செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள ஒமிக்ரோன் – இந்தியா உட்பட 29 நாடுகளில் ஊடுருவல்!

இந்தியாவிற்குள்ளும் ஒமிக்ரோன் தொற்று ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன.

குறிப்பாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“பயணத்தடைகளால் ஒமிக்ரோன் வைரஸை கட்டுப்படுத்த முடியாது.” – உலக சுகாதார ஸ்தாபனம்

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டஒமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பாதிப்புள்ள தென்னாபிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹொங்கொங், பிரித்தானியா, உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததுள்ளது.

மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும் என்றும் ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கரு்கலைப்பு உரிமை பிறக்காத மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.” – மைக் பென்ஸ்

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய 1973 ஆம் ஆண்டு ரோ வி வேட் வழக்கை இரத்து செய்யுமாறு முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த தீர்ப்பு மில்லியன் கணக்கான பிறக்காத குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான முடிவு என்றும் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 15 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பைத் தடைசெய்யும் மிசிசிப்பி சட்டத்தின் மீதான வாதங்கள் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இதனை அடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு அடுத்த கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு தீர்ப்பு அமெரிக்காவில் பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமையையும், இரண்டாவது மூன்று மாதங்களில் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் வழங்கியது.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ள 17 நாடுகளும் இவை தான் !

ஒமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு:-

1. தென்ஆப்பிரிக்கா
2. ஹாங்காங்
3,. போட்ஸ்வானா
4. ஆஸ்திரேலியா
5. இத்தாலி
6. ஜெர்மனி
7. நெதர்லாந்து
8. இங்கிலாந்து
9. இஸ்ரேல்
10. பெல்ஜியம்
11. சுவிட்சர்லாந்து
12. கனடா
13. பிரான்சு
14. ஸ்பெயின்
15. போர்ச்சுக்கல்
16. டென்மார்க்

17. செக் குடியரசு

வென்றது இந்திய விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டம் – வேளான் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம் !

இந்தியாவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த போராட்டத்துக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்திகதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்து அதன் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரோன் பயங்கரமானது இல்லை – இங்கிலாந்து விஞ்ஞானி அறிவிப்பு !

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாதென இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா ஒமிக்ரான் குறித்து உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாது- இங்கிலாந்து விஞ்ஞானி –  Athavan News

அந்தவகையில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு குறித்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளதாவது, இது பேரழிவை ஏற்படுத்தாது.

மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன். இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கிய உகாண்டா – பறிபோகவுள்ள விமான நிலையம் !

ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா நாடு ஏழ்மையான நிலையில் உள்ளது. அந்த நாடு சீனாவிடம் கடந்த 2015-ம் ஆண்டு கடன் வாங்கியது. கடனுக்கு ஈடாக உகாண்டாவில் உள்ள எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்கள் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது. 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசு திணறி வருகிறது.
கடனை செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசு சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்வது உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.
அதேசமயம், உகாண்டா விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளரும், ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான சீன டைரக்டர் ஜெனரலும் மறுத்துள்ளனர்.

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் – அறிகுறிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள் உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரோன்   நோய் அறிகுறிகள் சம்பந்தமாக தென் ஆபிரிக்காவின் மருத்துவ பேரவை அடிப்படையாக ஆய்வுகளை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

தசைவலி, லேசான இருமல், உடல் சோர்வு என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய நோயாளிகளிடம் காணப்பட்ட வாசணையை நுகர முடியாத தன்மையை இந்த புதிய வைரஸ் திரிபிடம் காண முடியவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவப் பேரவையின் மருத்துவர் எஞ்சலிக் கோழுடிசி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபு பரவுகிறது என்ற எச்சரிக்கையை இந்த மருத்துவரே முதலில் விடுத்திருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி தன்னிடம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

தொற்றாளர்களிடம் நடத்தப்பட்ட மரபணு ரீதியிலான ஆக்கிரமிப்பு சம்பந்தமான பரிசோதனைகளில் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் பரவியது என்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே நேரம் புதிய வகை கொரோனா இலங்கைக்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க தீர்மானம் !

நாய் இறைச்சிக்கு தடை விதிப்பது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

தென் கொரியா நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சராசரியாக பத்து லட்சம் முதல் 15 லட்சம் நாய்கள் வரை கொல்லப்படுகின்றன.

இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், தென் கொரியா அரசு நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்துத்துறை பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.