சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பிரபாகரனை அரசால் அடக்கி ஒடுக்க முடியுமானால் கொழும்பிலுள்ள கொலையாளிகளை ஏன் பிடிக்க முடியாது? – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமென்றால் ஏன் கொழும்பு உள்ளிட்ட தென்பிரதேசங்களில் இருக்கும் கொலையாளிகள் சிலரை அரசாங்கத்தால் பிடிக்கவோ அடக்கி ஒடுக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரது பாரியாரின் வீட்டில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னரே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இது ஜனநாயகத்துக்கும் நாட்டின் சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மட்டுமல்லாது 2 தினங்களுக்கு முன்னர் வெட்கமில்லாமல் சிரச ஊடக நிறுவனத்துக்கும் தீ வைத்திருத்தினர். கடந்த 2 வருடங்களிலேயே நாட்டில் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிவிட்டு நாட்டை விட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்திலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர், இவர், சர்வதேச சதித் திட்டமென ஒவ்வொருவரையும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை. நாட்டில் 12 வருடங்களாக அரசாங்கத்தை நிர்வகித்தவரென்ற வகையில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்திற்குரியது. எனினும் இன்று நாடு படுகுழியில் விழுவதற்கு அரசாங்கமே இடமளித்திருக்கின்றமை குறித்து நான் கவலையடைகின்றேன்.

அரசாங்கத்தினால் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமானால் கொழும்பு மற்றும் தென்பகுதியிலுள்ள சில கொலையாளிகளை ஏன் அரசாங்கத்தால் அடக்கி ஒடுக்க முடியாது? இதற்கான பொறுப்பை நான் அரசாங்கத்தின் மீதே சுமத்துகிறேன். லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்குமிடையில் பல பிரச்சினைகள் இருந்தன. எனினும் அவரை, கொல்வேன் என்று நான் ஒரு போதும் தொலைபேசியில் மிரட்டியதில்லை. எனவே இந்த பயணத்தை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். ஏதாவதொன்று செய்தாக வேண்டும். வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவர் மீதும் பழி சுமத்தும் வகையிலான பொய்ப் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.  இன்று இதனை கூறியதற்காக நாளை எனக்கும் வீதியில் வைத்து என்ன நடக்குமென்று தெரியாது. கடந்த 3 வருடங்களில் எனது பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. உண்மை பேச வேண்டும் என்று கூறினார்.

வன்னியிலிருந்து வருபவர்களின் நலன்களை கவனிக்க ரூ.30 மில். ஒதுக்கீடு – அரசாங்கம் அவசர ஏற்பாடு

a_c_m_razik_secretary1.jpgகிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசிக் தெரிவித்தார்.

இதுவரை 1,200 ற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் மக்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்து சேர்ந்த மக்களுக்காக வவுனியா மெனிக்பாம் மற்றும் நெலுக்குளம் பகுதிகளில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடம்பன்குளம், பூசனிப்பிட்டி பகுதிகளிலும் மேலும் தற்காலிக வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் தங்கியிருப்போருக்கான சமைத்த உணவு, உலருணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இது தொடர்பில் வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்

pranab-1312.jpgகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.

கிழக்கில் உல்லாச ஹோட்டல் நிர்மாணத்திற்கு 100 மில். ரூபா

hotel.jpgமட்டக்களப்பில் 100 மில்லியன் ரூபா செலவில் உல்லாச பயணிகள் ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதலீட்டுச் சபை கைச்சாத்திட்டுள்ளது. லியேரா பீச் ஹோட்டல் கம்பனிக்கும் முதலீட்டுச் சபைக்கும் இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு இணங்க அனைத்து வசதிகளுடன் கூடிய 30 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஹோட்டல் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஆயுர்வேதக் குளியல் உட்பட, ஜிம்னாசியம் மற்றும் ரெனிஸ் மைதானம் உள்ளடங்கலாக இந்த உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலீட்டுச் சபை கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், மீன்பிடி, விவசாயம் என்பவற்றை ஊக்குவிக்கவும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். விசேடமாக சுற்றுலா கைத்தொழிலை கிழக்கில் முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உல்லாச ஹோட்டல் நிர்மாண வேலைகள் இந்த மாதத்தில் ஆரம்பித்து இவ்வருடம் முடிவடைவதற்குள் நிறைவடையவுள்ளதாகவும்

கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும்

school-2.jpgமாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க  “நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை மிகவும் பின்னடைவான நிலையிலுள்ளது. தற்போது கிழக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு மாகாண சபையும் செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முன்வரவேண்டும்  இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள மகாஓயா கரஸ்கல பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக் கட்டிடத்தை கடந்த திங்கட் கிழமை மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்துவைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ” கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தபோதிலும் கல்வி வளம் சிறப்பாக இல்லாமையினால் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபையின் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரஸ்கல பகுதி போன்ற பின் தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தங்கியிருப்பதற்கான விடுதிகள் அமைக்கப்படவிருக்கிறது. விடுதி வசதிகள் இருந்தால்தான் கஷ்டமான பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு ஆசிரியர்களும் முன்வருவார்கள்.’

கிழக்கு மாகாணம் 8063 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள மூன்று மாவட்டங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்கள்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் கல்வியை அபிவிருத்தி செய்யவேண்டும். கிழக்கில் 985 பாடசாலைகளும் 27 தேசிய பாடசாலைகளும் செயற்பட்டுவருகிறது. இவற்றில் 382,088 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 76,669. தமிழ்மொழி மூலம் கல்வி கற்பவர்கள் 305,415 மாணவர்கள். ஆனால், முக்கிய பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்கள் கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது.

அமைதியற்ற சூழ்நிலையினால் மூடப்பட்ட பாடசாலைகளில் 33 பாடசாலைகள் இன்னும் இயங்காது இருக்கிறது. வறுமையின் காரணமாக அதிகமான சிறார்கள் ஆரம்பக் கல்வியைக்கூட கற்றுக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்து கல்வியை கற்பிக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் 107 அநாதை சிறுவர் இல்லங்கள் செயல்படுகிறது. இவர்களின் கல்வியும், எதிர்காலம் பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். கிழக்கில் 30 வயதுக்கு குறைந்த 33 ஆயிரம் இளம் விதவைகள் உள்ளனர். இவர்களின் 68 ஆயிரம் சிறுவர்கள் வறுமை காரணமாக கல்வியை கற்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்றையும் உருவாக்கவேண்டியிருக்கிறது என்றார்.’

‘யாழ். மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்’ – அமைச்சர் டக்ளஸ்

a-9-road.jpgஆனை யிறவு மீட்பு மற்றும் ஏ-9 வீதி பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இவ்வாறு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆணையிறவைப் படையினர் கைப்பற் றியது தொடர்பாகவும் ஏ-9 பாதை முற்று முழுதாக படையினரால் விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்; கடந்த மாதம் யாழ். சென்று அங்கு மக்கள் குறைகளைத் தீர்க்க தினசரி நூற்றுக்கும் அதிகமான மக்களைச் சந்தித்து வருகிறேன். நான் மீண்டும் கொழும்பு சென்றுவிடுவேனோ என எண்ணும் மக்கள் தினசரி முண்டியடித்துக் கொண்டு என்னைப் பார்க்க வருகின்றனர். அவர்களிடம் நான் கூறியிருந்தேன்; இனிமேல் நான் கொழும்பு செல்வதானால், ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரே செல்வேன். எனத் தெரி வித்திருந்தேன். நான் கூறிய கூற்று இன்று உண்மையாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டு ஏ-9 பாதை திறக்கப் படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும் தெரிவித்தார்.

தொலைபேசியூடாக கொலைமிரட்டல் ஐ.தே.க. எம்.பி. தயாசிறி சபையில் முறையீடு

phone.jpgதொலை பேசி ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) சிறப்புரிமை பிரச்சினையொன்று முன்வைத்து பேசும்போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.  “நேற்று (08) இரவு தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசியூடாக ஆண் குரலில் பேசிய ஒருவர், நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் கத்துவதாகவும், அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதை நிறுத்தாவிட்டால் லசந்தவிற்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படுமென்றும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அத்துடன், இதுதான் முதலும், இறுதியுமான எச்சரிக்கை என்றும் கூறிவிட்டு பேசியவர் தொலைபேசி அழைப்பையும் துண்டித்துவிட்டார். இன்று அரசாங்கத்துக்கு எதிராக பேசுவது உயிரை பறிக்கும் அளவுக்கு குற்றமாகியுள்ளது. எனவே, இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு எனக்குரிய பாதுகாப்பை அதிகரித்து தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், எனது கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு யாழ். குடாவில் தற்காலிக நியமனம்

teach.jpgவடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். மாவட்டப் பாடசாலைகளில் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் யாழ். வலயக்கல்வி அலுவலகத்திலுள்ள மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை கடமையாற்றுமாறு இவர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு முதலாம் கட்டமாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 287 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாகவும் ஒரு தொகுதி பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த 2 கட்ட நியமனத்தின் போதும் விடுவிக்கப்படாத பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் அங்கு சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையில், மூன்று மாதங்கள் வரை யாழ்.மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கத

புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றினர் ! -இராணுவ பேச்சாளர்

_army.jpgமுல் லைத்தீவில் முள்ளியவளைக்கு வடமேற்கே சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைப்புலிகளின் நான்காவது விமான ஓடுபாதையை இராணுத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரண்டரை கிலோ மீற்றர் நீளமும் நூறு மீற்றர் அகலமும் கொண்ட இப்பாதை இன்று சனிக்கிழமை காலை படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது:  இந்த ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைப்பதற்காகன ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒரு இடத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால் இராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர் என்றார்.