ஜனநாயக போராளிகள் கட்சி

ஜனநாயக போராளிகள் கட்சி

 ‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இயக்கப் போராளிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் அவர்களுடைய வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளராகச் செயற்பட்ட முல்லைமதி தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

நீங்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் என உரிமைகோர முடியும் என தேசம்நெற் வினவிய போது “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக குமரன் பத்மநாதன் என்ற செல்வராஜா பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாங்களே உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை மக்களுக்கு அறிவித்து, தலைமையையும் பொறுப்பேற்றோம். அதன் அடிப்படையில் நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தலைமை” எனத் தெரிவித்தார். இந்நேர்காணலை இன்று முழுமையாக தேசம் ரியூப்பில் பார்க்கலாம்.

“தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் ஆரம்ப நாட்களில் பல்வேறு தவறுகளை விட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நாங்கள் எங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் துணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள். அதனால், ஆயதங்களைக் கைவிட்ட பின்னும் இந்த ஜனநாயகப் போராட்டத்தையும் எங்களாலேயே முன்னெடுக்க முடியும். மக்களுக்காக ஒரு துளி வியர்வையும் சிந்தாத மதிவாதத் தலைவர்களின் பரம்பரை அரசியல் வாதிகளால் அதனை நேர்மையாகச் செய்ய முடியவில்லை என்பதை இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன், சி வி விக்கினேஸ்வரன், பொன் ஐங்கரநேசன் போன்றோர் காட்டிவிட்டனர். முன்னாள் இயக்கப் போராளிகள் – உங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறுகளை மன்னித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான முல்லை மதி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாங்கள் மற்றைய போராளிகளின் ஆயதங்களை அன்று களைந்தோம் அதற்கான சூழல் அன்று ஏற்பட்டது இன்று எல்லோரும் ஜனநாயக வழியில் போராடுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் உட்பட்ட முன்னால் இயக்கப் போராளிகளுக்கு ஆதரவளியுங்கள்” என வலியுறுத்தினார் முல்லை மதி.