எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிழக்கில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சில குடும்பங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சில குடும்பங்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது

த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கண்டி பொலிஸ் பிரிவில் பகிரங்க பிடியாணையுடன் 2500 பேர்

நீதிமன்றங்கள் மூலம் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 2500 பேர் கண்டி பொலிஸ் பிரிவுக்குள் இருப்பதாகக் கண்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை காலம் குறிக்கப்பட்டபிடி ஆணை தொடர்பில் 800 பேரும் குறித்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குள் இருப்பதாகவும் அண்மையில் கண்டி பொலிஸ் நிலையத்தினால் மேற் கொண்ட விசேட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு இவர்களைக் கைது செய்யும் முகமாக தற்போது விசேட நடவடிக்கைகளில் கண்டி பொலிஸார் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி, கட்டுகஸ்தோட்ட, பேராதனை பிரதேசங்களிலே கணிசமான தொகையினர் ஒளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புலிகளின் பணமும், சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிரான பயன்பாட்டில் 2வது சவாலையும் முறியடிக்கும் முயற்சியில் அரசு

240909gl.jpgபயங்கர வாதத்தை முற்றுமுழுதாக ஒழிக்கும் முதலாவது சவாலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த எமது அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்கும் இரண்டாவது சவாலை முகம்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட போதும் 29 வருடங்களாக புலிகள் திரட்டிய பெருமளவு பணம் இன்னும் காணப்படுகிறது.  இது தவிர புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பும் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  இதனால் எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது.

புலிகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்க செனட் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி அடங்கலான இராணுவ தளபதிகள் அனைவரையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட போதும் புலிகளின் அச்சுறுத்தல் முழுமையாக ஓயவில்லை. புலிகளின் பணமும் சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது.

சர்வதேச ரீதியான சவால்களை முகம் கொடுக்கத்தான் தயாராக இருப்பதாகவும் யுத்த நீதிமன்றத்தின் முன்செல்ல நேரிட்டால் அனைவர் சார்பாகவும் தான் செல்வதாகவும் சட்டத்தரணிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழித்ததால் பெற்ற சுதந்திரத்தை முழு நாடும் இன்று அனுபவிக்கிறது. பெற்ற வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தென்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. சகல தரப்பினரும் ஒன்றுபட்டு பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பணம் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. சகல துறைகளி லும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீதிகளின் தரத்திற்கு அம் பாந்தோட்டையிலுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என்பனவும் சிறந்த நிலையில் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் முன்னரை விட அதிகமாக அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பின்தங்கிய பகுதிகள் யாவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி 2/3 பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3/4 க்கு நேருக்கமான வாக்குகளை பெற்றது. அதனைவிட கூடுதல் பெரும்பான்மையுடன் தென்மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதே எமது நோக்கமாகும்.

இறுதியாக நடைபெறும் தென்மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரு பிரதான தேர்தல்களுக்கும் சிறந்த அடித்தளமாக இருக்கும். யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெருமளவு வெளிநாட்டவர்கள் இலங்கை யில் முதலீடு செய்து வருவதோடு வெளி நாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

இதனால், தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பிரான்ஸிலுள்ள பல முக்கிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றார்.

இங்கு உரையாற்றிய தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபை பிரதி மேயரும் தெஹிவளை சு.க. அமைப்பாளருமான தனசிரி அமரசேகர கூறியதாவது,

நான் பெலியத்தை பிரதேசத்தில் பிராச ரப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளேன். அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மன்னணி மகத்தான வெற்றியீட்டும். தென் மாகாணத்தில் நாம் 85 வீத வாக்குகளை பெறுவோம் தென் பகுதி மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர். இப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.தே.க. வுக்கு தென்பகுதி மக்கள் இம் முறை நல்ல பாடம் புகட்டுவர். ஐ.தே.க. வின் ஓரிரு கூட்டங்களே நடைபெறுகின் றன. ஐ.தே.க. கூட்டங்களில் பங்குகொள்ள எவரும் முன்வருவதில்லை என்றார்.

யாழ். பாஷையூரில் ஐஸ் தொழிற்சாலை

யாழ்.குடா நாட்டுக் கடற்தொழிலாளர்களின் வேண்டுகோளுங்கிணங்க, குருநகர், பர்ஷையூரில் ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சந்திப்பொன்று செவ்வாயன்று அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடந்தது குடாநாட்டில் பிடிக்கப்படும் மீன்களைப் பதப்படுத்துவதன் மூலம் வெளிமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு செல்லும் கடற்தொழிலாளர்கள் அதிக நன்மையடைவார்களென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலையைக் குடா நாட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மிகவிரைவில் மேற் கொள்ளப்பட வேண்டுமென இச்சந்திப்பில் கலந்து கொண்ட கடற்தொழிற்துறை அமைச்சின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பா ளர் தர்மலிங்கத்திற்குப் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

சாம்பியன்ஸ் கோப்பை : 2nd Match – Pakistan won by 5 wickets

west-indies.jpgஇன்று இரண்டாவது ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மேற்கிந்தியஅணிகள் மோதுகின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக (ஏ, பி) பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, இலங்கை, நியூஸீலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று நடக்கும் பாக்கிஸ்தான் மேற்கிந்திய அணிகளுக்கியிலான  போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

West Indies won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Match, Group A
ODI no. 2894 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
23 September 2009 – day/night (50-over match)

Umpires SJ Davis (Australia) and DJ Harper (Australia)
TV umpire SJA Taufel (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire BF Bowden (New Zealand

 West Indies innings (50 overs maximum)
 DM Richards  c & b Mohammad Aamer  01
ADS Fletcher  c Imran Nazir b Naved-ul-Hasan  07
 DS Smith  c Umar Akmal b Umar Gul  18 
 TM Dowlin  c †Kamran Akmal b Mohammad Aamer  00 
 FL Reifer*  c Misbah-ul-Haq b Umar Gul  07 
 DE Bernard  b Mohammad Aamer  06
  DJG Sammy  b Saeed Ajmal  25
 CAK Walton†  lbw b Umar Gul  00 
 NO Miller  c Shoaib Malik b Shahid Afridi  51 
 TL Best  st †Kamran Akmal b Saeed Ajmal  08 
 GC Tonge  not out  4
 
 Extras (w 5, nb 1) 6     
      
Total (all out; 34.3 overs) 133 (3.85 runs per over)
Fall of wickets1-2 (Richards, 0.6 ov), 2-11 (Fletcher, 3.6 ov), 3-14 (Dowlin, 4.5 ov), 4-36 (Smith, 10.3 ov), 5-43 (Bernard, 13.3 ov), 6-47 (Reifer, 14.3 ov), 7-47 (Walton, 14.4 ov), 8-85 (Sammy, 24.5 ov), 9-121 (Best, 31.1 ov), 10-133 (Miller, 34.3 ov) 
        
 Bowling
 Mohammad Aamer 7 1 24 3 
 Naved-ul-Hasan 7 0 26 1 
 Umar Gul 8 2 28 3 
 Shahid Afridi 8.3 0 39 1 
 Saeed Ajmal 4 0 16 2 
   
Pakistan innings (target: 134 runs from 50 overs)

 Imran Nazir  b Tonge  5
 Kamran Akmal†  c †Walton b Tonge  5
 Shoaib Malik  c †Walton b Tonge  23 
 Mohammad Yousuf  c †Walton b Tonge  23
 Misbah-ul-Haq  c †Walton b Bernard  6 
 Umar Akmal  not out  41
 Shahid Afridi*  not out  17  
 Extras (lb 2, w 9, nb 3) 14     
      
Total (5 wickets; 30.3 overs) 134 (4.39 runs per over)
Did not bat Naved-ul-Hasan, Mohammad Aamer, Umar Gul, Saeed Ajmal 
Fall of wickets1-5 (Imran Nazir, 1.1 ov), 2-21 (Kamran Akmal, 5.1 ov), 3-54 (Shoaib Malik, 13.3 ov), 4-61 (Mohammad Yousuf, 15.1 ov), 5-76 (Misbah-ul-Haq, 22.3 ov) 
        
 Bowling
 DJG Sammy 7 0 29 0  
 GC Tonge 10 3 25 4 
 TL Best 6.3 0 50 0  
  DE Bernard 7 0 28 1

Pakistan won by 5 wickets

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரைக் காட்டுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி இடைத்தங்கல் முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசாமி சந்திரமோகன் (31) காணாத நிலையில் எழுந்த வதந்தியையடுத்து, அவரைக் காட்டுமாறு கோரி அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் புதனன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி வளவின் ஒரு பகுதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டிருந்தனர்.

தகவ அறிந்த வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவரைக் கொண்டு வந்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபரைப் பொலிசார் அழைத்து வந்து காட்டினர். அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. . இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனினும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிலைமை சுமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தமிழர்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முன்னேற்றமடையலாம் – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna000.jpgதமிழ் மக்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியில் முன்னேற்றமடைய முடியுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
”இந்நாட்டில் பதினைந்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் அவற்றுக்கிடையே ஒற்றுமை கிடையாது என தெரிவித்த அமைச்சர், கிழக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற அமைச்சர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக ஜனாதிபதி வாகரைக்கு வந்து வாகரை பாடசாலை புனரமைப்புக்கான அடித்தளத்தை இட்டுச் சென்றார். இன்று அனைவரும் பெருமைப்படத்தக்கதாக இப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பாரிய கட்டிடத் தொகுதியாக நிர்மாணம் பெற்றுள்ளது.

கிழக்கு மக்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியுள்ளனர்.  இப் பகுதி அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் மக்கள் ஜனாதிபதியையும் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் நினைவு கூருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு சிறந்த மனிதர். ஆளும் கட்சியில் நாம் பங்கேற்பதால் நாம் மேலும் முன்னேற்றங்களை அடைய முடியும். நாம் ஜனாதிபதியுடன் உரிமையோடு பழகுகின்றோம்.  இதனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவளித்து அவரைப் பலப்படுத்துவோம்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஉள்நாட்டு இடம்பெயர்வுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் வோல்ட்டர் கலீன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்தும் அது தொடர்பாக அவர் தமது விஜயத்தின் போது ஆராயவுள்ளார். அதனடிப்படையில் அவர் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றம் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. அவர் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து உரையாடவும் உள்ளார்.

மீள்குடியேற்றத்தை துரிதமாக்க ரூ.35கோடி குறைநிரப்பு பிரேரணை: சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

26parliament.jpgஇடம் பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கேதுவாக 35 கோடி ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு இந்த நிதியை வழங்க சபை அங்கீகாரம் வழங்கியது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த பிரேரணை விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் அமைச்சர் பதியுதீன் குறைநிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிரைவாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மீளக் குடியமர்த்தும் பணிகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம். முதலில் வயது முதிர்ந்தவர்களை விடுவித்தோம். தற்போது காயமுற்றோர் மற்றும் பெண்களை அனுப்பி வருகின்றோம். அதே நேரம், கிளிநொச்சி – முல்லைத்தீவு தவிர்ந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து சிக்குண்டோர்கள் எனப் பெருந்திரளானோரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கி, வவுனியா அரசாங்க அதிபரின் ஊடாகச் செயற்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார். அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமது உறவினர்கள் ஈடுபட்டிருப்பதாக ஐ. தே. க. உறுப்பினர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விளக்கியுள்ளாரென்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து அரசியல் நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்