பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர். இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்
புலம் பெயர் தமிழர்களே!
இளையோர்கள!
இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…
இளையோர்களே !…
சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.
தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.
இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.
ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.
இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.
புலம் பெயர் தழிழாகளே !….
இளையோர்களே !….
உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.