விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

Show More
Leave a Reply to Suresh M.M.A Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Suresh M.M.A
    Suresh M.M.A

    இன்னுமா…?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply