முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடத்தி வரும் குளிர்பான நிறுவனத்திற்கு காஷ்மீர் மாநில அரசாங்கம் 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளது. காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பொட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கைச்சாத்தான ஒப்பந்தமே தற்சமயம் சர்ச்சையாகி உள்ளது. அதாவது முரளிதரனுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விடயத்தை கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி விவசாயத்துறை மந்திரி ஜாவித் அகமது தார் ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்” என்று சமாளித்துள்ளார். முத்தையா முரளிதரன் இந்தியாவில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகின்றார். கர்நாடகாவில் அரு. 1400 கோடி முதலீடு செய்துள்ளார். இதற்காக கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கர்நாடகாவில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்யும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.