அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வட பகுதி மீள் கட்டுமானத்துக்கு உதவ முன்வரும் சீன வங்கி

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான (எக்ஸிம்) இலங்கையின் வடபகுதியில் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க இணங்கியுள்ளது.  சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் லீ ரூகூ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை சந்தித்துள்ளார். வடக்கில் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவியளிக்க தயாராக இருப்பதாக இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்திருக்கிறார். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது எக்ஸிம் வங்கியானது தொடர்ந்து இலங்கை தொடர்பாக தாராளத் தன்மையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி வருவதாக அமைச்சர் போகொல்லாகம பாராட்டியுள்ளார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். புத்தளத்தில் அனல்மின் திட்டம், அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் என்பவற்றுக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி உதவியளித்து வருகிறது.

துரிதமாக ஆரம்பித்து விரைவாக பூர்த்திசெய்யும் வங்கியின் கொள்கையை அமைச்சர் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் மக்களுக்கு துரிதமாக வருவாயும் பொருளாதார அரசியல் ரீதியான சக்தியையும் ஏற்படுத்த வசதியளிக்கக்கூடியதாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தென்னிலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை தொடர்பான விபரத்தையும் அமைச்சர் போகொல்லாகம வழங்கியுள்ளதுடன், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கியிடமிருந்து உதவியையும் கோரியுள்ளார்.

தன்னியக்க காலநிலை மத்திய நிலையம்: வடக்கு, கிழக்கில் 7 நிறுவப்படும் – அமைச்சர் சமரசிங்க

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 630 மில்லியன் யென் பெறுமதியுடைய 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவற்றில் 7 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

மேற்படி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை உத்தி யோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரி மைகள் அமைச்சில் நேற்று நடைபெற்றது. இதன் போது ஜப்பான் தூதுவர் குனியோ தகஹாசி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேற்படி 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களில் 31 மத்திய நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதோடு 7 மத்திய நிலையங்கள் எதிர்வரும் தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளன. அவை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மினி சூறாவளி தாக்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் அப்பகுதியில் அமைக்கப்படுவ தோடு மினி சூறாவளி, திடீர் வெள்ளம் என்பன குறித்து மக்கள் முன்கூட்டி எச்சரிக்க முடியும் எனவும் இதனால் சேதங்களை மட்டுப்படுத்தவும் முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை பயன்படுத்தி செய்மதி தொழில்நுட்பத்தினூடாக 10 நிமிடத்துக்கொரு தடவை நாட்டின் சகல பிரதேசங்களினதும் காலநிலை தொடர்பான விபரங்களை பெற முடியும். 2006 ஆம் ஆண்டு நான் ஜப்பான் சென்றிருந்த போது ஜெய்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினேன். அதன் பயனாகவே இந்த நிலையங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் தன்னியக்க காலநிலை இயந்திரங்களை பொருத்த முடியவில்லை. தற்பொழுது முழு நாடும் சுதந்திரம் பெற்றுள்ளதால் அப்பகுதியில் விரைவில் இவற்றைப் பொருத்தவுள்ளோம்.

ஜப்பான் அரசாங்கம் உண்மையான நண்பராக எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறது. இலங்கை அரசாங்கம் சார்பாக ஜப்பான் அரசுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போதும் ஜப்பான் எமக்கு உதவியது என்றார்.

அகதிகள் சொந்தக் கிராமங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் – மல்வத்த மகாநாயக்கர் உறுதியளிப்பு

மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் செட்டிகுளம் முகாமிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அங்குள்ள அகதிகளை சந்தித்த அவர் விரைவில் அவர்கள் அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார். இலங்கையின் முன்னணி பௌத்த அமைப்பான மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் அகதி முகாமிற்கு சென்றமை வரலாற்று முக்கியத்துவமானது என்று கருதப்படுகிறது.
மக்கள் மீளக்குடியேறி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பல பணிகள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தமது விஜயத்தின் போது மகாநாயக்கர் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூறியுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு செயலாளரும் படையினரும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, சுதந்திரத்தை தக்கவைப்பதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தின் அம்பாறையிலுள்ள விசேட அதிரடி பொலிஸ் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இயல்பு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான புதிய சவால்களை இப்போது நாம் எதிர்நோக்கியுள்ளோம். அபிவிருத்தி மற்றும் உள்சார் கட்டமைப்பு நடவடிக்கைகளை வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டு வருகிறோம். இப்போது நாம் எட்டியிருக்கும் விடுதலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சமூகத்தின் சகல பிரிவினரையும் உள்ளீர்த்துக் கொள்வது அவசியமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

போரில் பங்களிப்பை நல்கிய விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யுத்தத்தினால் 500 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இறந்துள்ளதாகவும் அதிகளவு எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடு

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் இப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வவுனியா வேப்பங்குளம், பட்டகாடு, குருமன்காடு பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்து அவர்களுக்கான பயிற்சிகளை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன், பட்டானிச்சூர், சூடுவந்த புளவு, பழைய குடிமனை பகுதிகளில் தையல் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரம், சான்றிதழ்கள் என்பனவற்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார். 60 தமிழ், முஸ்லிம் யுவதிகள் இவற்றை பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை வவுனியா சூடுவந்த புளவு கிராம மக்களின் நீண்டகால தேவையாக இருந்துவந்த வைத்திய விடுதியுடன் கூடிய வைத்தியசாலையை நிர்மாணிக்கவென 95 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்த அமைச்சர் அதற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

சொத்துக்காக மைக்கல் ஜாக்சன் கொலை – தங்கை லா டோயா பரபரப்பு புகார்

maical-jak.jpgமைக்கல் ஜாக்சன் இறந்தால், நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரை கொலை செய்து விட்டனர்’ என,  ஜாக்சனின் தங்கை லா டோயா அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மைக்கல் ஜாக்சன் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அளவுக்கு அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே அவரின் திடீர் மரணத்திற்கு காரணம் என,  சமீபத்தில் வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை மைக்கல் ஜாக்சனுக்கு பரிந்துரை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். ஜாக்சனின் மரணத்தை ஒரு கொலை வழக்காக விசாரிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மைக்கல் ஜாக்சனின் சகோதரியான லா டோயா கூறியுள்ளதாவது. எனது சகோதரர் மைக்கல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருப்பதை விட மரணம் அடைந்தால் நூறு கோடி பவுண்ட் கிடைக்கும் என்பதால், அவரைக் கொன்று விட்டனர்.

ஜாக்சனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவர் இறந்தால் கிடைக்கும் ராயல்டி மற்றும் இசை ஆல்பம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இன்சுரன்ஸ் பணத்தை கைப்பற்ற நினைத்தவர்கள் தான் இந்தக் காரியத்தை செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டதால்,  ஜாக்சன் இறந்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.

ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு நபருக்கு மட்டும் இதில் தொடர்பிருக்க வாய்ப்பு இல்லை சிலர் சேர்ந்து செய்த சதி. எல்லாம் பணத்திற்காக செய்யப்பட்டது. மைக்கேலின் இசை ஆல்பங்கள் மூலம் கணிசமான பணம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அவரை கொன்றுள்ளனர். ஜாக்சனின் மரணத்திற்கு வேறு என்ன காரணம் சொன்னாலும்,  அதை நான் நம்ப மாட்டேன். உண்மையை கண்டறியும் வரை ஓயமாட்டேன்.

ஜாக்சனை சுற்றியிருந்த மோசடி பேர் வழிகள் அவரை குடும்பத்தினருடன் சேர விடாமல் தடுத்து விட்டனர். அவர், எங்களை பார்க்க விடாமல் செய்து விட்டனர். லண்டனில் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகளை நடத்த ஜாக்சன் விரும்பவில்லை என்றாலும்,  அவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்து கடுமையாக பயிற்சி செய்ய வைத்துள்ளனர். உண்மையில் ஜாக்சன் 10 நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த விரும்பியுள்ளார்.

இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விட்டு விடவும் மைக்கல் விரும்பினார். திரைப்பட இயக்குனராக மாற நினைத்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினார். “திரில்லர்’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அதற்கான போஸ்டரை கூட அவர் வடிவமைத்து விட்டார். ஆனால்,  அவரைச் சுற்றி இருந்தவர்கள் சதி செய்து,  அவரை உலகில் துணையற்ற மனிதராக்கி விட்டனர்.

மைக்கல் எப்போதும் தன் வீட்டில் இருபது கோடி ரூபாய் அளவுக்கு பணம் வைத்திருப்பார். மரணச் செய்தி கேட்டு நான் அவரின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பணமோ அல்லது நகையோ இல்லை. நான் போகும் முன்னர் அங்கு பலர் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பணத்தை சுருட்டியுள்ளார். ஜாக்சனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் அவரை போதை மருந்துக்கு அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறு லா டோயா கூறியுள்ளார

முல்லைத்தீவு மீள் கட்டமைப்பு தொடர்பாக நேற்று ஆராய்வு

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக அம்மாவட்டத்தின் அரச உயரதிகாரிகளுக்கும், இராணுவ உயரதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இம்மாவட்டத்தில் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வு, புனரமைப்பு, நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவ்வதிகாரிகள் கூறினர்.

மட்டு. ஆஸ்பத்திரி பெண்தாதி டெங்கு நோய்க்குப் பலி – மகனும் கடுமையாகப் பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு நோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.  அதே வேளை இவரது மகன் டெங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதி, வெள்ளாள வீதியைச் சேர்ந்த திருமதி சாந்தினி சுவர்ணநாதன் என்ற 39 வயதுடையவரே மரண மானவராவார். சம்பவ இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிச் செயலாளர் பூ. பிர சாந்தன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன், பிரதேசசபைத் தலைவர் திருமதி கிருஷ்டிணா உட்பட உயர் மட்ட அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் விஜயம் செய்து, டெங்கு பரவும் இடங்களைப் பார்வையிட்டனர். விசேட அதிரடிப்படையினரும் சமுகமளித்திருந்தனர்.

யாழ். குடாவில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர் ஆர்வம்

Jaffna_Mapயாழ்ப் பாணக் குடாநாட்டில் முதலீடுசெய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களென முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் துவதற்கும், உயர்ந்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அவர்கள் முன்வருகிறார்களெனவும் அவர் கூறினார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இது தொடர்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இலட்சக் கணக்கான இலங் கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் இவர்கள் மத்தியில் மேற்படி முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுட்டிக் காட்டிய முதலீட்டுச் சபையின் தலைவர், “அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு அடுத்த வாரம் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து இதற்கான முன்னெடுப்புகளைத் தெளிவுபடுத்தவுள்ளது” என்றார்.

இலங்கை உயர் மட்டக்குழுவின் இந்தச் சந்திப்புகளின் போது, “யாழ்ப்பாணத்தை உங்களது இரண்டாவது வாழ் விடமாக்குங்கள்” என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தம்மிக்க பெரேரா கூறினார். யாழ். குடா நாட்டுக்கான முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு யாழ். குடாநாட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைத்தல், புதிய வீடமைப்புக்களை ஏற்படுத்துதலும் இதில் அடங்கும்.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என கூறிய முதலீட்டுச் சபைத் தலைவர் பல்வேறு முதலீ ட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் பாடசாலைகள், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மருத்துவ மனைகளை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் முதலீடு செய்பவர்க ளுக்கு நீண்டகால அடிப்படையில் வரிச்சலுகை வழங்கப் படவுள்ளதோடு, பல்வேறு சலுகைகளையும் வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. முதலீட்டுச் சபையின் மலேஷிய விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முதலீட்டுச் சபைத் தலைவர் தம்மிக்க, அது மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. இந்த விஜயத்தின்போது இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.

ஒன்று அரசியல் மற்றது பொருளாதார விடயமாக இருந்தது என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

விமான நிலைய பார்வையாளர் மண்டபம் – மீண்டும் திறப்பு

bandaranaikeairport.jpgபயங் கரவாத நடவடிக்கைகள் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த பொது மக்களுக்கான பார்வையாளர் மண்டபம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் புலிகள் பல முறைகள் தாக்கதல்களை நடத்தியதையடுத்து பொது மக்கள் பாதுகாப்புக் கருதி இந்த பார்வையாளர் மண்டபம் மூடப்பட்டது. தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு வழியனுப்ப வரும் பொது மக்கள் இந்த பார்வையாளர் மண்டபத்தை இனிமேல் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓமந்தையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார மையம் – அமைச்சர் பந்துல தகவல்

bandula_gunawardena.jpgவடக்கிற் கும், கிழக்கிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஓமந்தையில் பாரிய பொருளாதார மையமொன்றை அமைக்கவிருப்பதாக வர்த்தக நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

இதற்கென கடந்த சனிக்கிழமை 20 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்,  ஏ-9 வீதிக்கும்,  ரயில் பாதைக்கும் அருகிலேயே இந்த நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த வர்த்தக மையம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான ஒரு கேந்திரஸ்தானமாக விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் இந்தத் திட்டத்திற்கான செலவுகள் குறித்து மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனம் அறிந்துகொள்ளும் எனவும்,  ரயில் பாதையைப் பயன்படுத்தி வடபகுதியின் விவசாய உற்பத்திப் பொருள்கள் தென்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.