உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எங்கள் பொருளாதாரத்தை சீரழிப்பது – ஜீஎஸ்பி + வரிச்சலுகையைத் தடுப்பது தீர்வல்ல ! – நாங்கள் ஒரே தாயின் பிள்ளைகள் !

எங்கள் பொருளாதாரத்தை சீரழிப்பது – ஜீஎஸ்பி + வரிச்சலுகையைத் தடுப்பது தீர்வல்ல ! – நாங்கள் ஒரே தாயின் பிள்ளைகள் ! – எங்கள் பிரச்சினையை எங்களுக்குள் தீர்க்க வேண்டும் !

ASATiC செயலாளர், முன்னாள் ஈரோஸ் உறுப்பினர், ஆய்வாளர் ரவி சுந்தரலிங்கம்

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !

 

கிளி கனிஸ்டா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அலன் என்பவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பா உ சிறிதரனுக்கு நெருக்கமான இவரது விடயம் பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும் அதனை மறைக்க பா உ சிறிதரன் முயற்சித்தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சந்தேக நபரான அலனைக் கைது செய்h பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமனற உறுப்பினர் ரஜீவன் காணொலி ஒன்றை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நம்பிக்கை அளித்துள்ளார்.

 

இந்த சிறுவர்கள் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை விளையாட்டு பயிற்றுனர் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றமும் கல்வியில் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதனை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசாருக்கு மேற்குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபரை கைது செய்யாத போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஏப்ரல் 9 பொலிஸார் சிறார்களை பாடசாலையில் தடுத்து வைத்து குற்றவாளிகள் போல் விசாரித்துள்ளனர். அதையடுத்தே பெற்றோர் கலவரம் அடைந்து காணொலிகளைப் பரப்பினர்.

கிளி கனிஸ்டா பாடசாலை பா உ சிறிதரன் அதிபராக இருந்த பாடசாலை. பா உ சிறிதரனுக்குத் தெரியாமல் அங்கு ஓரணுவும் அசையாது. அப்படியிருக்கையில் இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் வெளிவந்ததும் அதனை மறைக்க அவர் முயற்சித்தார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது. சந்தேகநபரான அலன் பா உ சிறிதரனது அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதனால் பா சிறிதரன் குற்றம்சாட்டப்பட்ட அலனை காப்பாற்ற முற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான வேளமாலிதனின் பாலியல் லீலைகள் அம்பலமானதுடன் தமிழரசுக் கட்சியின் அலுவலகமும் வேளமாலிதனின் சிற்றின்ப தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்தது. கிளிநொச்சியின் மண் மாபியாக்கள், வட்டி மாபியாக்கள், சாராய மாபியாக்களுடன் தற்போது பாலியல் மாபியாக்களும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாகவும் பா உ சிறிதரனின் நிதி வழங்குநர்களாகவும் இருப்பதாக பெருமளவு குற்றச்சாட்டுகள் வெள வருகின்றது.

 

சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று சனிக்கிழமை உறுதியளித்திருந்தார்.

 

இதேபோல் வன்னி முல்லைத்தீவில் கணித ஆசிரியர் தச்சுதன் 20 வயது வரையானமாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்தமை தெரிந்ததே. தன்னுடைய மாணவர்களுக்கு போதை வழங்கி மாணவிகளை அவர்களின் வலையில் விழ வைத்து காணொலிகளை பதிவு செய்து சிற்றின்பம் கண்டவர். இவர் குறுகிய கால தண்டனையோடு தற்போது வெளிவந்துவிட்டார். அவர் தற்போதும் முல்லைத்தீவில் கணக்கு கற்பிக்கின்றார். பெற்றோர்கள் மீண்டும் மாணவிகளை அவரிடம் அனுப்புகின்றனர்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்

 

“பா உ அர்ச்சுனா தையிட்டி விவகாரத்தில் தவறான முடிவை எடுத்திருக்கின்றார். அது சட்டவிரோதமான விகாரை. உடைக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். பா உ அர்ச்சுனா இந்த விடயங்கள் பற்றி பேசிய விடயங்கள் திருத்தப்பட வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

 

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழரசுக் கட்சி மீதும் அதன் பொதுச்செயலாளர் மீதும் காட்டமான விமர்சனத்தையும் அங்கு வெளியிட்டு இருந்தார். எம் ஏ சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருப்பதாகவும் எம் ஏ சுமந்திரனுக்குப் பயந்து மற்றவர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசயலமைப்புப் பற்றி அரசாங்கம் அறிவிக்கும்வரை தமிழ் கட்சிகள் தங்களுக்குள் உரையாடி அவசியமில்லை என்பது அடி முட்டாள்தனம் என அவர் அதனை வர்ணித்தார். இலங்கைத் தமிழரவுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை சூழ்ச்சிக்காரன் எனறும் கஜேந்திரகுமார் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார்.

 

மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள தையிட்டி விவகாரத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பௌர்ணமிப் போராட்டங்களை நடத்துவதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார் தற்போது யாழில் வாழ்கின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன். இவர் டான் தொலைக்காட்சியின் ‘எது சரி எது பிழை’ நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற போதே அங்கு மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

 

சட்டத்தரணி ரெங்கன் அங்கு மேலும் தெரிவிக்கையில், அந்த விகாரைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழியென்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் தேசியக் கட்சிகளில் சட்டத்தரணிகளுக்குப் பஞ:சமில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் ஏன் இதுவரை தையிட்டி காணி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டார்.

இதனை மறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டிபன் அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை நகர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலிகாமம் உப தவிசாளர் சுகிர்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விகாரை தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

 

டான் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட இதே கேள்வி ஜப்னா கலரியில் கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இதற்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் விசாரணையிலிருக்கும் விடயத்திற்கு போராட முடியாது. அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் செய்ய முடியாது போகும் என்பதை ஜப்னாகலரியில் ஒத்துக்கொண்டார்

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே !

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !

அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்

 

யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !

யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் டிப்பர் வாகனத்துக்கு அருகாக நடந்து சென்ற மூதாட்டியை அவதானிக்கமால் சாரதி டிப்பரை எடுத்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல் ஏற்றிவந்த ரிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் வடக்கில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஆனாலும் செலுத்துனர்களோ, பொதுமக்களோ இவை தொடர்பில் அவதானமற்று அசமந்தமாக செயற்படுவதால் தொடர்ந்தும் இழப்புகள் பதிவாகி வருகின்றன. இதேவேளை போக்குவரத்துப் பொலிஸார் கனரக வாகனங்கள் தொடர்பில் சட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத்த தவறுவதே இவற்றுக்கான அடிப்படைக்காரணம் என மக்கள் குற்றஞ்சாடுகின்றனர்.

நாட்டில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்து மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் நரிகள் எங்கள் பரப்புரைகளைத் தடுக்க முடியாது ! அமைச்சர் சந்திரசேகர்

அரசியல் நரிகள் எங்கள் பரப்புரைகளைத் தடுக்க முடியாது ! அமைச்சர் சந்திரசேகர்

நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம் தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய வேட்பாளருமான தியாகாராஜா நிரோஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆலய வளாகத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியமை, அரச திணைக்களங்களுக்குரித்தான வாகனங்களை பயன்படுத்தியமை, ஆலய வளாகத்தில் பரப்புரைக்கான பதாதைகளை ஒட்டியமை போன்ற குற்றச்சாட்டுகள் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை பரப்புரைக் கூட்டத்தில் இது குறித்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், இங்கிருக்கும் அரசியல் நரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் நேர்மையான அரசியல்வாதிகள். நிரோசின் மீது எனக்கு மரியாரை இருந்தது. ஆனால் அவரது அரசியல் பாதை சாக்கடையானது. கூட்டத்தை தடுக்க கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம் என்றார்.

சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !

சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !

1986 மே 6 தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீது நடத்திய படுகொலைத் தாக்குதலிற்குப் பின் இடம்பெற்ற மிக மோசமான சகோதரப் படுகொலைத் தாக்குதல் 2004 ஏப்ரல் – சிவப்புச் சித்திரை வெருகல் படுகொலை. இந்தப் பிளவிற்குப் பல்வேறு காரணங்கள் அவரவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட போதும் இதன் பின்னணியில் பிரதேசவாதத்தின் கூறுகள் ஊறியிருந்தமை தவிர்க்க முடியாதது. யாழ் மையவாதவேளாள ஆணாதிக்க கருத்தியலுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் பொதுப் புத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. தமிழ் – சிங்கள இன முரண்பாடு முன்நிறுத்தப்பட்டு ஏனைய முரண்பாடுகள் துப்பாக்கியின் நிழலில் தூங்கிக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே வெளிக்கெம்பிய ஏனைய முரண்பாடுகளில் கிழக்குப் பிரிவினை மிக முக்கியமானதாக மாறியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கிடையேயும் வெளிப்பட்டது. வடக்கின் தலைவராக வே பிரபாகரனும் கிழக்கின் தலைவராக கருணா அம்மானும் உருவகப்படுத்தப்பட்டனர். இந்த கிழக்குச் சித்தாந்தத்தை கருணாவுக்கு அறிமுகப்படுத்தி அதற்கு அரசியல் வடிவம் கொடுத்தவர் பின்னாட்களில் மாமனிதராக்கப்பட்ட சிவராம். இதனை சிவாரம் தன் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்துகொண்டமை தேசம்நெற் அறிந்திருந்தது.

அதேவேளை இணைத் தலைமை நாடுகளை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட்ட நோர்வே புலனாய்வுத் துறை, பிரபாகரனையும் பொட்டம்மானையும் அணுக முடியாததால் அதன் அடுத்த கட்டத் தலைமைகைளை, திசைதிருப்பி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்குச் செல்ல வற்புறுத்தினர். பேச்சுவாரத்ததைக் காலத்தில் கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளின் அனைத்துக் கட்டமைப்புகளும் பெரும்பாலும் வடக்கின் யாழ்ப்பாணத்தாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதுவும் கிழக்குப் பிரிவினையை வலுப்படுத்திய விடயம். கருணா ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்த போது விடுதலைப் புலிகள் அல்லாத பல கிழக்குப் பிரதிநிதிகளையும் சந்தித்தார். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கல்வி மற்றும் பொருளாதார வசதியால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்ட, மண் மீட்புக்காக கிழக்கு போராளிகள் பலிகொடுக்கப்படுகின்றனர் என்ற எண்ணக்கரு இந்த விஜயத்தின் போது கருணாவின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது.

‘பேச்சுவாரத்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு யாழ்ப்பாணம் போன்று கிழக்கும் கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்’ என்ற எண்ணம் கருணா அம்மானிடம் வெளிப்பட ஆரம்பித்தது. அதற்கு தராக்கி சிவராம் அரசியல் வடிவம் கொடுத்தார்.

அதற்குப் பின் 2004 யூலையில் கருணாவின் பிளவு உலகறிந்தது. அன்றைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவின் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவாரத்தைகள் இடம்பெற்ற காலகட்டம். விடுதலைப் புலிகளுக்கள் ஏற்பட்ட இப்பிரிவினையை சந்திரிகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. வடக்கிலிருந்து கிழக்குக்குள் விடுதலைப் புலிகள் நுழைவதைத் தடுத்து, கருணா அம்மானோடு உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி சந்திரிகா அதனைச் செய்ய முன்வரவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாரத்தை முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்பதால் சமாதானப் புறாவாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாகுமாரதுங்கா புலிகளின் உட்பிரச்சினையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய போராளிகள் கொல்லப்படும் அபாயத்தை உணர்ந்த கருணா பல ஆயிரம் போராளிகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கிழக்கு மக்களின் உயிர்கள் வீணாக இழக்கப்படக் கூடாது என்ற உணர்வு அங்கு இருந்தது. கிழக்குப் போராளிகளை வைத்தே கிழக்குப் போராளிகள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் என்று வெளிப்பட்டு இருந்தது.

இந்த அச்சம் இறுதியில் நடந்தேறியது. வெருகல் கடல்பரப்பினூடாக புலிகள் நுழைந்து சரணடையுமாறு கோரி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் மேற்பட்டது எனக் கருணா அம்மான் வெருகல் படுகொலை நினைவு நிகழ்வில் தெரிவிக்கின்றார்.

கருணாவின் வெருகல் படுகொலை நினைவுரையை மறுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன், கருணாவின் போராளிகளையும் தாங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்திருக்கின்றோம் என்றார். இது பற்றிய அரியநேந்திரனின் குறிப்பு:

“இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச், 03இல் விடுதலை புலிகளில்
இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார். 2004 மார்ச் 06 இல் விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன்பின்னர் தாம் கிழக்கு புலிகள், வன்னி புலிகள், என்ற பிரதேசவாத கருத்தை கருணா தரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்கள் மீது பிரதேசவாதக் கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.

2004 ஏப்ரல் 04 பாராளுமன்ற, பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப் புலிகள் கருணா குழுமீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. 2004 ஏப்ரல் 09, இரவு தொடக்கம் 2004 ஏப்ரல் 10 வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணா தரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.

2004 ஏப்ரல் 20இல் கிளிநொச்சியில், தலைமைச் செயலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது நான் தலைவரிடம் கேட்டேன், “கடந்த 2004 ஏப்ரல் 10ஆம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணா தரப்பில் மரணித்த போராளிகளை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில்
இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார்”, என்றேன். தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார், “அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்கக் கூடாது”, என்றார்.

அப்போது உடனே தலைவர் தமது கையால் செ. கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகை காட்டிவிட்டு “அரியம் அண்ணர் கேட்டதில் என்ன தவறு உள்ளது அந்த போராளிகள் இன விடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை. அரியம் அண்ணர் கேட்டது சரி – அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்” என்றார்.”

வரலாற்றில் துரோகிகளாகப் பதியப்பட இருந்தவர்களை மாவீரர்களாகப் பதிய வைத்தி பெருமையை அரியநேந்திரன் வெளியிட்டு இருந்தார். இதற்குப் பிரதியுபகாரமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக பா அரியநேந்திரன் நிறுத்தப்பட்டார். தங்களுடைய போராளிகளின் படுகொலையை மூடிமறைத்துவிட்ட பா அரியநேந்திரனை மட்டு மக்கள் முற்றாகப் புறக்கணித்தனர். பா அரியநேந்திரன் மட்டக்களப்பில் குறைந்த வாக்ககளையே பெற்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமா மகேஸ்வரன் மற்கும் ஈரோஸ் ஈழ மக்கள் புரட்சிகர அமைப்பு பாலகுமாரன் தவிர்ந்த ஏனைய தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர். உமா மகேஸ்வரன் பின்நாட்களில் அவருடைய மெய்ப்பாதுகாப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பாலகுமாரான் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டாரா, மாவீரர் ஆனாரா அல்லது இன்னமும் உயிருடனிருக்கின்றாரா? அவருக்கு அஞ்சலி செய்வதா இல்லையா என்ற குழப்பத்தில் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நீண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் சகோதரப்படுகொலைகளின் கொலைக்களமாகவே அமைந்தது. இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் எவ்விதத்திலும் குறைவில்லாத ஈவிரக்கமற்ற படுகொலைகள் நிறைந்த போராட்டமாவே அது முடிவுக்கு வந்தது. மோசமான யுத்தக் குற்றவாளிகள் எம்மத்தியிலும் உள்ளனர் என்பதை மறந்து நாங்கள் மனித உரிமைநாடகம் ஆடுகின்றோம். இனிமேலாவது சகோதரப்படுகொலை செய்யாத மனிதப்படுகொலை செய்யாத உரிமைக்கான மற்றவர்களின் ஜனநாயகத்தையும் உரிமையையும் மதித்துப் மற்றவர்களோடும் இணைந்து அனைவரது உரிமைக்காகவும் போராடுவோம்

மனித புதைகுழிகளை தோன்றுவதற்கு அரச ஆதரவு இல்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் குற்றச்சாட்டு

மனித புதைகுழிகளை தோன்றுவதற்கு அரச ஆதரவு இல்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் குற்றச்சாட்டு

மனித புதைகுழி விவகாரங்களை இலங்கையின் எந்த அரசாங்கமும் இதுவரை முழுமையான அரசியல் உறுதிப்பாட்டுடன் அணுகவில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை தேடியறியும் குழுவினர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

செம்மணி, மன்னார், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விசாரணைகள் அரசாங்கத்தின் ஊக்கமின்மையால் தடைப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாமை, பொலிஸாரின் ஒத்துழைப்பு பஞ்சம், மற்றும் நிபுணர்களின் ஒருங்கிணைவு பற்றாக்குறை ஆகியவை அகழ்வுப் பணிகளை தடை செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன.

மீட்கப்படும் எச்சங்கள் எந்த காலத்துக்கு உரியவை என்பதனை உறுதிப்படுத்த வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் நிதியளிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை. சந்திரிகா, ரணில் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டங்களிலும் இந்த விடயத்தில் 100% அரசியல் உறுதிப்பாடு காணப்படவில்லை என்பதே மிக முக்கியமான உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.