சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கண் தான தினம் பிரகடனம்

eye.jpgடிசம்பர் மாதம் 18ஆம் திகதியை கண் தான தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

கண் தான சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான தேசபந்து டொக்டர் ஹட்ஸன் சில்வாவின் பிறந்த தினத்திலேயே இந்த கண் தான தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் தனது 48 வருட சேவையில் பார்வையற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் தானம் வழங்கியுள்ள சேவையை கௌரவிக்கும் வகையிலும் இச்சேவையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இத்தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் – பிரதமர்

army-wanni.jpgபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதனைப் போல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து மக்களும் தமது இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார். ஹொரணை ஸ்ரீ.ல.சு. கட்சி காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

கடந்த 30 வருடமாக வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த  பயங்கரவாதத்தை ஒழிக்க தென்பகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோல் நாட்டின் அபிவிருத்தியிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். நாட்டின் யுத்தத்தின் போதும் நாட்டின் அபிவிருத்தியின் போதும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கின. அதேபோல் இவைகள் மத்திய அரசிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வடக்கு யுத்தத்தை சுமார் 1/2 மணி நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஆனால் அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த யுத்தம் மெது மெதுவாக நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 மி.மீ. மழை வீழ்ச்சி

lighting.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 137 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார்.

மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. புதிய காத்தான்குடி, பூம்புகார், களுதாவளை, வெல்லாவெளி உட்பட பல பகுதி களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்கு வரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொட்டாவ முதல் தொடங்கொட வரையில் பாதை விஸ்தரிப்பு

mahinda.jpgநாட்டின் தென் பகுதியிலுள்ள பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான பாதையை விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்துக்கு 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைப்பு

protest_afp.jpgதாய்லாந்தில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   தொடங்குவதாக இருந்த இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்பத்ற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் ஏற்கனவே தாய்லாந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்தில் பிரதமர் அபிசித் விஜ்ஜாஜிவாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவர் பதவி விலகும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   மாநாடு நடைபெறவிருந்த இடத்துக்கு முன்பு திரண்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாட்டு அரங்கத்தின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgசுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற் பன்னப்பட்டு விற் பனை செய்யப்படும், சீனி, பருப்பு என்பன நுகர்வோர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அல்லது அதற்கு குறைவாகவோ விற்பனை செய்யா தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் வெள்ளைச் சீனி ஒரு கிலோ 73 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் குறைவாகவே விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் சில வர்த்தக நிலையங்களிலும், சுப்பர் மார்க்கட்டுகளிலும் பக்கட் பன்னப்பட்ட சீனி, பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் பருப்பு 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதன் பின்னர் லக் சதொசவில் பருப்பு ஒரு கிலோ 154 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

பக்கற் பன்னப்பட்டதற்காக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. எந்தவொரு பொருளுக்கும் பொதியிடும் செலவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகளை மேலதிகமாக விநியோகித்து தேர்தலில் வெற்றிபெற ஆளும் கட்சி புதிய தந்திரம் – ஐ.தே.க. குற்றச்சாட்டு

unp-members.jpg1,33,000 அட்டைகள் சட்ட விரோதமானவை ‘அரசாங்கம் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்ற நிலையில், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் “சட்ட விரோத வாக்காளர் அட்டை’யெனும் புதிய முறையொன்றை அரசு கையாண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி இவ்வட்டைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாதென்ற வகையில் இதற்கு பதிலளிக்க அவர் கடப்பாடுடையவர் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மகாநாட்டில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ

10-naveen.jpgஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில்  காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.