ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !
அவுஸ்திரேலியாவில் வேலைக்கு விளம்பரம் போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, 40 வயதான பிஜேபி அவுஸ்திரேலிய பிரதிநிதி பாலேஸ்; தன்கருக்கே இச்சிறைத்தண்டனையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ளது. 21 முதல் 27 வயதான கொரிய நாட்டுப்பெண்களை வேலைக்கான நேர்காணல்களுக்கு அழைத்து அவர்களுக்கு மயக்கமருத்து கொடுத்து அதன்பின் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
2018இல் 5வது பெண்ணை வன்புணர்வு செய்தது தொடர்பில் பொலிஸார் பாலேஸ் தன்கரின் வியாபார மையத்தைச் சோதணையிட்ட போது அங்கு அவர் பெண்களை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்திய மயக்க மருந்து கண்டெடுக்கப்பட்டது. அத்தோடு கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமராவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 2023இல் இவர் மீது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 29 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் தண்டணை வழங்க்பட்டுள்ளது. இதில் முதல் 30 ஆண்டுகள் இவருக்கு பரோல் மறுக்கப்பட்டும் உள்ளது. இவர் தனது 83வது வயதிலேயே விடுதலை செய்யப்படுவார்.
