உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா செல்லும் அனுர குமார தரப்பு !

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும்  விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா  இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.

 

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாவித்த தண்ணீருக்கான கட்டணத்தை கூட செலுத்தாத 40க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும்.

 

பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!
தம்பி தம்பிராஜா – அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு

 

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர், நாடகக் கலைஞர் மாவடி ஏ ஆர் சிறிதரனுடன் நேர்காணல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது அனுர தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – எம்.ஏ. சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​ தெரிவித்தார்.
அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

வவுனியாவில் காணி பிணக்கினால் வாள்வெட்டு – இருவர் பலி !

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி !

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது,தோல்வியi தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிகார சமநிலையை பேண எம்.ஏ.சுமந்திரன் அவசியம் – அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.

அறிவிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் !

பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

01. பிமல் ரத்நாயக்க

02. பேராசிரியர் வசந்த சுபசிங்க

03. கலாநிதி அனுர கருணாதிலக்க

04. பேராசிரியர் உபாலி பனிலகே

05. எரங்க உதேஷ் வீரரத்ன

06. அருணா ஜெயசேகர

07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

08. ஜனித ருவன் கொடிதுக்கு

09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி

10. ராமலிங்கம் சந்திரசேகர்

11. கலாநிதி நஜித் இந்திக்க

12. சுகத் திலகரத்ன

13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர

14. சுனில் குமார் கமகே

15. காமினி ரத்நாயக்க

16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

17. சுகத் வசந்த டி சில்வா

18. கீர்த்தி வெலிசரகே

19. சமிலா குமுது பிரிஸ்

20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்

21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா

22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்

23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்

24. ரொமேஷ் மோகன் டி மெல்

25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ

26. புபுது நுவன் சமரவீர

27. சரத் லால் பெரேரா

28. அனுர ஹெட்டிகொட கமகே

29. ஹேமதிலக கமகே