பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட கடற்படை சிப்பாய், பெண் கான்ஸ்டபிள் கைது

பொது இடத்தில் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஒரு கடற்படை சிப்பாயும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அனுராதபுரம் நீதிமன்ற மேலதிக நீதிவான் சிவன்த மங்சநாயக்க முன்னிலையில் இவ்விரு சந்தேக நபர்களையும் ஆஜர் செய்த பொலிஸார் மதவாச்சி நகர மத்தியில் பொது மக்களுக்கு அருவருப்பூட்டும் விதத்தில் இவ்விருவரும் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிவான் அவ்விருவரையும் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். புனாவை கடற்கரை முகாமைச் சேர்ந்த சமில் இந்திக்க ரணதுங்க என்ற சிப்பாயும் மதவாச்சி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பணியாற்றும் பி.நில்மினி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுமே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    அடேங்கேப்பா இதுவல்லவா நீதி.

    Reply