எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 

இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்—சிதம்பரம்

chidambaram1.jpgதமிழ்நாடு மற்றும் கேரள கடலோரம் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பாக குறிப்பான அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், அதே நேரத்தில் ஊடுருவலுக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.  

நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரித்தார்

அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான பாதுகாப்புப் படைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீதியடையத் தேவையில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் பல ஊடுருவல்களை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாகவும், எல்லா உளவுத் தகவல்கள் மீதும் திவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தேச மாலபே தனியார் பல்கலைக்கழகம் 30 வருடங்களின் பின்னர் அரசிடம் கையளிக்கப்படும்

pr-con-02042009.jpgமால பேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்  30 வருடங்களின் பின்னர் இலங்கை உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அமைச்சினால் நியமிக்கடும் செயற்குழு அதனை  நிருவகிக்கும் என பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும்; உரையாற்றுகையில், மாலபேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் காரணாக இலங்கையில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று  பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது எதுவித ஆதாரமுமற்று வெறும் யூகமாகும்.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இநத தனியார்  பல்கலைக்கழகத்தில் பல்கலை அனுமதி பெறாத 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி புகட்டப்படும். இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஐந்த வீதம் படை வீரர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுவதோடு இவர்களுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு – இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்களில் உடன்பாடு

இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்கள் சிலவற்றுக்கு இவ்வாரம் நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

எஞ்சிய விடயங்களுக்கு அடுத்தவார கூட்டத்தில் இணக்கப்பாடொன்றை எட்டிவிடலாமென நம்புவதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார். அரசியல் தீர்வு யோசனையொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏற்கனவே 95% விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டைக் கண்டுள்ளது.

இதில் ஏனைய விடயங்களிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வாரா வாரம் கூடி கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் இவ்வாரம் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் சில விடயங்களுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மீதமாகவுள்ள விடயங்களுக்கும் பொது இணக்கம் ஏற்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சிகளினதும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உள்ளடக்கி தீர்வுத் திட்ட வரைவொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டம்

arrahma.jpgஒஸ்கார் விருது பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கத் தீர்மானித்துள்ளது.  மிடில்செக்ஸ் பல்கலையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோ விக்டர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் ஆரம்பித்துள்ள இசைப் பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் ரஹ்மானுக்கு கலாநிதி பட்டம் வழங்க உள்ளதாக ஜோ விக்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தி்னால் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் வவுனியா கிளைக்கு வழங்கப்பட்டுள்ளன.

slrc.jpgஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வவுனியா கிளைக்கு இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கிளையினர் தெரிவித்தனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா பிரதேசத்திற்கு வந்துள்ளவர்களின் பயன்பாட்டிற்காக 12.6 மில்லியன் ரூபா பெறுமதியான அம்புலன்ஸ் வண்டிகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைத் தலைவர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு வைபவத்தில் தாய்ச்சங்கத்தின் செயலாளர் எஸ்.எச்.நிமல்குமார் அவறிற்குரிய ஆவணங்களை வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளித்தார்.

கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள்- இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தகவல்

dammika_perera_.jpgஇலங் கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்ககைக்குக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுகாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலீட்டுச் சபைத் தலைவர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,

இலங்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அதனால் பெருந்தொகையானோர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.

கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் 93 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த வருடத்தில் 7000 பேருக்கு இத்தொழிச்சாலைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 10 ஆயிரம் பேருக்கான வெற்றிடம் உள்ளது. இதனை எமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

தீர்மானங்கள் எடுக்கும் போது தொழிலாளர் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – உப குழுவின் பரிந்துரைக்கு இ.தொ.கா பதில்

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.

அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.

சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேலிச்சித்திரம் : கிழக்கான் ஆதாம்

Cartoon_By_Kilakkan_Adamபல நூறு சொற்களில் வரையப்படும் அரசியல் பிரச்சினையை ஒரு கேலிச் சித்திரத்தினூடாக மிக எளிமையாக வெளிப்படுத்திவிட முடியும். தமிழ் பத்திரிகைச் சூழலிலும் இக்கேலிச் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளரவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாய் இருந்ததால் அத்துறை வளர்ச்சியடையவும் இல்லை.

இவற்றின் பின்னணியில் தேசம்நெற் வாசகர் கிழக்கான் ஆதாம் கேலிச் சித்திரம் வரையும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது முயற்சிக்கு தேசம்நெற் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அவரது கேலிச் சித்திரங்களை தேசம்நெற் இல் பிரசுரிக்கவும் உள்ளோம். தேசம்நெற் வாசகர்கள் அக்கேலிச் சித்திரங்கள் பேசும் அரசியலையும் அக் கேலிச் சித்திரங்கள் பற்றிய தமது கருத்துக்களையும் பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சிலருக்கே கை வரப்பெற்றுள்ள இக்கலைவடிவம் கிழக்கான் ஆதாமுக்கு அமையப்பெற்றுள்ளது. இதனை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள தேசம்நெற் வாசகர்களும் தங்கள் கருத்துப் பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

தேசம்நெற்.

Cartoon_by_Kilakkan_Adam

கிழக்கான் ஆதாம்  

வர்ஷா கொலை மேலுமோர் சந்தேக நபர் கைது. .

Regie_Varsaமூன்று
வாரங்களுக்கு முன்னர் மூன்று கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.