரட்” கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க பவுண்ட் 100,000க்கு வாங்கப்பட்டதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The Hundred Draft: Kieron Pollard taken first pick and Tammy Beaumont joins  Welsh Fire in big-name moves | Cricket News | Sky Sports

“Manchester Originals” அணியினால் வனிந்து ஹசரங்க இவ்வாறு வாங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இவர் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி !

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அலீசா ஹீலி அதிரடி ஆட்டம் - இங்கிலாந்து வெற்றி பெற 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா || Tamil News ENGW needs 357 runs to win against Australia in CWC 2022
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ஓட்டங்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ஓட்டங்களிலும், பெத் மூனி 62 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நடாலி சீவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 121 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரி உள்பட 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

பட்லர் அதிரடி – மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 100 ஓட்டங்கள் விளாசினார். மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 61 ஓட்டங்கள் எடுத்தார். இஷான் கிஷன் 54 ஓட்டங்கள் சேர்த்தார். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி – இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த முல்லைத்தீவின் யோகராசா நிதர்சனா !

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்

ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் !

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித்சர்மாவுக்கு அபராதம் !

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
மெதுவாக பந்து வீசியதற்காக தலைவர் என்ற முறையில் ரோகித்சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய மதிப்பில்  ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி அணி !

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடு்ப்பெடுத்தாட செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ஓட்டங்கள் விளாசினார். தலைவர் ரோகித் சர்மா 41 ஓட்டங்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ஓட்டங்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ஓட்டங்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

2022 – ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இலங்கையில் !

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு !

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ஓட்டங்கள், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார்.
குறைந்த ஓட்டங்களில்  வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ஓட்டங்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ஓட்டங்கள் (சராசரி ஓட்டம் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ஓட்டங்கள் சராசரியை தக்க வைத்திருப்பார்.
மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இந்த நிலையில் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.