::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா இணை வெற்றி

sania3333.jpgநியூ யார்க்கில் நடைபெறும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்/பெண் இரட்டையர் பிரிவிலும், மகளிர் இரட்டையர் பிரிவிலும் சானியா/டேனியல் நெஸ்டர் இணையும், சானியா மிர்சா/ஷியாவோன் இணையும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தனது புதிய இத்தலிய கூட்டாளியான ஷியாவோனுடன் களமிறங்கிய சானியா மிர்சா 5- 7, 7- 5, 6- 1 என்ற செட் கணக்கில் பெலாரஸ்/செக். இரட்டையர் இணையான ஸெஹாலேவிச்- ரெனெடா வொரசொவா இணையை வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்/பெண் இரட்டையர் பிரிவில் கனடா வீரர் டேனியல் நெஸ்டருடன் ஜோடி சேர்ந்துள்ள சானியா மிர்சா முதல் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான்/ஆஸ்ட்ரிய இணையை 6- 3, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆண்/பெண் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 2ஆம் தர நிலையில் உள்ள இந்திய/ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை சுவிஸ்./தென் ஆப்பிரிக்க இணையான பேட்டி ஸ்னைடர்-வெஸ்லி மூடி இணையை 6- 4, 3- 6, 11- 9 என்ற செட்களில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்; பெடரர், வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி

serena-williams.jpgஅமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெடரர், வீனஸ், செரீனா, நடால், ஜிலிஸ்டர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் 3 வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு,

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 6-3, 7-5, 7-5 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த சைமனை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் மார்ட்டின் டெல போட்ரோ (அர்ஜென்டினா) லைடன் ஹெவிட் (அவுஸ்திரேலியா) டேவிட் பெரர் (ஸ்பெயின்) ஆகியோர் வென்றனர். 3 ம் நிலை வீரரான ரபெல் நடால் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.

வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் மெலின்டாவை (ஹங்கேரி) தோற்கடித்தார்.

மூன்றாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த பெதானியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் முன்னாள் முதனிலை வீராங்கனையான கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஜூவானேரவா (ரஷ்யா) டேனிலா (சுலோவாக்கியா) ஆகியோர் வென்றனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா 2 வது சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் 0-6, 0-6 என்ற கணக்கில் உலகின் 10 ஆம் நிலை வீராங்கனையான பிளவியாவிடம் தோற்றார். இதேபோல 17 ஆம் நிலை வீராங்கனையான அமெய்லி மவ்ரஸ்மோவும் அதிர்ச்சி கரமாக தோற்றார்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்- சானியா தோல்வி

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. பெண்கள்  ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எதிர் கொண்டார்.

இதில் தவறு மேல் தவறு செய்த சானியா முதல் செட்டை 0-6 என இழந்தார். இரண்டாவது செட்டையும் அவர் அதே செட்களில் பறி கொடுத்தார். இறுதியில் 0-6, 0-6 என ஒரு கேமை கூட கைப்பற்றாமல் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இந்திய அணியின் இலங்கை பயணம்-நீதிபதிகளை மாற்ற கோரிக்கை

indian-cricket-team.jpgஇந்திய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என கோரி தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இலங்கையில் தமிழர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில் இந்திய அணி அங்கு சென்று கிரிக்கெட் விளையாட கூடாது என கோரி மதுரையில் வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேக்ஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தனர்.மனுதாரரின் வக்கீல்கள், சிவில் சட்டமுறை சட்டத்தில் பேக்ஸ் மூலம் அனுப்பும் நோட்டீஸை முறையான நோட்டீஸாக எடுத்து கொள்ளும் வழி வகை இருப்பதாக கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து மனுதாரர் ஜோயல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பேக்ஸ் மூலம் ஒரு மனு அனுப்பினார். அதில், இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கை தற்போது நீதிபதிகள் 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த தொடர் முடிந்துவிடும்.

தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் அந்த தொடரில் பங்கேற்க அணியை அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து பேசுவதற்கு கூட இடமில்லை. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போய்விடும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் மூலம் 7ம் தேதிக்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

20-20 நியூஸிலாந்து போராடி வெற்றி

20-20.jpgஇலங் கையுடனான முதல் இருபது20 சர்வதேச போட்டியில் கடைசி பந்துவரை போராடிய நியூஸிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபது 20 தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்து பொறுப்புடன் ஆடிய ரொஸ் டெய்லர் 45 பந்துகளுக்கு 5 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நுவன் குலசேகர, அன்ஜலோ மத்தியூஸ், அஜந்த மெண்டிஸ் மற்றும் மாலிங்க பண்டார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் 142 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய இலங்கை அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து அதிரடியாக ஆடிய டி. எம். டில்ஷான் 28 பந்துகளில் 8 பௌண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது அவர் 23 பந்துகளில் அரைச்சதம் அடைந்து இருபது 20 போட்டிகளில் அதிவேக அரைச்சதம் பெற்றோர் வரிசையில் 4 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டார். இதில் முன்னணி வீரர்களான சனத் ஜயசூரிய (01), சங்கக்கார (13), மஹேல ஜயவர்தன (03) சோபிக்க தவறினர். இறுதியில் இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 13 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நியூஸிலாந்து அணிக்கு திரும்பிய ஷேன் பொன்ட் மற்றும் ஜகப் ஓரம் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இலங்கை கடைசி 12 பந்துகளுக்கு 10 ஓட்டங்களையே பெற முடிந்தது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களையே பெற்றது.

நியூஸிலாந்து சார்பில் ஜகப் ஓரம் 3 விக்கெட்டுகளையும் இயன் பட்லர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் அணித்தலைவர் டானியல் விட்டோரி 4 ஓவர்களுக்கும் 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

NEW ZEALAND:
B. McCullum run out     9
J. Ryder c Bandara b Kulasekara  13
M. Guptill c Kapugedara b Bandara  29
R. Taylor c Kulasekara b Mathews  60
J. Oram c Kulasekara b Mendis    8
N. Broom not out           5
P. McGlashan run out    1
K. Mills b Malinga     7
D. Vettori b Malinga    0
I. Butler not out      0
Extras: (b3, lb3, w3)      9
Total (for 8 wkts, 20 overs)  141

Did not bat: Shane Bond.

Fall of wickets: 1-14 (McCullum), 2-26 (Ryder), 3-79 (Guptill), 4-117 (Oram),
   5-126 (Taylor), 6-127 (McGlashan), 7-136 (Mills), 8-136 (Vettori).

Bowling: Kulasekara 4-0-21-1,
  Malinga (w1) 4-0-21-2,
  Mathews 2-0-19-1,
  Mendis 4-0-25-1,
  Bandara 4-0-25-1 (w1),
  Jayasuriya 2-0-24-0 (w1).

SRI LANKA:
T. Dilshan c Ryder b Butler   57
S. Jayasuriya c Bond b Mills    1
M. Jayawardene run out     3
K. Sangakkara c McCullum b Vettori  13
G. Rupasinghe lbw b Vettori  15
C. Kapugedara b Butler      3
A. Mathews c and b Oram   21
N. Kulasekara c Broom b Oram  12
M. Bandara c McCullum b Oram   7
L. Malinga not out    4
A. Mendis not out    0
Extras: (lb2)                            2
Total (for 9 wkts, 20 overs)   138

Fall of wickets: 1-22 (Jayasuriya), 2-43 (Jayawardene), 3-67 (Sangakkara),
   4-75 (Dilshan), 5-85 (Kapugedara), 6-109 (Rupasinghe), 7-122 (Mathews),
   8-133 (Bandara), 9-133 (Kulasekara).

Bowling: Bond 4-0-27-0,
  Mills 4-0-36-1,
  Butler 4-0-29-2,
  Oram 4-0-33-3,
  Vettori 4-0-11-2.

நடப்பு சாம்பியன்கள் இலகு வெற்றி

sania-mirza1111.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான ரொஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இலகு வெற்றியீட்டினர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஆரம்பமானது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், அமெரிக்காவின் டெவின் பிரிட்டொனை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முதல் நிலை வீரர் பெடரர் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றுமொரு போட்டியில் அமெரிக்காவின் 5 ஆம் நிலை வீரர் அன்டி ரொடிக் ஜெர்மனியைச் சேர்ந்த பிஜோர்ன் பவோவை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனவில்லியம்ஸ் தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனை ஒல்கா கொவொட்சோவாவை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சற்றுக்கு முன்னேறினார். இதில் மற்றுமொரு முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்று போட்டியில் போராடி வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா போராடி வெற்றியீட்டினார். பெலாரஸ் வீராங்கனை ஒல்கா கொவோர்ட்சோவாவை நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சந்தித்த சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார். அடுத்து அவர் தனது இரண்டாவது சுற்றில் உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் பிளவியா பெனட்டாவை சந்திக்கிறார்.

பெனட்டா தனது முதல் சுற்றுப் போட்டியில் ருமேனியாவின் எடினா கொலோவிட்ஸை 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 போட்டி இன்று

kumar-sangakkara.jpgஇலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு 20க்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.  இரண்டாவது போட்டி எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும்.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் அள்ளிச் சுருட்டியது. இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் களத்தில் குதிக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு பழி தீர்த்தாற் போல் ஆகிவிடும்.

இலங்கை அணிவீரர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியில் நிரூபிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் தரவரிசையில் சங்கக்காரா முதலிடம்

kumar-sangakkara.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்ததால் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்கக்காரா ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இதனால் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  3-வது இடத்தில் மஹேல ஜெயவர்தனா உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் டேல் ஸ்டெய்ன், முரளிதரன், மிட்செல் ஜான்சன் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்-2வது சுற்றில் சானியா, சோம்தேவ்

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் சோம்தேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவாவை எதிர்கொண்டார்.

இதில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் அவர் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போர்ச்சுக்கல்லை சேர்ந்த பெரட்ரிகோ கில்லை 6-3, 6-4, 6-3 என வென்றார். இவர் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைப்பரை சந்திக்கிறார்.

இது குறித்து சானியா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள்  பிரிவு ஒற்றையர் போட்டியில் ஒரே சமயத்தில் இரண்டு இந்தியர்கள்  இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
 

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு இரண்டாம் இடம்.

srilanka0000.jpgசர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின்படி இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக சம புள்ளிகளைப் பெற்று இந்தியாவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த இலங்கை,  நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-0 எனும் விகிதத்தில் வெற்றியீட்டியதன் மூலம் மேலதிகமாக ஒரு புள்ளியைப் பெற்று இரண்டாம் ஸ்தானத்தை அடைந்துள்ளது.
 
ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசையின்படி 122 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா தொடர்ந்தும் முதலாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இலங்கை 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் 119 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளை,  கிரிக்கெட் விளையாட்டில் முடிசூடா மன்னானாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலிய அணி நீண்ட காலத்துக்குப் பின் 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்வியே அவுஸ்திரேலிய அணி பின்வரிசைக்குச் செல்லக் காரணமாகும்.

இலங்கை அணி எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் திறமையாக விளையாடி தொடர் வெற்றிகளை ஈட்டும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.