யாழில் இருந்து ஹம்பிரியா வரை: பிரித்தானியாவின் பாலியல் வெறியர்கள்!
பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!
யாழில் இருந்து ஹம்பிரியா வரை: பிரித்தானியாவின் பாலியல் வெறியர்கள்!
பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25 மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த நாட்டுப்படகு இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் – சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட கருணா !
கிழக்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விரிவுரையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில் சிலர் பதவிகளை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்த கலாநிதி கே. பத்மநாதன் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய துணை வேந்தராக பதவியேற்று கொண்ட பேராசிரியர் சி. ரவிந்திரநாத், பதவியேற்று சில வாரங்களின் பின்னரே மர்மமான முறையில் காணாமல் போனார்.
இவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்து அவ்வேளை கருணா குழுவாக செயல்பட்டவர்களே பொறுப்பு என மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன அக் குழுவினரால் அவை அவ்வேளை நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கில் இன்று அவர் ஆஜராகவேண்டிய நிலையில் வழக்கிற்கு வருகை தரவில்லை என்பதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
நான் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கற்ற மாணவன் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் 18.12.2024 சமர்ப்பித்து கருத்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, எனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும். தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.
சொகுபேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து!
பனங்கொட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த உழவு இயந்திரமும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று அதிகாலை கொடிகாமத்தில் மோதி விபத்தில் சிக்கின. இவ் விபத்தில் இவ்விரு வாகானங்களையும் செலுத்தி வந்த சாரதிகள் உட்பட 4 நான்கு பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது ஏ9 வீதியில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வாறான விபத்துக்கள் அதிகாலை வேளையிலேயே நடைபெறுகின்றது. அதற்கான வாய்ப்புகளே அதிகம். நித்திரைத் தூக்கமும் சோர்வும் அதற்கான காரணங்கள். இது தொடர்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. விபத்திற்கான காரணம் முழமையாகத் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!
நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட “எட்கா ஒப்பந்தம்” தொடக்கம் அனைத்திற்கும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அல்லது எட்கா (ETCA – Economic and Technology Cooperation Agreement) ஒப்பந்தத்தை செய்ய ரணில் விக்கிரம சிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை என்று கூறி அவ்வொப்பந்தத்தை எதிர்த்து வந்த என்பிபி தற்போது எதிர்ப்பதை நிறுத்தி விட்டதா? எனக் கேட்டார். எட்கா ஒப்பந்தம் எனப்படுவது இலங்கை இந்தியாவிற்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.
எட்கா ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். எட்கா ஒப்பந்தத்தின் படி இலங்கை – இந்தியா இரு நாடுகளுக்குமிடையே பொருட்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் பற்றியதாகும். எட்கா ஒப்பந்தம் வருவதை எதிர்த்தவர்கள், கைச்சாத்தானால் இலங்கை இந்தியாவின் கொலனியாகிவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பியிருந்தனர்.
இந்தநிலமையிலேயே அநுராவின் இந்தியப் பயணம் தொடர்பில் இக்கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுடனான வலுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க அநுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு மக்கள் ஆணை உள்ளது. அதன்படி மேலதிகமாக உற்பத்தி செய்யும் வலுசக்தியை பிம்ஸ்டெக் வலயத்திற்குள் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்போம் என்றார். அத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் இந்தியாவுடன் கையொப்பம் இடவில்லை என்றும் அறிவுள்ளவர்கள் அதனைப் படித்துப் பாருங்கள் என்றும் காட்டமாக பதிலளித்தார்.
சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!
சர்வதேச கிரிமினல் நீதிமன்றினால் குற்றச்சாட்டப்பட்ட இஸ்ரேலிய குற்றவாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் என்கின்ற அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீன குடிமகனின் கொலையில் குற்றவாளியாகக் கருதப்படும் இஸ்ரேலிய சிப்பாய் கால் பெரென்பு என்பவர் கொழும்பிலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபரைக் கைதுசெய்யுமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்குமாறும் ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அரசு எதிர்வினையாற்றினாலோ அல்லது எதிர்வினையாற்றமாலிருந்தாலே இது ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும். சம்பந்தப்பட்டவரை இலங்கை அரசு கைது செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குச் செய்கின்ற ஒரு துரோகமாக அது அமையும். குறிப்பாக தென்னாபிரிக்காவின் முயற்சியினாலேயே சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்குற்றச்சாட்டை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டது. அதற்கு இலங்கை தன்னுடைய பக்கத்தில் ஆதரவு வழங்க வேண்டிய கடமைப்பாட்டை உடையது.
ஆனால் சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய போர்க் குற்றவாளி கைது செய்யப்பட்டால், இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இலங்கையில் ஜனாதிபதி அனுரா தலைமையிலான ஆட்சிக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதற்கு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றவர்கள் அரசியல் ரீதியில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதி அனுராவுக்கு கொலை அச்சுறுத்தலும் உருவாகலாம். அதனால் இவ்விடயம் தொடர்பில் மிக அவதானமாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
கால் பெரென்புக் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கவச வாகனம் ஒன்றின் திரையினூடாக சிதைவடைந்து இறந்திருந்த பாலஸ்தீன குடிமகன் ஒருவரின் உடலத்தைப் பார்க்கின்றார். இன்னொரு நபருடன் அராபிய மொழியில் சிரித்து கேலி செய்கின்றார். அவர்களது உரையாடலில் சிதைவடைந்த உடலை போர் வெற்றியின் அடையாளமாக கையாளுவது தெரிகின்றது.
காணொலியின் அடிப்படையில், காஸா பகுதியில் கால் பெரென்பு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, மனிதாபிமான சட்டங்களை மீறிய செயல்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தமை, யுத்த விதிமீறிய கொலையில் ஈடுபட்டமை மற்றும் இறந்தவரின் மதிப்பை தாழ்த்திய சம்பவங்கள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!
சமீப வாரங்களாக கொழுந்துவிட்டெரியும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 170 மருத்துவ ஊழியர்களின் பணி நியமனப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள எம்பி அர்ச்சுனா நேற்றைய தினம் பாராளுமன்றதில் இவ்விடயத்தை சொதப்பினார். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்று நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட அர்ச்சுனா எடுத்துக் கொண்ட விடயத்தலைப்பிற்கு அப்பால் போய் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டு சபையின் நேரத்தை வீணடித்தார்.
எம்பி அர்ச்சுனா கொண்டு வந்த விடயத்தின் கனதியின் பொறுப்பையுணர்ந்து செயற்படவில்லை என மக்கள் விசனமடைந்துள்ளனர். நேற்றைய தினம் எம்பி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் பல சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தன்னிடம் பலர் முறையிட்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி கேட்டுள்ளதாகவும், இவ் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஊசி அர்ச்சுனாவுக்கு முன்னதாகவே சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராஜா அந்த ஊழியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன், அவர்கள் தங்கள் முறைப்பாட்டை சொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனா தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தொடங்கிய விடயத்தை விட்டு விலகி யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா என ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து கூச்சலிட்டார். இக் கூச்சல்களின் நடுவே எதிர்கட்சியினரைப் பார்த்து கடுமையாக விமர்சித்தார். நீங்கள் டக்ளஸ் தேவாநந்தாவை வைத்து தமிழ் மக்களை கொன்று போட்டீர்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் O/L பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் ஆதாரங்களை கொண்டு வராமல் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். இதே டக்ளஸ் தேவானந்தாவை தனது தந்தை என்றும் சில மாதங்களுக்கு முன் துதி பாடியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்மீது மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளாதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் தாக்கப்பட்டதாகவும் முறையிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு அர்ச்சுனாவை சமர்ப்பித்த விடயம் தொடர்பில் பேசும்படி எச்சரித்தார். அதை எதையும் காதில் வாங்காது அர்ச்சுனா தான் விடயத்திற்குள் நின்று கொண்டு தான் பேசுகிறேன் என்று கோபமாக கத்திக் கொண்டு “என்னுடைய கருத்துக்களை சபையில் முன்வைக்க எனக்கு சரியான வாய்ப்புக்கள் வழங்க முடியாவிட்டால், நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கிறேன்” என முரண்பட்டுக் கொண்டார். அத்தோடு நிற்காமல் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேச முற்பட்டார். அப்போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அர்ச்சுனா கிண்ணியாவில் சஜித் பிரேமதாசா தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தை ஞாபகப்படுத்தியோடு, “அது யாருடைய அரசியல் மேடை?” என சிலேடையாக கேட்க அனைவரும் நளினத்தோடு சிரிக்க ஆரம்பிக்க அர்ச்சுனா தனது குறளி வித்தையை நிறுத்தினார்.
பிந்திய செய்திகளின்படி சபாநாயகர் எம்பி அர்ச்சுனா சபைக்கு முரணாக வரம்பு மீறி உளறியவையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படியே ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எம்பி அர்ச்சுனா சபையின் கவனத்தை திசை திருப்பி சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தால் அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாது. பாராளுமன்றம் மக்களுக்கான பிரச்சினைகளை பேசி மற்றும் விவாதித்து தீர்வு காணுமிடம். ஊசி அர்ச்சுனா மாறாக தனது தனிப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமான தனி மனிதர்களுக்கிடையான பிணக்குகளை பேசும் இடமாக மாற்றி வருகின்றார்.
இப்படியிருக்க யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்றைய தினமான டிசம்பர் 18 அர்ச்சுனா மீது 100 கோடி நட்ட ஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வாறு 100 கோடி கிடைக்கும் போது அதனை யாழ்ப்பாண வைத்தியசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என முகநூலினூடாக அறிவித்துள்ளார்.
பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு ஒரு உயர்வுச் சிக்கல் மனோநிலையுண்டு. தாங்கள் ‘டொக்டர்ஸ்’ என்பதால் தங்களுக்கு அறிவுப் புலமை அதிகம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் உரையாடல்களில் நடவடிக்கைகளில் அடிமுட்டாள் தனமாகவும் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்தியல் நிலைப்பாடுடையவர்களாகவும் உள்ளனர். தங்களை ‘சேர்’ என அழைக்க மற்றவர்களை வற்புறுத்துவது, நான் ‘டொக்டர்’ நான் டொக்டர் என தங்களுக்கு தாங்களே அழைத்துக்கொள்வது போன்ற தாழ்வுச் சிக்கல்களும் இவர்களிடம் உண்டு. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். இந்த வெற்றுக் குடங்களின் குடைச்சல் தாங்க முடியிதில்லை என்கிறார் ‘சும்மா’ டொக்டர் பொன்னம்பலம்.