எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்

Senan._._._._._.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற இப்போராட்ட முன்னெடுப்புக் கூட்டத்தில் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சர்வதேச இணைப்பாளராக சேனன் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். ஏப்ரல் 8ல் உலகின் பல்வேறு நகரங்களிலும் இலங்கை அரசின் படுகொலைக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்க இப்போராட்டக் குழு திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
._._._._._.

நாம் இங்கு ஒரு மிக முக்கியமான கூட்டத்தில் கூடி இருக்கிறோம். எல்லோருக்கும் தெரியும் இலங்கையில் வட-கிழக்குப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று. இப்பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் சாய்ந்ததின் பின்னர் அமெரிக்காவும் ஆளும் வர்க்கங்களும்  தாம் எந்த வகையான கொலைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கிலும், அதே போல இதர அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் இப்படியான  யுத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியே இலங்கையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈராக்கில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம். இதற்குப் பிறகு இந்த ஆளும் வர்க்கம் தான் எதையும் செய்யலாம் என்ற போக்கில் இலங்கையில் இந்த யுத்தத்தை திறம்பட நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பரீட்சார்த்த களமாகவும், இலங்கை அரசக்கு தமிழ் பேசும் மக்கள் மீது தனது விருப்பத்திற்கேற்ப  எதேட்சாதிகாரப் போககை நடாத்துவதற்கும் இடமளித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள், போர்த் தந்திரங்கள், போர் நடைமுறைகள், சர்வதேச உறவுகள், முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார உறவுகள், ஆளும்வர்க்கம் தனது வர்க்திற்கான உதவிகள் எல்லாமே இந்த யுத்தத்தில் மிகவும் கெட்டித்தனமாக பாவிக்கப்படுவதை பார்க்க்க கூடியதாக உள்ளது.

வடக்கு – கிழக்கு நிலைமைகள் எப்படி கையாளப்படுகிறது, அங்கே நடக்கும் கொலைகள், அங்குள்ள அரசியல்ப் பிரமுகர்கள் தேசிய மயமாக்கல் என்று அரசு உள்வாங்குதல், தெற்கில் பத்திரகையாளர்கள் கொல்லப்படுவது, வெள்ளைவான் கொலைகள், ஜனாதிபதியின் சகோதரர் பத்திரகைச் சுதந்திரத்துக்கு கொடுக்கும் விளக்கம் போன்ற விடயங்கள்; என்ன விடயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் சிந்திக்க வேண்டும்.

உலக வங்கி இலங்கையை  red list  பண்ணிய பிறகும், தெற்கில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரிசி மா. எண்னைக்கு படும்பாடுகள். ஆனால் அரசு இராணுவத் தேவைக்கு செலவிடும் தொகை மிக மிக அதிகம். ஆனால் இதை சர்வதேச சமூகமும் உலக நிதி நிறுவனங்களும் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இதில் தமது நலன்கள் பாதிக்கப்படவில்லை என்பதலேயேதான் இவர்கள் இப்படி பார்த்துக் கொண்டீருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் தனது இலங்கைக்கான அலுவலகத்தை மூடியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன்களை கடன் கேட்டும் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழமைபோல தனது கட்டுப்பாடுகளை வைத்தே இந்த உதவியை செய்யும். இதனால் கஸ்டப்படப் போவது ஏழை மக்களும் தொழிலாளிகளுமே. இது 70 சதவிகித இராணுவச் செலவீனத்தை கொண்ட நாட்டில் மேலும் ஏழைகளின் தொழிலாளிகளின் வாழ்க்கையில் பதிப்புக்களையே வளர்க்கும.

மிகக் குறுகிய காலத்தில் 3000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது அண்ணளவான கணிப்பீடு. சர்வதேச அமைப்புக்களோ ஊடகவியலாளர்களோ இல்லாத இந்தப் பிரதேசத்தில் வேறு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளது.

ஜனவரி 2ம்திகதி கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு தமிழ் மக்கள் 250,000 பேரை ஒரு மூலைக்குள் ஒடுக்கி வைத்து உணவு, நீர் வசதிகள் இல்லாது விட்டுவிட்டு மட்டுமல்ல இவர்கள் மீது குண்டும் போடுகிறது இலங்கை அரசு. அந்தப் பகுதிக்கு எந்த ஊடகவியலாளர்களையோ, சர்வதேச உதவி நிறுவனங்களையோ அனுமதிக்காது எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டு இப்படி செய்வது உலகில் என்றுமே நடக்காத ஒருவிடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்த சர்வதேச சமூகம், என்றும் மனிதாபிமானம் உள்ள சமூகம் என்பவர்களும், இந்தியாவும் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.

தப்பி வரும் மக்கள் குறுக்கு விசாரணைகள் என்ற பெயரில் மேலும் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எப்படியான சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள் என்ற மனித நேயம் அற்று இவர்களிடம் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது. இந்த மக்கள் இராணுவம் மீது பயப் பீதியையே கடந்த 25 வருடங்களாக கொண்டுள்ளனர். இப்படியான மக்கள் மீது குறுக்கு விசாரணைகள் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்வது போன்றவை மனித உரிமைமீறல்களே!

இந்த மோசமான அரசக்கு எதிராக யார் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாது என்று உணர்கின்ற தமிழர்கள் தம்மை தாமே எரியூட்டிக் கொள்கிறார்கள். இது எதுவுமே செய்ய முடியாத நிலையிலிருந்தே வருகிறது. இப்படியான செயல்கள் சரியானத அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் கொடுமையான அரசு, மிக கொடுமையாக நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள், தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாவதும், தனது சொந்த உறவுகளுக்கு இப்படி நடப்பதை அவர்கள் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் யாரும் இந்த விடயங்களை தட்டிக் கேட்காத நிலையிலும்தான் இந்தக் தீக் குளிப்புக்கள் நடைபெறுகின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால்த் தான் நாம் இங்கே கூடியுள்ளோம். அத்துடன் நாம் என்ன செய்ய முடியும் எப்படி செய்ய முடியும் என்ற ஆய்வுகளை செய்து செயற்ப்பட வேண்டும். சிலர் சொல்லக் கூடும் – இந்தியா உதவலாம் சர்வதேசம் உதவலாம் என்று. நாம் இது பற்றியும் யோசிக்க வேண்டும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று.

இந்தியாவின் அண்மைக்கால இலங்கை பற்றிய  நிலைப்பாடுகளைப் பார்ப்போமானால்; 2000 மார்ச்சில் இந்தியா இலங்கையுடன் ஒரு சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை செய்தது  இதனால் இலங்கையின் இந்தியாவிற்கான வியாபாரத்தில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கையில் உற்ப்பத்தி செய்யப்படும் பொருட்களில் 95 சதவிகித பொருட்கள் வரி இல்லாமல் இந்தியாவிற்குள் வருகிறது. இது இந்தியாவின் அடுத்த மாநிலம் போன்றே செயற்ப்படுகிறது. இதே போல பாரிய மாற்றங்களுக்கு இந்திய – இலங்கை வர்த்தக நிலைமைகள் மாற்றமடைந்துள்ளது. 28வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 13வது இடத்திற்க்கு தனது திறந்த பொருளாதார மாற்றத்தை திறந்ததின் மூலம் பல்வேறு பல்தேசியக் கம்பனிகளை இலங்கை மக்களின் உழைப்பை சுரண்ட திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேற்க்கத்தய இந்திய கம்பனிகள் தற்போது இலங்கையில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இலங்கையில் 50 சதவிகித்திற்கு அதிகமான வங்கிகள் வெளிநாட்டுக் கம்பனிகளாகும் மேலும் பாரிய 4 இந்திய வங்கிகள் தற்போது வந்துள்ளது.

இலங்கையில் உள்ள பாரிய கம்பனிகளான எண்ணைக் கம்பனி, தேயிலைக் கம்பனி, பஸ் கம்பனி ஆகியன தற்போது இந்தியாவின் கைகளிலேயே உள்ளது இதிலிருந்தே இந்திய அரசியற் கொள்கைகள் இலங்கையுடன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் இது எதை சொல்கிறது என்றால் இந்தியா இலங்கையுடன் இனிமேல் பகைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதேயாகும்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பாக்கிஸ்தான் சீனா இரு நாடுகள். ஆகவே இந்தியா இலங்கையை குழப்பாமல் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஐனவரி மாதம் 27ம் திகதி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அன்று 46 தமிழர்கள் வன்னியில் கொல்லப்படுகினறனர். 178 தமிழர்கள் அங்கவீனர்களாகி உள்ளனர். யுத்தம் பற்றி இந்த மக்கள் பற்றி ஒரு வசனம் பேசாமல் போகிறார் என்றால் இந்தியா இலங்கைக்கு என்ன சொல்லுகிறது? இந்தியா இலங்கைக்கு எதுவரை? போய் உதவி செய்கிறது என்பதை பார்க்க வேண்டும் இதேவேளை இலங்கை இந்தியாவிற்கு எதை காட்டடியுள்ளது என்றால் நாம் “தமிழர்களைக் கொல்லுவோம்” என்று தெட்டத் தெளிவாக கூறியுள்ளது என்பதேயாகும். இதை இலங்கை அரசு இந்திய ஆளும் கட்சியுடன் கைகோர்த்த படியேதான் இதை சொல்லியுள்ளது.

65 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் மக்கள் தீக்குளிக்கிறார்கள் ஆளும் வர்க்கத்தை தமிழ் நாட்டிலும் சரி மத்திய அரசிலும் சரி நம்ப முடியாது மக்கள் கோசமிடுகிறார்கள். இந்த கோசமிடும் மக்களை எப்படியாவது அடக்கிவிடுகிறார்கள். எல்லா கட்சிகளுமே தமது தேர்தல் கூட்டணிக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறார்கள். சர்வதேச தமிழர் பாதுகாப்பாளர் வை. கோ கூட இதைத்தான் செய்கிறார்.

பிரிட்டன், அமெரிக்கா  எத்தனையோ தரம் யத்தத்தை நிறுத்தும்படி கேட்டும் இலங்கை மறுத்து விட்டது. இவர்கள் ஏற்கனவே ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமது இரத்தம் தோய்ந்த கைகளுடன் இருப்பவர்கள் எப்படி இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த முடியும் இவர்களிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

பிரிட்டனின் அமைச்சரவையில் புலிகளின் அழிப்பின் பின்னர் தான் நிரந்தர சமாதானம் வரும் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இது எல்லாமே தமது அடுத்த வர்த்தக நோக்கங்களை அடிப்டையாக வைத்தே பேசப்பட்டதே அன்றி தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் அல்ல.

இப்படித்தான் தான் இந்தியாவின், சர்வதேசத்தின் அக்கறையும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 250,000 மக்கள் பட்டினியாலும் குண்டுகளாலும் கொல்லப்படும போது எமக்கு அந்த மக்களில் அக்கறையுண்டு என்று சொல்வதில் மட்டுமே அக்கறை. தமிழ் மக்களில் அல்ல என்பது தெட்டத் தெளிவானதேயாகும். இது மட்டுமல்ல Obama for tamils –  Tamil for Obama ம் எப்படியான பேய்க்காட்டல்கள் என்பதும் எப்படியாக ஒப்பேற்றப்பட்டு தமது தேர்தல் மற்றும் ஆளும் வர்க் நலன்கள் பேணப்படுகிறது என்பதும் எமக்கு தெட்டத் தெளிவாகிவிட்ட தொன்றாகும்.

இந்த யுத்தத்தை யாரும் நிறுத்தப் போவதில்லை. யார் எது என்ன சொன்னாலும் தமிழர்கள் தான்  போராட வேண்டும். இங்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள்தான் போராட வேண்டும் அதைத்தான் அந்த தமிழர்கள் செய்கிறார்கள். பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளில்  செய்யப்படும் போராட்டத்திற்குத்தான் அரசுகள் பயப்படுகிறது. ஆகவே போராட்டம் தான் ஒரே வழி அதைத்தான் தொடரந்தும் செய்ய வேண்டும். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இந்திய அரசம் இலங்கை அரசம் எவ்வாறு பயந்து போயிருந்தன என்பதும் அதன் வெளிப்பாடுகளுமே சாட்சியமாக உள்ளது.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்.

நாங்கள் சென்னையில் முன்னணி இடது சாரிகளையும் எழுத்தாளர்களையும் அரசியல் வாதிகளையும் அழைத்து இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். United Socialist Party சிறீதுங்க ஜெய சூரிய இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஒரு சிங்கள மகன் தனது நாட்டின் மற்ற சகோதர தமிழ் மக்களுக்காக இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அங்கு ஒரு கமிட்டியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கமிட்டியே மத்திய கமிட்டியாக செயற்ப்படும் என்றும் அன்று ஏப்ரல் 8ம் திகதியை ஒரு சர்வதேச பிரச்சார தினமாகவும் தெரிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே இன்று ஒரு கமிட்டியை தெரிவு செய்ய உள்ளோம் இது ஜரோப்பிய அமெரிக்க நாடுகளின் பிரச்சாரத்தை முன்னின்று நடாத்தும். அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

‘தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே வேளை, கடந்த சில தினங்களில் புலி உறுப்பினர்கள் யால சரணாலய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு முழுமையாக பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்துவர் என அஞ்சத் தேவையில்லை எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றி கரமாக முன்னெடுத்துவரும் அரசாங்கம் நாட்டின் பாது காப்பு தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் யால பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்ட ங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.

யால பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஊடக மத்திய நிலையம் கோரியுள்ளது. யால சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு

mahi-hasan.jpg உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்னே மற்றும் இந்தோனேசியத் தூதுவர் டிஜார்ஹ¥கன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேற்படி ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந் தோனேஷிய அரசின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடாவும் கைச்சாத்தி ட்டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ் உத்தியோகபூர்வ சந்திப் பின் போது இருநாடுகளும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகள் பல கலந்துரையாடலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதார நெருக்கடி நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவ டிக்கைகள் இலங்கையில் தற்போதைய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத் திட்டங்கள் பற்றியும் இந்தோனேசிய அமைச்சருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதில் மக்கள் சிரமம்

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. எனினும் அரச கடமையின் நிமித்தம் நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்கின்ற திணைக்களத் தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் தமது வாகனங்களில் இந்த சோதனைச்சாவடி ஊடாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி இப்போது மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் முக்கிய அலுவல்களுக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகப் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

1694 பொதுமக்கள் வருகை

_mullai_1.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த மேலும் 1694 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 1694 சிவிலியன்களும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,467 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு

இவ் வருடத்தில் மேலும் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று தெரிவித்தது. மின்சார இணைப்புப் பெறுவதற்கு விண்ணப்பித்து 2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

2 வாரத்தினுள் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் எதுவித இடைஞ்சலும் இன்றி மின்சார வசதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதோடு மின்சார இணைப்பு பெறுவதில் உள்ள தனிப்பட்ட மற்றும் வேறு காரணங்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக துரித தீர்வு காணவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் 80 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பிரச்சினைகள் உள்ள சுமார் 2600 விண்ணப்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மின் இணைப்பு வழங்குவதில் வீடுகளுக்கு அருகில் உள்ள பாதைகள் தொடர்பான பிரச்சினைகள் பிரதேச செயலகங்களின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

சகல மக்களுக்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பெருமளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஈரான், சீடா மற்றும் ஆசிய அபிவிருத்தி கிராமிய மின்சார திட்டம் என்பவற்றினூடாகவும் மேலும் பல திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இவற்றினூடாக இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

மின்சார நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல பாரிய மின்சாரத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு அவை 2012 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளன. இதனூடாக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சு கூறியது.

இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. சுண்ணாகம் 30 மெகா வோர்ட் மின்சாரத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதனூடாக யாழ். குடா மக்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.

‘மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்’- சிவ்சங்கர் மேனன்

menon.jpgஇலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் அரசு தூண்டி விடுவதாக விசனம் -ஹக்கீம்

hakkeem.jpgகிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் வெளியிட்டார்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமும் பன்மைத்துவமும் எனும் கருப்பொருளிலான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது;  எமது நாடு இன்று பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இத்தகையதொரு மாநாடு இடம் பெறுவதானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சர்வதேசத்தின் கவனம் இன்று தென்னாசியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பக்கம் திருப்பப்பட்டிருப்பதை காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் அண்மைய அறிக்கையையும், அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையும் தென்னாசிய சிறுபான்மை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், ஆயுதப் போராட்டக் குழக்களாகவும் பார்க்கின்ற ஒரு போக்கையே காண முடிகிறது. மேற்குலக போக்கு உலகில் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்பதாகவே உள்ளது. இது இஸ்லாமிய உலகம் இன்று எதிர் கொண்டிருக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.

இது இவ்விதமிருக்க இலங்கையிலும் காலத்துக்குக்காலம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கலாசாரத்தின் பக்கம் புகுந்து விடாமலும் மேலாதிக்க தேசியவாதத்துக்கு அடிபணியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆயதப் போராட்டத்துக்கு முயற்சிக்கவுமில்லை. அதற்குத்துணைபோகவுமில்லை. தெற்கில் முஸ்லிம்களும், சிங்களவரும் சமாதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும், புரிந்துனர்வுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.. இதேபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களும், தமிழரும் ஒன்றாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் போன்று சமர சமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேரினவாதச் சக்திகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர் மனங்களில் நச்சுவிதையை விதைக்கும் வேலையை தொடங்கினர். இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு வளர்க்கப்பட்டது. இதன் தாக்கத்தை வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டனர். தேசிய அரசியலிலிருந்து தமிழர் ஓரங்கட்டப்படுவதை உணரத் தொடங்கியதும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தங்களது உரிமைக்காக ஆயுதமேந்த முன்வந்தனர்.

இதேபோன்று இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழும் தமிழ் மக்களால் ஓங்கட்டப்படுமோ என்ற அச்சமும் இன்று உருவாகியுள்ளது.

இன்று அரசு பிரலாபித்துவரும் யுத்த வெற்றிப் பேரிகை முழக்கத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்லவிளைகின்றது. பேரினவாதத்துக்குத் துணை போயுள்ள அரசாங்கம் சிங்கள மக்களின் உணர்வுகளை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகப் பாரதூரமானவையாகவே அமையலாம். இதுதான் தமிழ், முஸ்லிம், மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளக் காரணமாகும்.

இத்தகையதொரு நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இஸ்லாம் பற்றியும் பன்மைத்துவம் பற்றியும் பேசமுற்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடையதாகவே நாம் காண்கின்றோம். பன்மைத்துவத்தின் அடிப்படையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவையாகும். இதனை மேற்குலகம் தெரிந்து வைத்திருந்தாலும் கூட முஸ்லிம் உலகை தன் காலடிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக தென்னாசியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தி செயற்பட முனைகின்றது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தின் மோட்சம் எனக்காட்ட மேற்குலகம் முனைகிறது எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

புதுமாத்தளனில் இருந்து மேலும் நோயாளர்கள் கப்பலில் புல்மோட்டை வந்தனர்

green-ocean.jpgகிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் திங்கட்கிழமை, 30 மார்ச் 2009 புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்தக் குழாமில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்  புல்மோட்டையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.