இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கே.பி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார் வை.கோ,
பார்த்திபன்
வைகோவை விடவா குமரன் பத்மநாதன் உளறுகின்றார். 2009 மே மாதமே கனிமொழி மற்றும் கஸ்பார் இருவரும் மத்திய அமைச்சர் சிதம்பரம் மூலம் விடுதலைப்புலித் தலைமைகளை காப்பாற்ற எடுத்த முயற்சியை,காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு இதன் மூலம் நல்ல பெயர் கிடைத்து அதனால் தேர்தல் முடிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாமெனப் பயந்து; வைகோ,நெடுமாறன்,தா.பாண்டியன் ஆகிய மூவர் கூட்டணியே அதனை தடுத்தது என்ற செய்தியும் கசிந்து விட்டது. தற்போது கே.பி அதனை உறுதி செய்துள்ளார். அதற்கு என்ன பதிலளிக்கலாமென வைகோ சிந்திப்பதற்கே ஒரு வாரம் எடுத்துள்ளது. இந்த இலட்சணத்தில் இன்னும் பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என்று கதையளக்கும் வைகோவை எந்த மனநல வைத்தியசாலையில் சேர்ப்பது??