கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வைகோ, விஜயகாந்த், திருமா. புலிகளிடம் பணம் பெற்றனர்-சாமி

swamy1111.jpgவிடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சாமி கூறுகையில்,  இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.

அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  ஆகியோரும் அடங்குவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன் என்றார் சுப்பிரமணிய சாமி.

யு.எஸ். ஓபன்: நடால் வெற்றி

nadal5.jpgஅமெரிக் காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

சற்று முன்னர் நடந்து முடிந்த இப்போட்டியில் ஜெர்மனியின் நிக்கோலஸ் கெய்ஃபர் உடன் மோதிய நடால் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தினார். ஆனால் அடுத்த செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நிக்கோலஸ்.

எனினும், 3வது செட்டில் மீண்டும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி நிக்கோலஸ்க்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 4வது செட்டிலும் நடால் கையே ஓங்கியிருந்தது. முடிவில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி, 3-1 என்ற செட்க்கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

இந்தியாவில் ஆசிரியர் தினம் -புன்னியாமீன்

radhakir.jpgஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. பொதுவாக இந்நாள் ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி அநேக நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி 1888ஆம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ஆம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ஆம் ஆண்டு முதல் 1962 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.

டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியை மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

ஆண்டு தோறும் ஆசிரியர் தினத்தன்று இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்…’ “பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும். அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை உலகத்துக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்’ மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

சீரிய சிந்தனைகளோடு கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும் வளம் செழித்து நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்… “கல்வியைக் கற்பிப்பது மட்டுமன்றி கொள்கைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட விஷயங்களையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்கின்றனர். மாணவர்களின் நண்பராக போதனையாளராக வழிகாட்டியாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு முன்னுதாரணமாக அவர்கள் இருக்கின்றனர்’. என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம்.

தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார்.

அதற்க்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

இருபது-20 தொடரைக் கைப்பற்றியது நியூஸீலாந்து

n-l.jpgஇலங்கைக்கு எதிராக கொழும்பில் நடந்த 2வது இருபது-20 போட்டியில், நியூஸீலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என்ற போட்டிக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

நியூஸீலாந்து அணியின் ஜெஸ்ஸி ரைடருக்கு ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

NEW ZEALAND

B. McCullum c and b Jayasuriya 49
J. Ryder c Rupasinghe b Mendis 52
R. Taylor lbw b Jayasuriya 16
M. Guptill b Malinga  32
J. Oram not out   17
Extras: (lb2, w1, nb1)   4
Total (for 4 wkts, 20 overs) 170
Did not bat: Neil Broom, Nathan McCullum, Daniel Vettori, Ian Butler, Shane Bond, Kyle Mills.
Fall of wickets: 1-84 (B. McCullum), 2-109 (Ryder), 3-127 (Taylor), 4-170 (Guptill).
Bowling: Kulasekara 4-0-40-0, Malinga 4-0-35-1 (w1, nb1), Mendis 4-0-21-1,
Jayasuriya 4-0-22-2, Bandara 2-0-19-0, Dilshan 2-0-31-0.

SRI LANKA

T. Dilshan c Guptill b Bond   1
S. Jayasuriya c Taylor b Mills   7
M. Udawatte c Broom b Mills   0
M. Jayawardene c Ryder b N. McCullum 41
K. Sangakkara c and b Oram  69
A. Mathews c Taylor b N. McCullum  1
G. Rupasinghe c Vettori b Bond  18
N. Kulasekara c Taylor b Bond   2
M. Bandara not out    4
L. Malinga not out    0
Extras: (lb2, w3)    5
Total (for 8 wkts, 20 overs)  148
Did not bat: Ajantha Mendis.
Fall of wickets: 1-2 (Dilshan), 2-2 (Udawatte), 3-11 (Jayasuriya), 4-78 (Jayawardene),
5-80 (Mathews), 6-129 (Rupasinghe), 7-143 (Sangakkara), 8-148 (Kulasekara).
Bowling: Bond 4-0-18-3, Mills 3-0-22-2 (w1), Butler 4-0-34-0 (w1),
Vettori 3-0-27-0 (w1), N. McCullum 3-0-18-2, Oram 3-0-27-1.

ஆஸ்ட்ரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி

shane_watson.jpgலண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பூவா-தலையா வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்யப் பணித்தது.

ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன், பெய்ன் களமிறங்கினர். இதில் பெய்ன் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேமரூன் வொய்ட், ஷேன் வாட்சனுடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.  இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் சேர்த்தது.

வாட்சன் 46 ஓட்டங்களிலும், வொய்ட் 53 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 45 ஓட்டங்களும், மைக் ஹஸ்ஸி 20 ஓட்டங்களும், ஃபெர்கூசன் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களும், ஹோப்ஸ் ஆட்டமிழக்காமல் 18ஓட்டங்களும் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பால் கோலிங்வுட் 2 விக்கெட்டுகளும், சைடு பாட்டம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றி பெற 261 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அணித்தலைவரும், துவக்க வீரருமான ஆண்ட்ரூ ஸ்டிராஸ் 12 ஓட்டங்களில் பிரெட்லீ பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரவி போபாரா 49 ஓட்டங்கள் எடுத்தார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ ப்ரியார் 28 ஓட்டங்களும், ஷா 40 ஓட்டங்களும், கோலிங்வுட் 23 ஓட்டங்களும், லூக் ரைட் 38 ஓட்டங்களும், ரஷித் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களும், பிராட் 2 ஓட்டங்களும், ஸ்வான் 4 ஓட்டங்களும், சைடுபாட்டம் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.

இன்னிங்சின் கடைசி (50வது) ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராக்கன் வீச, இங்கிலாந்து வீரர் ரஷித் எதிர்கொண்டார். முதல் பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் 2வது பந்தில் பவுண்டரி விளாசி ஆஸ்ட்ரேலிய அணிக்கு ரஷித் நெருக்கடி ஏற்படுத்தினார்.

மூன்றாவது பந்தில் ரஷித் ஒரு ஓட்டங்கள் எடுக்க, சைடுபாட்டம் பேட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். 4வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கப்படவில்லை. இன்னும் 2 பந்துகள் மேட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5வது பந்தில் சைடுபாட்டம் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், சைடுபாட்டம் ஒரு ஓட்டங்கள் மட்டும் சேகரித்ததால் ஆஸ்ட்ரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.

ஆஸ்ட்ரேலியா தரப்பில் மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், ஹாவ்ரிட்ஸ் 2 விக்கெட்டுகளும், பிரெட்லீ, வாட்சன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆஸ்ட்ரேலிய வீரர் ஃபெர்கூசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

சர்வதேச நாணய நிதியம் சிம்பாப்வேக்கு கடன்

ro-mu.jpgகடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச நாணய நிதியம் சிம்பாவேவுக்கு கடன் வழங்கவுள்ளது.

சிம்பாப்வே தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் மிகக் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுவரும் நிலையில் அதனை ஈடுகட்டும் நோக்கில் அந்நாட்டுக்கு 50 கோடி டாலர்கள் வழங்கப்படவுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.

இந்தப் பணம் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய வேறு திட்டங்களில் செலவழிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையை வழங்கபோவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் மத்திய வங்கியில் நடந்த மோசமான நிதி நிர்வாகமும் ஒரு காரணம் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்ப விழா பங்களாதேசில்

2nd-test.jpg2011 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மத்திய அமைப்பு குழுக் கூட்டம் மும்பையில் நடந்தது.

ஐ.சி.சி. துணை தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லார்கட், போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை பங்களாதேசில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடத்துவது என்றும் தொடக்க ஆட்டத்தை அங்கு பெப்ரவரி 19 ஆம் திகதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடக்க விழா மற்றும் தொடக்க ஆட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போட்டி அட்டவணை முழு விவரம் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆய்வு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் போட்டி அமைப்பு குழு இயக்குனர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், ‘பயன் அளிக்கக் கூடிய கூட்டம் இதுவாகும். போட்டி சிறப்பான முறையில் நடைபெற வேண்டிய நடவடிக்கை முழு வீச்சில் எடுத்து வருகிறோம். போட்டியை நடத்தும் எல்லா நாடுகளும், ஐ.சி.சி. யும் உற்சாகமான ஒத்துழைப்பு எடுத்து வருகிறன’ என்றார்.

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக வடகொரியா அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை நிறுத்திவிட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை வடகொரியா பகிரங்கமாக அறிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையடுத்து வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. யுரேனியம் செறிவூட்டல் வேலைகளின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் வட கொரியா இவ்வாறு அறிவித்ததாக ஆசியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக மற்றொரு செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஐ. நா. வின் கடுமையான பொருளாதாரத் தடை காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ. நா. விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால் வட கொரியாவின் பல ஆயுத வியாபாரங்கள் தடைப்பட்டன. சர்வதேசநாடுகள் தொடர்ந்தும் வடகொரியா மீது சந்தேகத்துடனும், தனது அறிக்கைகளை நம்பாமலும் நடந்து கொண்டால் முடிவுகளை மீள் பரிசீலனை செய்யுமென வட கொரியாவின் முக்கிய நபர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வடகொரியா வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா நம்பிக்கையடையவில்லை. இதனால் ஸ்டீபன் பொஸ் வோர்த் ஐ.நா. வுக்கு கடிதம் எழுதியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

யுரேனியத்தை செறிவூட்டுவதனூடாக வட கொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா சந்தேகிப்பதால் வடகொரியா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. அண்மையில் ஐ.நா.வில் தனக்கெதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது. இவற்றை வடகொரியா கைவிட்டுள்ளது. ஸ்டீபன் பொஸ் வோர்த் செய்த விஜயம் வெற்றியளித்துள்ள தென்பதையே வட கொரியாவின் அறிக்கை காட்டுவதாகவும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர். எங்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு ஐ.நா. விடமுள்ளது. பிழையாக வழி நடத்தினால் பாரதூரமான விபரீதங்கள் ஏற்படலாம் என வட கொரியா நிபுணர்கள் கூறினார்.

ரெட்டி மறைவால் அதிர்ச்சி – இதுவரை 67 ஆதரவாளர்கள் மரணம்

004funeral.jpgராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆந்திராவில் இதுவரை 67 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 67 பேர் ரெட்டி மரணத்தைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குண்டூர், கிழக்கு கோதாவரி, ஹைதராபாத், ரங்காரெட்டி, பிரகாசம், மேடக், நல்கொண்டா, கரீம் நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாரடைப்பால் இறந்தவர்களில் சிலர், ரெட்டி அறிமுகப்படுத்திய ஆரோக்கியஸ்ரீ என்ற இலவச இருதய அறுவைச் சிகிச்சை திட்டத்தின் கீழ் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து ராஜசேகர ரெட்டி மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அவரது மகன் ஜெகன் மோகன்  ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற செயல்களால் எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையாது. அவர் எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தார். ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட்டார். எனவே அவரது ஆத்மா வருத்தப்படும்படியான காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 20 க்கு 20 இரண்டாவது போட்டி இன்று

20-20.jpgஇலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் தலைவர் விட்டோரி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி மோதிய மூன்றாவது இருபதுக்கு 20 போட்டிகளில் அதாவது சொந்த மண்ணில் தோல்வியுற்று இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது.