முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார். ஜேர்தானில் உள்ள தொழில் பேட்டையில் கெஷ வல் வெயா ஆடை உற்பத்தி நிலையத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.
இலங்கையில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை அறிய வெளிநாட்டில் உள்ளவாகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.
2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிழ்சியைக் கொண்டாட புலிகள் இடம்தரவில்லை. நிராயுதபாணிகளான படை வீரர்களை அவர்கள் படுகொலை செய்தனர். எனினும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என புலிகளை நாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் இப்பேச்சுவார்த்தையை புலிகள் இடையில் முறித்துக்கொண்டனர்.
கிழக்கில் விவசாயத்தை நம்பி வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு புலிகள் தண்ணீர் வழங்க மறுத்து மாவில் ஆறு அணைக்கட்டை மூடினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக படையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து புலிகளை தோற்கடித்து மக்களுக்கு நீர் வழங்கினர்
மூதூர் மூஸ்லிம்களை தமது சொந்த இடங்களிலிருந்து புலிகள் விரட்டியபோது படையினர் அங்கிருந்து புலிகளை விரட்டியடித்து 40 நாட்களுக்குள் முஸ்லிம் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தினர். அதேபோன்று கிழக்குப் பிரதேசம் முழுவதையும் மீட்டு அங்கு ஜனாநாயத்தை உருவாக்கினோம். 2001 ஆம் ஆண்டில் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வடக்கையும் கிழக்கையும் புலிகளுக்கு சட்டரீதியாக ஒப்படைத்தார்.
இப்போதும் அவர் மேற்குலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளுக்கு சார்பான அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தோம்.
சில நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீதே அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்துவருகின்றன. இலங்கை மக்கள் நாட்டின் கௌரவத்தையும் கீர்த்தியையும் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
வடக்கிலே இடம்பெயர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் இதுபோன்ற யுத்தநிலைமைகள் ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகின்றபோது நாம் மிகவும் விரைவாக அவற்றை மேற்கொண்டுள்ளோம்.
அடுத்த கட்டமாக நாடு துண்டாடப்படுவதைத்; தவிர்க்கின்றவகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படும். எல்லா மக்களும் கௌரவத்தோடும் தன்மானத்தோடும் வாழ்வதற்கான ஒரு சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். எமது மக்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்த எமது படைவீரர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
நண்பன்
கடந்த புதன் கிழமை வரை பிரபா – பொட்டு மற்றும் சூசை ஆகியோர் வயர்லஸில் கதைப்பது கேட்க முடிந்திருக்கிறது. புதன் கிழமை (13.05.2009)க்குப் பின்னர் இவர்களது சத்தத்தை கேட்க முடியவில்லை எனத் தெரிய வருகிறது.
ஒன்று சரணடைந்திருக்கலாம் அல்லது …………….?
…………….
கரைய முள்ளிவாயக்கால் பகுதியை இன்று கைப்பற்றிய இராணுவத்திடம், 2000க்கும் அதிகமான மக்கள் சரணடைந்துள்ளனர். இவர்களுடன் 5 வைத்தியர்களும் சரணடைந்துள்ளனர். புலிகள் சார்பில் வெளி ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்த வைத்திய அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிகிறது.
கடைசி நேரத்தில் புலிகள் மக்களது பணத்தையும் தங்க நகைகளையும் புலிகளது வங்கிகளில் வைப்பிலிடுமாறு பணித்ததாகவும் தற்போது அந்த வங்கிக் கட்டிடம் புலிகளால் தரைமட்டமாக்கப் பட்டதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.