எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan-10.jpgபாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர்.  இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

teelamanavar.jpgபுலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்

புலம் பெயர் தமிழர்களே!

இளையோர்கள!

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…

இளையோர்களே !…

சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.

தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.

இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.

ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.

புலம் பெயர் தழிழாகளே !….

இளையோர்களே !….

உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க இலங்கை உஷார்

mexico_flu_.jpgஉலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முன்னேற்பாடுகளை அமைச்சின் உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெவ்வேறு பிரதேசங்களில் இக்காய்ச்சல் பரவி வருகின்றது. இக்காய்ச்சலுக்கு மெக்ஸிகோ நாட்டில் மாத்திரம் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1500 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டே இக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்முன்னேற்பாட்டின் ஓரங்கமாக கொழும்பு துறைமுகத்திலும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இதேநேரம் இக்காய்ச்சலைத் தவிர்க்கும் திட்டத்தின் மற்றொரு அங்கமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருப்பவர்கள் எவராவது இனம் காணப்படுவார்களாயின் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும் இவ்வாறானவர்களின் இரத்தமாதிரிகளை உடனடியாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் மத்தியில் அதிக காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டை சுழற்சி, இருமல் போன்றவாறான அறிகுறிகள் தென்படலாம், இக்காய்ச்சல் சில நேரம் நியூமோனியாவாகக் கூட வளர்ச்சி பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட வைத்திய சேவை – கிழக்கிலிருந்து வைத்தியர் குழு விரைவு

puthumathalan.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கு விசேட வைத்திய சிகிச்சையை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார். புல்மோட்டை, செட்டிக்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு விசேட வைத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை வைத்தியசாலையில் இருந்து டாக்டர் அஜ்வத் தலைமையிலான 4 வைத்தியர்களும், 4 தாதியர்களும் செட்டிக்குளத்திற்கும், மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் அச்சுதன் தலைமையில் 4 வைத்தியர்களும் 5 தாதியர்களும், வவுனியா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புல்மோட்டையில் வைத்திய சிகிச்சை அளிக்க டாக்டர் டிக்சன் தலைமையில் 4 வைத்தியர்களும் 4 தாதியரும் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிக்க குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான சுகாதார வைத்திய அதி காரிகள், தொற்று நோயியல் நிபுணர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

குடிநீரை மாசுபடுத்தினால் இரட்டிப்புத் தண்டனை – விரைவில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம்

sri-lanka-parliament.jpgசட்ட விரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளுதல், குடிநீரை மாசுபடுத்தல், குளங்கள், ஓடைகளுக்கு கழிவுநீரை திறந்துவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

1974 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர்வழங்கல் சட்டம் 1992 ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இன்று 16 வருடங்கள் கடந்த நிலை யிலும் இதனையே அமைச்சு இன்னும் பின்பற்றி வருகிறது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அன்றையதை விட இன்று மிகக் கூடுதலான நீர்வழங்கல் திட்டங்களை பராமரித்துவருகிறது. எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவகையில் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதையடுத்தே அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீரை மாசடையச் செய்தல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றுக்குள் கழிவு நீரை திறந்து விடல், கழிவுகளை வீசுதல், குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நீர் மானியில் மோசடி செய்தல், சட்டவிரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை அறவிடப்பட்ட தண்டப்பணத்தை இரட்டிப்பாக்குவதும் சட்டதிருத்தத்தில் பிரதானமாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமாக குடிநீரைப் பெறுவதையும் நீரை வீண் விரயம் செய்வதையும், தடுக்கும் நோக்குடனேயே இச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

பர்மா மீதான ஐரோப்பிய தண்டனைத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.

பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ள பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு கோரல்

jaffna-map.jpgநீதிமன்றம், அரச அதிபர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடனேயே யாழ்.குடாநாட்டில் பொலிஸார் போக்குவரத்துக் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். இவற்றின் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கும் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றையும் பொலிஸாரின் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் பொலிஸாரினால் அமுல் படுத்தப்படுகின்ற வீதிக்கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்;

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி யாழ்.குடாநாட்டில் பொலிஸாரால் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக வீதிக் காண்காணிப்பு நடைமுறைப் படுத்தப்படாமையால் மக்களை அவற்றுக்குப் பழக்கப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவர்களுக்கான வீதிப் போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கிவருகின்றோம்.

குடாநாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தினமும் யாழ்நகருக்கு வருகைதருகின்றனர். யாழ்நகரில் அமுல்படுத்தப்படுகின்ற வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனை அவர்கள் தங்கள் பிரதேசங்களிலும் கடைபிடிக்கின்ற போது விபத்துகள் குறைகின்றன. இதனாலேயே வீதிக் கண்காணிப்பு நடைமுறையில் நகர்ப்புறத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ் வீதிக் கண்காணிப்பின் போது மோட்டார் சைக்கிள்களில் இருவர் பயணித்தால் அவர்கள் இருவரும் தலைக் கவசம் அணிவது முக்கியமானதாகும். அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் வாகன வரி அனுமதிப்பத்திரம் என்பனவும் பரிசீலிக்கப்படுகின்றன. அத்தோடு துவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாகச் செல்வோரும் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இவ் வீதிக் கண்காணிப்பின்போது உரிய ஆவணங்கள் இல்லாதோர் மற்றும் விதிகளை மீறுவோருக்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து தண்டம் விதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது பாடசாலை மாணவர்களுக்கும் வீதிப்போக்குவரத்து தொடர்பான விபரங்கள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கிறது.

இவற்றோடு யாழ்.குடாநாட்டில் மக்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்கின்ற பொலிஸார் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் கூறினார்.

நிலநடுக்க பாதிப்பு விபரங்களை தெரிவிக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் கோரிக்கை

alert_towers1.jpg அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை காலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கோரியுள்ளார். கரையோரப் பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், லகுகலை ஆகிய பத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தே இது தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

அதிகளவில் பொத்துவில், லகுகலை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் அதிகமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய கரையோரப் பகுதிகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

கடல்கோள் போன்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடிய கருவிகள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அமைப்பது போன்று நிலநடுக்கம் தொடர்பாக முன்னறிவித்தல் சமிக்ஞை நிலையங்களும் கரையோரத்தில் மூன்று இடங்களில் அமைக்கவிருப்பதாகவும் அவற்றில் ஒன்று பாணமைப் பகுதியிலும் அமைக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியிலுள்ள மக்கள் கடல்கோள், நிலநடுக்கம் காரணமாக இந்தப் பீதி அச்சத்துடனும் இருப்பதாக பரவலாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னோடியாக மழையும் காற்றும் இடி மின்னலும் காணப்படுவதே பீதிக்குக் காரணமென சொல்லப்படுகிறது.