உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் 15 தேர்தல் மாவட்டங்களில் அனுர குமார திசாநாயக்கவுக்கு முதலிடம் – செல்லுபடியற்ற வாக்குகளில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கு முதலிடம்!

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.

 

இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

 

அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பட்டியலில் முழுமையான இலங்கை தீவிலும் அதிகப்படியான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கொண்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விருப்பு வாக்கு நோக்கி நகர்த்தப்பட்டது இலங்கை ஜனாதிபதி தேர்தல் !

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவிதித்துள்ளது.

இதற்கமைய, விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெளியாகும் தேர்தல் முடிவுகள் – வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளின் அரைவாசியை கூட பெறாத தமிழ்பொதுவேட்பாளர் !

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகின்றார். அண்மைய நிலவரப்படி 43.73 சதவித வாக்குகுளுடன் அனுரகுமார முன்னிலை வகிப்பதுடன் 30.24 சதவீத வாக்குகுளுடன் சஜித்பிரேமதாஸ இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேவேளை தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு பாரிய ஆதரவு இருப்பதாக பிரச்சார காலத்தில் கூறப்பட்ட போதிலும் கூட தமிழர்பபகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி சஜித்பிரேமதாஸ பெற்ற வாக்குகுளின் அரைவாசியை கூட தமிழ்பொதுவேட்பாளரால் பெறமுடியவில்லை என்பதையும் வாக்கு விகிதங்கள் தெளிவாக காட்டிநிற்கின்றன.

Vanni District – Total
வன்னி மாவட்டம் – மொத்தம்
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – kopay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Udupiddy Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Manipay Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
யாழ்ப்பாண மாவட்டம் – ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Kankesanturai Electorate
யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text
Jaffna District – Chavakachcheri Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி
May be an image of 4 people and text
Jaffna District – Kilinochchi Electorate
யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி
May be an image of 4 people, newsroom and text

தேர்தல் கண்காணிப்பில் 8000 கண்காணிப்பாளர்கள் – இலங்கை வரலாற்றின் அமைதியான தேர்தல் !

உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சுமார் 8000 கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் நடைபெற்ற நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், இன்றைய தினம் தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்குகள் எண்ணும் செயன்முறையையும் கண்காணிக்கவுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

இத்தேர்தல் செயன்முறை சுதந்திரமானதும் நியாயமானதும் முரண்பாடுகள் அற்றதுமான விதத்தில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 8000 பேர் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையிலான 68 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், பொதுநலவாய அமைப்பின் சார்பில் சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் சார்பில் 10 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சர்வதேச நாடுகளின் சார்பில் சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று உள்நாட்டில் இயங்கிவரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (பெப்ரல்) சார்பில் சுமார் 4000 கண்காணிப்பாளர்களும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான பிரசாரத்தின் (கஃபே) சார்பில் 1750 கண்காணிப்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கஃபே அமைப்பினால் 120 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மாக்கீன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் முக்கிய தேர்தல் மாவட்டங்களை இலக்காகக்கொண்டு 25 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், அக்குழுக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இக்கண்காணிப்பாளர்கள் அனைவரும் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்னரான பிரசார செயன்முறைகள், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு செயன்முறை, வாக்கு எண்ணல் மற்றும் முடிவு அறிவிக்கும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலை ஆகியவற்றை பரந்துபட்ட ரீதியில் கண்காணித்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவும், இந்நிலை தொடர்வதன் ஊடாகவே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியானது மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதம் – யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க செல்லாத 35 சதவீத வாக்காளர்கள் !

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, 17,140,354 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன.

இதேவேளை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  சற்றுமுன்னர் நிறைவடைந்து.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

நுவரெலியா 80%,
மொனராகலை – 77%,
பொலன்னறுவை – 78%,
இரத்தினபுரி – 75%,
கம்பஹா – 80%,
கொழும்பு- 75% – 80%,
அம்பாறை – 70%,
கிளிநொச்சி – 68%,
புத்தளம் – 75%

வன்னி 70%

யாழ்ப்பாணம் 65%

எகிறும் தேர்தல் முறைப்பாடுகள் – 24 மணித்தியாலங்களில் 337 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதில், சட்ட மீறல்கள் தொடர்பில் 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளில் 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார்.

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கட்சியின் அகில இலங்கைக் நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்கிறையானது மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம்!

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ

நாட்டை விட்டு வெளியேறினார் பஷில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

அதன்படி இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளதுடன் அவர் அங்கு இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேளை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.