றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்

university-srilanka.jpgமாத்தறை மெத்தவத்தயில் அமைந்துள்ள றுகுணு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புதிய மாணவர்களை பழைய சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்திய போது அதனை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்ததாகவும் இதனையடுத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் புதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

எட்டுப் பாதுகாப்பு ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்த போதிலும் சிரேஷ்ட மாணவர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய மாணவர்கள் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

இத்தகராறின் போது ஒரு பாதுகாப்பு ஊழியரின் தங்கச் சங்கிலியும் கையடக்கத் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து புதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து மாத்தறை பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

றுகுணு பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவருகிறது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில சிரேஷ்ட மாணவர்கள் அதனைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சினால் பகிடிவதைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மோதல்கள் குறித்து உயர்மட்ட மாநாடும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to rajai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rajai
    rajai

    All Universities should be under protection of special police team who can handle this kind of ragging culprits and can punish them because there many wrongdoings & brutalization going on under Uni boundary those approved by Uni mangment also .. it is very strange!!!

    Reply