விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் மரணமடைந்துள்ளார். லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவர் இவர் என்றும் அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்பட நெறிப்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன்,  இலங்கைப் படையினருக்கு எதிரான களத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to MANITHA NEYAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • thamilan
    thamilan

    மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மடிந்த இந்த வீரனின் நினைவுகளை எம்மனங்களில் ஏந்திக்கொள்வோம்

    Reply
  • MANITHA NEYAN
    MANITHA NEYAN

    i am not convinced, its maybe a murder,

    Reply
  • thamilan
    thamilan

    உண்மை இது சிறிலங்கா இராணுவத்தால் செய்யப்பட்ட கொலைதான்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழன்; வேண்டுமானால் மக்களுக்குப் படம் காட்டி, தலைக்காக படம் ஆனவர் என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

    Reply