மலையகம்

மலையகம்

ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா பரவலான ஏற்பாடு மலையகமெங்கும் அமைப்புகளுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 7½ கோடி வழங்க முடிவு

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கென தமிழ்நாடு மாநில அரசு எழரைக் கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் மலையகத்தில் 500 வீடுகளை கட்டுவதற்குத் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கென வீடமைப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. அமைச்சர் ஆறு முகன் தொண்ட மான் தமிழக அரசின் உதவியோடு இத்திட்டத்தை மலை யகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இந்த உத்தேச 500 வீடுகளில் தோட்டப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களுக்கும் 50 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன் மூலம் மலையகத்தில் உள்ள தோட்டப்புற மக்களுக்கும் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப் புற மக்களுக்கும் இடையே புரிந்துணர்வையும் செளஜன்ய உறவையும் நிலைநாட்ட வழி வகை செய்ய ப்பட்டுள்ளது.

தமிழக எம். பிக்களின் வருகை மலையக அபிவிருத்தியின் ஆரம்பம் – முத்து சிவலிங்கம்

151009sivalingam.jpgதமிழக எம். பிக்களின் வருகை, மலையக அபிவிருத்தியின் நல்லதொரு ஆரம்பமாகுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக் களின் உண்மையான வாழ்வாதாரத் தைத் தமிழக பாராளுமன்ற உறுப் பினர்கள் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டுள்ளதால், அந்த மக்களின் மேம்பாட்டுக்கும், பிரதேச அபிவிரு த்திக்கும் தமிழக மாநில மற்றும் இந்திய மத்திய அரசுகளின் உதவி இனிக் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளைத் திட்டமிட முடியுமென்றும் பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

மலையகத்தில் எதிர்காலத்தில் தோட்டத் தொழிற்றுறை அருகி விடு மென்றும், அதனால் மாற்று ஜீவனோபாயத்தினை மக்களுக்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்றும் தமிழக பாராளுமன்ற குழுவிடம் கூறியதாக பிரதியமைச்சர் கூறினார்.

பழைமையான “லயன்” வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழித்து கிராம வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாரித்துள்ள பத்து அம்ச திட்டத்தினை இந்திய அரசுக்கும் சமர்ப்பித் துள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழகக் குழுவினர் இன்று மலையகத்துக்கு விஜயம்!

12kanimoly.jpgதமிழ கத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை வந்துள்ள 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் மலையகத்திற்கு வருகை தந்த இக்குழுவில் டி.ஆர்.பாலு, கலைஞரின் மகள் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
 
ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். ஹட்டன் நகரை இன்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்த இக்குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கனிமொழியைச் சுழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். மலையக மக்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போன கனிமொழி உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பு பிரிவினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மறுபடி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.

இந்நிலையில் வாகனத்தைச் சுழ்ந்து கொண்ட மக்கள் கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இம்மக்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்ட குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். இவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலையக தோட்டங்களிலிருந்து வீட்டு வேலைக்கு சென்றோரின் விபரம் திரட்டும் பணி ஆரம்பம்

091009puttirasigamani.jpgமலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.  புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.

மலையகத்தில் அடைமழை – மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்

011009rain-in-upcountry.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மத்திய மாகாணத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன்கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியில் ஆங்காங்கே சிறியளவான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தில் கடும் மழை : கொட்டகலையில் மினி சூறாவளி

0000rain.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.  காற்றுடன் கூடிய அடைமழையினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் ஹரிங்டன் தோட்டப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஒன்று சேதத்துக்குள்ளாகியது. தெய்வாதீனமாக சிறுவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மலையகச் சிறுவர்களை கொழும்பில் வேலைக்கமர்த்தும் தரகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

மலையக சிறுவர், சிறுமியரை கொழும்புக்கு வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி தெரிவித்தார்.

இவ்வாறான தரகர்களைக் கண்டறிவதற்கென குழுவொன்றை நியமித்துச் செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம் மலையகத்திலிருந்து பெண்பிள்ளைகளைப் பிற இடங்களுக்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்ல முயற்சிப்போர் குறித்த தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொடுத்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை (02) நடைபெறுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த யுவதிகளின் குடும்பத்தவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிலர் அறிக்கைகளை வெளியிட்டதோடு அந்த யுவதிகளின் பிரச்சினையைக் கைவிட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் பணிப்பெண்களாகக் கட மையாற்றிய மஸ்கெலியாவைச்சேர்ந்த இரண்டு யுவதிகள், கறுவாதோட்டம் கழிவு நீரோடைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பெற்றோர் முறைப் பாடு செய்ததையடுத்து சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யுவதிகளின் தாயாரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.