கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் 50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி – ஜனநாயகக் கட்சி 301 ஆசனங்கள் லிபரல் கட்சிக்கு 119 மட்டுமே

japan-new-pri.jpgஜப்பானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரு வெற்றியீட்டியது. மொத்தமாக உள்ள 480 ஆசனங்களில் 301 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. ஆட்சியிலிருந்த பிரதமர் ரரோ அசோவின் லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

இதையடுத்து ஜப்பானை ஐம்பது வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியது. தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா (வயது 62) புதிய பிரதமராகப் பதவியேற்பார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்ற மக்களின் மறுவாழ்வு என்பவை புதிய அரசாங்கத்துக்கு முன் உள்ள சவால்களாகும். ஜப்பானுடன் உறவுகளைத் தொடர விரும்புவதாக தென் கொரியா அறிவித்துள்ளதுடன் பல நாடுகள் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள யுகியோ ஹற்றோயாமா கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உ¨யாற்றினார். முன்னய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளை அடியோடு மாற்றப் போவதில்லை.

பொறுமையாக இருந்து இக்கொள்கைகளைப் படிக்க வேண்டும் ஆராய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு இக்கொள்கைகள் சிலவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் கூறினார்.

மக்கள் புதிய கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

குடியேற்ற பிரச்சனை: பிரிட்டனில் 470 சிறுவர்கள் கைது

britain.jpgஇந்த ஆண்டில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே, சூடான், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த ஏழை குடும்பங்கள் பிரிட்டனில் தஞ்சம் அடைகின்றன. இதில் பெரும்பாலானோர் முறையான குடியுரிமை ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இவர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் குடியுரிமை இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லண்டன் விமானம் நிலையம் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெரும்பாலான சிறுவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் 28 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 225 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 100 பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் புதிய பிரதமர் மிகவும் எளிமையானவர்!

japan.jpgஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள யுகியோ கோடோயாமா மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. உலகக் போருக்குப் பின்னர் லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறோரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்ற வரலாற்றை, இத்தேர்தல் மூலம் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டாரோ அஸோ பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜப்பான் ஜனநாயக கட்சித் தலைவர் யுகியோ, மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து யுகியோவின் மனைவி மியூகி, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் ஓர் யதார்த்தவாதி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டவரை போல் அல்லாமல் வெளிநாட்டவரை போல் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக இருப்பவர். அவரை யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்றும் மியூகி கூறினார். மியூகி, முன்னாள் பிரபல நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-2015க்குள் செவ்வாய்க்கு ராக்கெட்…

29-chandrayaan.jpgசந்திரா யன்-2 திட்டத்துக்கு பின் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக பல விஞ்ஞான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் திட்டங்களை அடிப்படையாக வைத்து செவ்வாய் கிரக ராக்கெட்டை எப்படி உருவாக்குவது என்பதை முடிவு செய்ய முடியும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். விரைவில் பிரதமர்  மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரயான்-1 திட்டம் குறித்து மாதவன் நாயர் விவாதிக்கவுள்ளாராம்.

செயலிழந்து போய் விட்ட 514 கிலோ எடை கொண்ட சந்திரயான்-1 விண்கலம் இன்னும் ஓராண்டுக்கு நிலவின் வட்டப் பாதையில் இருக்கும். அதன் பின்னர் அது படிப்படியாக நிலவின் தளத்தில் மோதி விழுந்து விடும்.

இதற்கிடையே, எந்தவிதமான நிலவுப் பயணங்களும் ஒரு ஆண்டு வரை நீடித்ததில்லையாம். அதிகபட்சம் 6 அல்லது 7 மாதங்கள் வரைதான் நீடித்துள்ளன. ஆனால் சந்திரயான்-1 விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிலவைச் சுற்றி வந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.  நிலவின் சுற்றுச்சூழல், சூரிய கதிர்வீச்சு, விண்வெளியில் காணப்படும் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றைத் தாக்குப்பிடித்து சந்திரயான்-1 இத்தனை காலம் இருந்ததே மிகப் பெரிய சாதனை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தமிழ் ஈழம் மலருவதை யாராலும் தடுக்க முடியாது – வைகோ

vaico9999.jpgஇலங் கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,

இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன்.  ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய- மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ்  ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்

us-army.jpgஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது.

தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்திராயன்-1 திட்டம் நிறுத்தப்படுகிறது – மாதவன் நாயர்

29-chandrayaan.jpgசந்திர யான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 திட்டம் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிலவை நோக்கிய சந்திரயான்-1 விண்கலத்தின் பயணம் இந்திய மக்களின் மனதில் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சனிக்கிழமை அதிகாலையில், சந்திரயான்-1 விண்கலத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்தியர்கள்  அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும் சந்திரயான்-1 திட்டத்தின் பலனில் 95 சதவீதத்தை ஏற்கனவே எட்டி விட்டதாக விஞ்ஞானிகளும், இஸ்ரோவும் அறிவித்துள்ளனர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரும் வெற்றிதான் என்று வர்ணித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரயான் -1 திட்டத்தை முடித்துக் கொள்வதாக இஸ்ரோ தலைவர்  மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜப்பான் பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெரும் – கருத்துக்கணிப்பு

japan.jpgஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெருவெற்றி பெரும் என்று கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.

கருத்துக் கணிப்புகளை ஒத்து தேர்தல் முடிவுகள் வருமானால் ஜப்பானில் கடந்த அரை நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட இடைவெளி இன்றி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பதவியகல நேரிடும்.

கடுமையான தோல்வி என்று குறிப்பிட்டு அப்படியான ஒரு தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் டாரோ அஸோ தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பதவியிலிருந்தும் தான் விலக எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் மிக மோசமான பொருளாதார வீழ்ச்ச்யை சந்தித்த நேரத்தில் ஆட்சி செயத அரசியல் தலைவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபமே தனது வெற்றிக்குக் காரணம் என, பிரதமராக வரக்கூடியவர் எனத் கருதப்படும் யுகியோ ஹடொயாமா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றுவரை பன்றிக் காய்ச்சல் பலி 99

swine.jpgநேற்று பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் நேற்றுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் இஷார் என்ற 20 வயது வாலிபர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரையும் சேர்த்து புனேவில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். தேசிய அளவில் 99 பேராக பலி  எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

96 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது இலங்கை

srilanka0000.jpgகொழும்பில் நடைபெற்ற இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 96 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு முதன் இன்னிங்சில் சுருட்டியது.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

494 ஓட்ட வெற்றி இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 397 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 96 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SRI LANKA 416 and 
311-5 dec

 NEW ZEALAND      
First Innings 234

NEW ZEALAND      
Second innings       
overnight 182-6)

T. McIntosh b Prasad      7
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw Herath     50
R. Taylor C M Jayawardene b Herath   27
J. Ryder lbw Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram c Sangakkara b Dilshan    56
D. Vettori c Herath b Muralitharan  140
J. Patel c Kapugedera b Muralitharan   12
I. O’Brien c P. Jayawardene b Herath   12
C. Martin  not out        0

EXTRAS: (13-lb, 1-nb)     14
TOTAL: (all out, 123.5 overs)   397
FALL OF WICKETS: 1-36, 2-41, 3-97, 4-131, 5-158, 6-176,  7-300, 8-318, 9-387, 10-397
BOWLING: Paranavitana 1-0-2-0, Thushara 23.3-1-78-0 (1-nb),
 Prasad 15-1-56-1, Herath 48-9-139-5, Muralitharan 28.2-2-85-3,
 Dilshan 6-0-15-1, Kapugedera 2-0-9-0

Result: Sri Lanka won by 96 runs to seal a 2-0 series
victory.