ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் 08 பேர் நேற்று (15) கட்டுப்பணம் செலுத்தினர்.

சுயேச்சை வேட்பாளர்களாக மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா, கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் டபிள்யு. எம். யு. பி. விஜேகோன் ஆகியோரும் கட்சிகளின் சார்பாக கெ. ஜி. ஆர். எல். பெரேரா, எம். சி. எம். இஸ்மாயில், ஒஸ்வர்ட் அருணடி சொய்ஸா, சனத் பினதுவ, அதுரகே செனரத்ன சில்வாவும் நேற்று தேர்தல்கள் திணைக்களத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 17 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 04 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    அதுவும் 21தானா?
    இந்த 21;22; இலங்கை அரசியலுக்கு பொருதமானதாய் இல்லையே;

    Reply