வன்னியில் இடம்பெயர்ந்த இரண்டாரை இலட்சம் மக்களையும் 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
சுனாமியின் பின்னர் பெற்ற அனுவத்தையும் ஆற்றலையும் கொண்டு இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்ட போது இதே அளவிலான மக்களை நாம் மீள்குடியேற்றி§ னாம். அதே போல மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்களை 44 நாட்களில் மீள்குடியேற்றினோம். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரையில் 60 ஆயிரம் மக்களை மூன்று மாதத்தில் மீள்குடியேற்றினோம். இந்த அனுபவங்களைக் கொண்டு வடக்கு மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுப்போம் எனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ஐ. ஏ. என். எஸ். செய்திச் சேவைக்கு பேட்டியளித்த அவர், ‘கிழக்கிலே மக்கள் இடம்பெயர்ந்த போது அந்தப் பகுதியில் சரியான பஸ் சேவை இருக்கவில்லை; சிறந்த வீதிகள் இருக்கவில்லை; மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்பும் போது சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு செயற்பாடுகளில் எங்களுக்கு உலகில் நன்மதிப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
வடக்கில் மீள்குடியேற்றத்தில் பெரும் சவாலாக இருப்பது கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் மிகவும் பரந்த பிரதேசமாக இருக்கும். வடக்கில் கண்ணிகளை அகற்றுவதில் இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் மீள்குடியேறியதும், அடுத்த நாளே வயல்களுக்கும் விவசாயக் காணிகளுக்கும் சென்று தங்களது தினப்பணிகளில் ஈடுபட முடியுமெனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
accu
நன்றி பசில் அவர்களே! நீங்கள் கூறுவதை செயல்ப்படுத்துங்கள். அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு நீங்கள் காட்டும் வெளிச்சம்தான் உங்களை உண்மையான வெற்றியாளராக நிலைநிறுத்தும்.