திருகோணமலை தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் இடையூறு சம்பந்தன் விசனம்

திருகோணமலை வடக்கேயும் தெற்குப் பகுதியிலும் உள்ள தமிழ் வாக்களர்கள் வாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அது குறித்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் பிரதிப்பொலிஸ் மா அதிபரிடமும் தாம் முறையிட்டிருப்பதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று சம்பந்தன் வாக்களித்தார். அதன் பின்னர் வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற செல்வாக்குள்ள வேட்பாளர் ஒருவரின் ஆட்கள் திருமலை வடக்கேயும் தெற்கேயும் உள்ள தமிழ்வாக்காளர்கள் வாக்களிக்கமுடியாதபடி தடைகளை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to Ajith Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Ajith
    Ajith

    it is not only the government party candidates. There are number of Paramilitaries sponsored by government also part of that. This happened every where. In Kandy, government supporters threatened Mano Ganeshan should not come to Kandy. Goverment supporters took away number of ballot boxes. This is the type of election described as “free elections”

    Reply