சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

அமரர் ஜெயராஜின் நினைவு தினம் இன்று

jayaraj.jpgபுலிகள் இயக்கத்தினரின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் முதலாவது நினைவு தினம் இன்றாகும்.

இத்தினத்தின் நிமித்தம் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.வெலிவேரிய காந்தி ஆரியரட்ன விளையாட்டரங்குக்கு அருகில் மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் நினைவு தூபி இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை அன்னாரின் நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.

500 மாணவர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்

exam.jpgபரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்தது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (4) அறிவிக்கப் பட்டன.

ஆனால் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுமார் 500 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். விசாரணை முடிவில் குறித்த மாணவர் களின் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என தீர்மானிக்கப்பட உள்ளது.

இவர்கள் செய்த தவறின் தன்மைகளு க்கேற்ப தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இவர்களுக்கு பரீட்சை எழுத ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதே வேளை வெளிமாவட்ட பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை இன்று (6) பாடசாலைகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகை

mohamed-kaleel.jpg பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகிறார். தனது குடும்பத்தினரோடு இன்று மாலை இலங்கை வரும் இவருக்கு வரவேற்பளிக்கப்படவிருக்கிறது.

ஒருவாரம் இலங்கையில் தங்கியிருக்கும் இவருக்கு நாளை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கெளரவமளிக்கவுள்ளனர். அன்றைய தினமே விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இராப்போசன விருந்தளித்துக் கெளரவிக்கவுள்ளார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகமும் இவருக்கு வரவேற்பளிக்கவுள்ளது

க. பொ த. (சா/தர) பரீட்சை முடிவு www.doenets.lk இணையத்தளத்தில்…

exam.jpgக. பொ. த.  சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாக பெறுபேறுகள்  நேற்று தபாலில் இடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெறுபேறுகள் யாவும் இணை யத்தளத்தில் இணைக்கப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் படி சுமார் 3 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பழைய பாடத்திட்டத்திற்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரமே வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் நேற்று பிற்பகலிலேயே நேரடியாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

‘லக்றூ’ தொலைக்காட்சி சேவை நாளை முதல் ஆரம்பம்

television.jpgஇலங்கை தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய ‘லக்றூ’ தொலைக்காட்சி அலைவரிசையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் அனுபவத்தைப் பெற்றுத் தரும் இந்த லக்றூ தொலைக்காட்சி சேவையை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு தேசிய தகவல் தொலைத் தொடர்புத் துறையின் முன்னோடியான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் இணை நிறுவனமான எஸ்.எல்.ரீ. விஷன் கொம் உடன் இணைந்து வழங்குகிறது.

சர்வதேச புகழ் பெற்ற இலங்கையின் திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே நாளை இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.

இப்போதைக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் இல்லை – ஐ.சி.சி. அறிவிப்பு

icc-logo.jpgபாகிஸ் தானில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. லாகூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மொர்கன் வெலிங்டனில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

லாகூரில் நடந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு பாகிஸ்தõனுக்கு கிரிக்கெட் அணிகளையோ அதிகாரிகளையோ அனுப்ப முடியாது. அங்கு பாதுகாப்பு விடயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால்தான் கிரிக்கெட் அணிகளை அனுப்புவது பற்றி பரிசீலனை செய்ய முடியும் என்றார்

பலதரப்பட்ட நிறுவனங்களால் விருது வழங்கி கௌரவித்தல்

dimujayarathna.jpgபலதரப் பட்ட நிறுவனங்களால்  விருது வழங்கி கௌரவிப்பது தொடர்பாக பிரதமரின் செயலாளர் மஹிந்த பந்துசேனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவின் அறிக்கையையடுத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள  அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அறிக்கையில் உள்ளடங்கிய விடயங்கள் குறித்து ஆராய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் குழுவின் முடிவுக்கு ஏற்ப இதுதொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.

ஒன்றரை வயது குழந்தை அநாதரவாக கண்டெடுப்பு

boy.jpgஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்றை பாழடைந்த இடம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் அலவத்துகொட பெலிஸார் கண்டெடுத்தனர். கடந்த முதலாம் திகதி புதன்கிழமை (நேற்று முன்தினம்) இரவு சுமார் 11.00 மணியளவில் பொலிஸார் இந்த சிறுவனை மீட்டனர். இந்தப் பாலகன் இவ்விடத்திற்கு எவரால் கொண்டுவரப்பட்டான் என்ற விபரங்களையும் சிறுவனது தாய் தந்தையர் யார் என்ற தகவலையும் பொலிஸார் தேடுவதில் ஈடுபட்டுள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸ் வட்டாரத்தைச் சேர்ந்த தெல்கஸ்தென்னை என்ற இடத்திலேயே சிறுவன் இவ்வாறு நட்டாற்றில் விடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுவன் பாழடைந்த பிரதேசத்தில் இருந்து தனிமையில் பல மணி நேரம் அழுவதைக் கேட்ட அப்பிரதேச பொதுமக்கள் பலரும் திரண்டு சம்பவம்பற்றி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த முஸ்லிம் சிறுவன் இப்பொழுது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் குறித்த சிறுவனை தத்தெடுத்து வளர்க்க தாம் தயாரென ஒரு நபர் முன்வந்தபோதிலும் பொலிஸார் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அதற்கான முடிவைப் பெறவேண்டி யிருப்பதாகவும் அந்த நபரிடம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவனின் தாய், தந்தையார் என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹக்மனை மாதிரி நகரம்

janakabandarathennakoon.jpgஹக்மனை நகரை மாதிரி நகரமாக்கும் துரித அபிவிருத்தித் திட்டத்தின்; கீழ் உள்ளக வீதிகளை; மற்றும்  வடிகாலமைப்பு ஆகியவற்றை நிர்மானிக்கும் பொறுப்புக்களை காணிகள் நிறப்பும் மற்றும் அபிவிருத்திசெய்யும் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

உள்ளக வீதிகள் மற்றும் வடிகால் அமைப்புத் திட்டத்துக்கு சுமார் 2 கோடியே 69 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,  ஹக்மனை நகரை மாதிரி நகரமாக துரித அபிவிருத்தி செய்வதற்கான நிதியை அமைச்சு 2009 ஆம் ஆண்டுக்கான தமது அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கியுள்ளது

உத்தேச மாலபே தனியார் பல்கலைக்கழகம் 30 வருடங்களின் பின்னர் அரசிடம் கையளிக்கப்படும்

pr-con-02042009.jpgமால பேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்  30 வருடங்களின் பின்னர் இலங்கை உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அமைச்சினால் நியமிக்கடும் செயற்குழு அதனை  நிருவகிக்கும் என பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும்; உரையாற்றுகையில், மாலபேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் காரணாக இலங்கையில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று  பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது எதுவித ஆதாரமுமற்று வெறும் யூகமாகும்.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இநத தனியார்  பல்கலைக்கழகத்தில் பல்கலை அனுமதி பெறாத 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி புகட்டப்படும். இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஐந்த வீதம் படை வீரர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுவதோடு இவர்களுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்