செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஈழமக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும்: புதிய தமிழகம்

election_ballot_cast.jpgபாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,

பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.

இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவு

bus.jpgஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று அதிகாலையிலிருந்து தூரச்சேவைகள் உட்பட நாடு முழுவதும் எதுவித தங்குதடையுமின்றி பஸ் சேவைகள் இடம்பெறுவதாக சபையின் பிரதான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அத்தியட்சகர் என். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.

நேற்று முற்பகல் வரை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு 101 பஸ் வண்டிகள் வந்து சேர்ந்ததாகவும், தூர இடங்களுக்குத் தடங்கலின்றி பஸ் சேவைகள் நடைபெறுவதாகக் கூறிய அத்தியட்சகர், “பஸ் இல்லை” என்ற நிலையை இல்லாமற் செய்யும் அளவுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். இ. போ. ச. சாலை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முடிவைப் பெற்றுத் தந்து சுற்று நிருபத்தை வெளியிட போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் நாடு முழுவதும் இ. போ. ச. பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது.

புத்தாண்டு முற்பணம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நண்பகலில் இருந்து திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதனால், பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். சிலர் பஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வேன்களுக்கு ஹட்டன் நோக்கிச் செல்ல ஆள் ஒருவருக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா வரை செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுட்டது. அவ்வாறும் வரமுடியாதவர்கள் பலர் விடுதிகளில் தங்கினர்.

நேற்று (11) அதிகாலை முதல் இரத்தினபுரி பஸ் டிப் போவுக்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட பஸ் வண்டி கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிப்போ அதிகாரியொருவர் தெரிவித்தார். சன நெரிசல் மிக்க இச்சந்தர்ப்பத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என பயணிகள் தெரிவித்தனர்.

புலிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அமெரிக்க உதவி அமைச்சர் விருப்பம்

richard_boucher0.jpgபுலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்  என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம்  நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி நாடு திரும்பினார் – 500 மில். டொலர் நிதி உதவி; ஒரு இலட்சம் பேருக்கு வேலை

mahinda-rajapaksha.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவர் லிபிய ஜனாதிபதி கேர்ணல் மு அம்மர் கடாபி, பிரதமர் அல்படாதி அலி அல் முஹம்மதி உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

500 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும் சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கண் தான தினம் பிரகடனம்

eye.jpgடிசம்பர் மாதம் 18ஆம் திகதியை கண் தான தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

கண் தான சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான தேசபந்து டொக்டர் ஹட்ஸன் சில்வாவின் பிறந்த தினத்திலேயே இந்த கண் தான தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் தனது 48 வருட சேவையில் பார்வையற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் தானம் வழங்கியுள்ள சேவையை கௌரவிக்கும் வகையிலும் இச்சேவையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இத்தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் – பிரதமர்

army-wanni.jpgபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதனைப் போல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து மக்களும் தமது இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார். ஹொரணை ஸ்ரீ.ல.சு. கட்சி காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

கடந்த 30 வருடமாக வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த  பயங்கரவாதத்தை ஒழிக்க தென்பகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோல் நாட்டின் அபிவிருத்தியிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். நாட்டின் யுத்தத்தின் போதும் நாட்டின் அபிவிருத்தியின் போதும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கின. அதேபோல் இவைகள் மத்திய அரசிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வடக்கு யுத்தத்தை சுமார் 1/2 மணி நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஆனால் அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த யுத்தம் மெது மெதுவாக நடைபெறுகின்றது.