முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், “அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும்.
இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் – நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்
பகீ
ஆட்சி என்ன ஆட்சி உயிரையே கொடுப்போம் என சொல்லியதை நாடறியாதா?
பார்த்திபன்
அதானே எங்களுக்குத் தமிழீழம் கிடைப்பதற்காக எவர் உயிரையும் எடுக்கவோ பலி கொடுக்கவோ தயங்க மாட்டோம். உயிரெடுப்பதும் பலி கொடுப்பதுமே எமது குறிக்கோள் – தமிழீழ விடுதலைப்பலிகள்
GOPAL NAIDU
WHATEVER MAY BE MUTUVELAR KARUNANITHI HAS WRITTEN HISTORY SO FAR, AT HIS AGE MOST PEOPLE WERE RETIRED BUT HE STILL WORKING FOR TAMIL FAMILIES.WONDERFUL TAMIL WRITER AND POET.
WE WOUILD LIKE TO SEE HIM TAMILNADU NEXT CHIEF MINISTER,SHALL WE?
பல்லி
//நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்’’//
அது ஏன் என்பதையும் தமிழகம் மட்டுமல்ல ஈழ தேசமும் அறியும் ஜயா.