சப்ரகமுவ மாகாண பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி, பாணந்துறை வீதியிலுள்ள சப்ரகமுவ மகா சமன் தேவாலய முன்றிலில் நடத்திய பேரானந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களின் விபரங்கள்;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முன்னாள் முப்படைகளின் தளபதி ஏர்சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப் படைகளின் கட்டளை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த நாணயக்கார, விமானப்படைத்தளபதி ஏயார் மாஷல் ரொசான் குணதிலக்க, பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரட்ன, சிவில் பாதுகாப்பு படையினரின் கட்டளை அதிகாரி அட்மிரல் சரத் வீரவன்ச ஆகியோருக்கு பேரானந்த விருது வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை இரத்தினபுரி, கேகாலை மாவட்ட அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, மகிந்த ரட்னதிலக்க, பி. ஜயசேகர பவித்ரா வன்னியாராச்சி, எச்.ஆர். மைத்திரிபால, மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத், மாகாண அமைச்சர்களான ஜி.எம். கருணாபால, ஜானக்க வக்கும்புற, ஸ்ரீலால் விக்கிரமசிங்க, ரஞ்சித் டி சொய்சா, தலைவர் அத்துலகுமார ராகுபத்த, உபதலைவர் ரஞ்சித் பண்டார ஆகியோர் வழங்கினர்.
இவர்களுக்கான சன்ளஸ் பத்திரங்களை இம்மாகாண சிரேஷ்ட பௌத்த குருமார்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.