செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொழும்பில் இன்றிரவு முதல் 9 மணிநேர நீர்வெட்டு – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பு பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்றிரவு 9.00 மணி முதல் நாளைக் காலை 6.00 மணி வரையான 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரமாட்டார்

carl-bildt-swe-foreigh-mini.jpgசுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தரமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுவீடன் அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு எதனையும் விடுக்கவில்லை எனவும், இதன் காரணமாக சுவீடன் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும் தெரியவருகிறது.எனினும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் வேறொரு நாளில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பகுதிகளுக்கு எம். பி.க்களாகிய எங்களால் கூட செல்ல முடியாது – இந்தியாவில் சம்பந்தன்

tna_.jpgதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு பிரதிநிதித்துவம் வகிக்கும் பகுதிகளுக்குகூட எம்.பி. க்களாகிய நாங்கள் செல்லமுடியாத நிலைமை இருப்பதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளியாகும் “ஸ்ரேற்ஸ்மன்’ பத்திரிகைக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இதனை தெரிவித்திருக்கும் சம்பந்தன் உண்மையில் நாங்கள் நீதியற்றமுறையில் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ நாம் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய பகுதிகளில் தமிழர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்படுவது தொடர்பான தகவல்களை எமக்குள்ள தொடர்புகள் மூலம் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளை புதுடில்லியில் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது மோதல் சூன்யப் பகுதியிலுள்ள மக்களின் “வாழ்வதற்கான உரிமையை’ நாங்கள் கேட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார். தற்போதைய தருணத்தில் எமது கரிசனை மோதல் சூன்யப்பகுதியிலுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் பற்றியதே என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

தினமும் அதிகளவு இழப்புகள் ஏற்படுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொதுமக்களை புலிகள் மனிதக்கேடயமாக வைத்திருப்பதாக கொழும்பு தெரிவித்திருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது அநேகமான மக்கள் வன்னிப்பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அப்பிராந்தியம் வழமையாக புலிகளின் ஆதரவு தளம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சனச்செறிவான இடத்திற்கு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தன் இலங்கையின் கள நிலைவரத்தை சர்வதேச சமூகம் இப்போது விளங்கிக் கொண்டுள்ளதாக தென்படுகின்றது.

என்றும் பல்வேறு விதமான போர்வைகளில் தமிழர்கள் வேருடன் அப்புறப்படுத்தப்படுதல் அல்லது படுகொலைகள் என்பன பற்றி மெதுவாக விழித்தெழுவதை காண முடிகின்றது எனவும் வாக்குரிமை பறித்தல் மற்றும் அரச ஏற்பாட்டுடனான நிகழ்ச்சித்திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan-10.jpgபாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர்.  இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

teelamanavar.jpgபுலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்

புலம் பெயர் தமிழர்களே!

இளையோர்கள!

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…

இளையோர்களே !…

சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.

தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.

இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.

ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.

புலம் பெயர் தழிழாகளே !….

இளையோர்களே !….

உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க இலங்கை உஷார்

mexico_flu_.jpgஉலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முன்னேற்பாடுகளை அமைச்சின் உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெவ்வேறு பிரதேசங்களில் இக்காய்ச்சல் பரவி வருகின்றது. இக்காய்ச்சலுக்கு மெக்ஸிகோ நாட்டில் மாத்திரம் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1500 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டே இக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்முன்னேற்பாட்டின் ஓரங்கமாக கொழும்பு துறைமுகத்திலும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இதேநேரம் இக்காய்ச்சலைத் தவிர்க்கும் திட்டத்தின் மற்றொரு அங்கமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருப்பவர்கள் எவராவது இனம் காணப்படுவார்களாயின் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும் இவ்வாறானவர்களின் இரத்தமாதிரிகளை உடனடியாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் மத்தியில் அதிக காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டை சுழற்சி, இருமல் போன்றவாறான அறிகுறிகள் தென்படலாம், இக்காய்ச்சல் சில நேரம் நியூமோனியாவாகக் கூட வளர்ச்சி பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட வைத்திய சேவை – கிழக்கிலிருந்து வைத்தியர் குழு விரைவு

puthumathalan.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கு விசேட வைத்திய சிகிச்சையை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார். புல்மோட்டை, செட்டிக்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு விசேட வைத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை வைத்தியசாலையில் இருந்து டாக்டர் அஜ்வத் தலைமையிலான 4 வைத்தியர்களும், 4 தாதியர்களும் செட்டிக்குளத்திற்கும், மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் அச்சுதன் தலைமையில் 4 வைத்தியர்களும் 5 தாதியர்களும், வவுனியா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புல்மோட்டையில் வைத்திய சிகிச்சை அளிக்க டாக்டர் டிக்சன் தலைமையில் 4 வைத்தியர்களும் 4 தாதியரும் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிக்க குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான சுகாதார வைத்திய அதி காரிகள், தொற்று நோயியல் நிபுணர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

குடிநீரை மாசுபடுத்தினால் இரட்டிப்புத் தண்டனை – விரைவில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம்

sri-lanka-parliament.jpgசட்ட விரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளுதல், குடிநீரை மாசுபடுத்தல், குளங்கள், ஓடைகளுக்கு கழிவுநீரை திறந்துவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

1974 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர்வழங்கல் சட்டம் 1992 ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இன்று 16 வருடங்கள் கடந்த நிலை யிலும் இதனையே அமைச்சு இன்னும் பின்பற்றி வருகிறது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அன்றையதை விட இன்று மிகக் கூடுதலான நீர்வழங்கல் திட்டங்களை பராமரித்துவருகிறது. எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவகையில் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதையடுத்தே அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீரை மாசடையச் செய்தல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றுக்குள் கழிவு நீரை திறந்து விடல், கழிவுகளை வீசுதல், குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நீர் மானியில் மோசடி செய்தல், சட்டவிரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை அறவிடப்பட்ட தண்டப்பணத்தை இரட்டிப்பாக்குவதும் சட்டதிருத்தத்தில் பிரதானமாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமாக குடிநீரைப் பெறுவதையும் நீரை வீண் விரயம் செய்வதையும், தடுக்கும் நோக்குடனேயே இச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்