எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மாத்தளையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை

ctb-bus.jpgஇ.போ.ச.  பஸ் வண்டிகளுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று விரைவில் மாத்தளை களுதாவளை யில் அமைக்கப்படும் என்று பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸாநாயக்கா தெரிவித்தார்.

இத்தொழிற்சாலை மூலம் மாதத் திற்கு 700 டயர்களை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிரு ப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப் பிட்டார்.

3 ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை 425 ஓட்டங்கள்

samaraweera.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிப்பு கடத்தல் பின்னணியில் வயோதிபப் பெண்

ஹட்டன் ரியல்தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த போது கடத்தப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் கம்பளை சிங்காவத்த பகுதியில் சிறுசிறு காயங்களுடன் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் ஹட்டன் ரியல் தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் மாணவிகள் இருவரும் பாடசாலை செல்வதற்காக காத்து நின்றனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் நின்ற வயோதிப மாது ஒருவர் மயங்கி விழுவது போன்ற பாசாங்கு காட்டியுள்ளார்.இதனை உண்மையென நம்பிய இரு மாணவிகளும் அந்த பெண்ணை தாங்கிப் பிடித்தவுடன் வானில் வந்த சிலர் அந்தப் பெண்ணுடன் சேர்த்து இரண்டு மாணவிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

வானில் ஏற்றிய சில நிமிடங்களிலேயே மாணவிகள் மயக்க முற்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். கம்பளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு மாணவிகளுள் ஒருவரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

sunnagam.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுன்னாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கார்த்தீபனின் நேரடி மேற்பார்வையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொலிஸார் இந்நடவடிக்கைகளுக்கு பேராதரவு வழங்கினர். பொதுமக்கள், பொலிஸார், மாணவர்கள், அரச ஊழியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் இந்நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

வட அமெரிக்காவுக்கு அகதிகள் கப்பல்அகதிகள்

200 பேருடன் கனடா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த எம்.வீ.சன்.சீ என்கிற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் வட அமெரிக்காவையே சென்றடைய உள்ளது என்று அமெரிக்காவின் அரச உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி ஒன்று கசிந்துள்ளது.

கடற்கரை வீதி திறந்து வைக்கப்பட்டது

beach-road.jpgஉயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து புதிய கடற்கரை வீதியும் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைப்பதைப் படத்தில் காண்க

beach-road.jpg

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மருத்துவக் குழுவை அனுப்புகிறது இலங்கை

பிரதமர் கிலானியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசுவ் ரஸா கிலானியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மருத்துவக் குழுவையும் மருந்துவகைகளையும் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் உயிர், உடைமைகளை இழந்தோருக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்திருப்பதாக ஏ.பி.பி.செய்திச் சேவை தெரிவித்தது.பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேயிலையையும் இலங்கை அனுப்பவுள்ளது. இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அவசர கால சட்டம் 83 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று 83 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டினார் மேர்வின்

gggg.jpgபெருந் தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய அதிகாரி ஒருவரை மாமரம் ஒன்றில் கட்டினார். ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம்

kattankudy.jpgகாத்தான்குடி பள்ளிவாசல்களில் கடந்த 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல், குஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் புனித இஸாத்தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 325பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் 20 ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.