அநுர குமார திசாநாயக்க

அநுர குமார திசாநாயக்க

அநுர குமார திசாநாயக்கவுக்கு சுவீடனில் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.
இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” – ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்க பதிலடி !

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் ‘கடுமையான’ பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்தை கண்டித்து பேசும் போதே ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல. ஷதற்போதிருக்கும் பொருட்களின் விலையுயர்வு, கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு வெறுப்பும் கோபமும் இருக்கலாம். ஆனால், அதனை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவிக்கும் கலாசாரத்துக்கு இடமளிக்க முடியாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஹரின் பெர்னான்டோ ஏலவே பொலிசில் முறையிட்டுள்ள அதேவேளை ஹரினுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் எனவும் கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டதெனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.