டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை !
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. ஏற்கனவேஇ இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ள டிரம்ப், சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ இலங்கை BRICKS அமைப்பில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திஇ 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் BRICKS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
