சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

200 மீற்றர் நீச்சற் போட்டியில் பெல்ப்ஸ் புதிய சாதனை

pelps2.jpgபிரான் ஸின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இரண்டு நாட்களுக்குள் 11 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றவரும் உலக சாதனைக்கு சொந்தக்காரருமான மைக்கல் பெல்ப்ஸ் 200 மீற்றர் போட்டியின் இறுதிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.அவரது புதிய சாதனை 1:51.51 ஆக அமைந்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி – முரளி ஆட்ட நாயகன்

murali.jpgபாகிஸ் தானுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்த அன்ஜலோ மத்தியூஸ் 50 பந்துகளுக்கு 3 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களை பெற்றார்.

கடைசி வரிசையில் முரளி 15 பந்துகளுக்குள் 4 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை வலுவான நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உமர் குல் 21 பந்துகளுக்கு 6 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்றார்.

சிறப்பாக பந்துவீசிய திலின துஷார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சகலதுறை ஆட்டத்தை வெளிக்காட்டிய முரளிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

SRI LANKA
U. Tharanga c Akmal b Razzaq 17
S. Jayasuriya c Aamer b Gul 15
K. Sangakkara c Afridi b Ajmal 36
M. Jayawardene run out 33
C. Kapugedera c Akmal b Afridi 8
T. Samaraweera c Younus b Razzaq 10
A. Mathews c and b Aamer 43
N. Kulasekera c Razzaq b Aamer 16
M. Muralitharan b Aamer 32
T. Thushara not out 8
L. Malinga not out 4
EXTRAS: (b1, lb4, w4, nb1) 10
TOTAL (for 9 wkts) 232

FALL OF WICKETS: 1-31 (Jayasuriya), 2-45 (Tharanga), 3-93 (Sangakkara), 4-105 (Kapugedera),
5-125 (Samaraweera), 6-131 (Jayawardene), 7-173 (Kulasekera), 8-204 (Mathews), 9-223 (Muralitharan).

BOWLING: Aamer 10-0-45-3 (w1, nb1), Razzaq 10-0-33-2 (w1), Gul 8-0-46-1 (w1),
Ajmal 10-0-40-1, Younus 2-0-13-0 (w1), Afridi 10-1-50-1

PAKISTAN
KAMRAN AKMAL b Thushara 20
Shoaib Malik b Kulasekera 9
Shahid Afridi c Sangakkara b Thushara 27
Mohammad Yousuf c Sangakkara b Kulasekera 4
Younus Khan c Mathews b Thushara 12
Misbah-ul Haq c and b Muralitharan 9
Fawad Alam c Sangakkara b Jayasuriya 31
Abdul Razzaq lbw b Muralitharan 17
Umar Gul b Malinga 33
Mohammad Aamer run out 23
Saeed Ajmal not out 0
EXTRAS: (lb5, w5, nb1) 11
TOTAL (all out, 44.4 overs) 196

FALL OF WICKETS: 1-29 (Malik), 2-41 (Akmal), 3-48 (Yousuf), 4-73 (Afridi),
5-78 (Younus), 6-95 (Misbah), 7-134 (Alam), 8-134 (Razzaq), 9-196 (Aamer), 10-196 (Gul).

BOWLING: Kulasekera 7-1-30-2, Malinga 8.4-0-50-1 (w2, nb1), Thushara 8-0-29-3 (w2),
Muralitharan 10-0-46-2, Mathews 5-0-22-0 (w1), Jayasuriya 6-0-14-1

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் முரளிதரன் அதிரடி ஆட்டம்

murali.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரன் மிகவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியுள்ளார்.
பின்வரிசை ஆட்டக்காரரான முரளிதரன் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுன்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு தம்புள்ள, சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். எனினும் அஞ்சலோ மெத்திவ்ஸ், அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் முறையே 43,  36, 33 ஓட்டங்ளைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். இறுதியாக முரளிதரனின் அதிரடி ஆட்டத்துடன் இலங்கைய அணி 232 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மொஹமட் ஆமிர் 3 விக்கட்டுக்களையும் அப்துல் ரஸாக் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இன்னும் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணி 233 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது. 

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது போட்டி இன்று

sri-lanka-cri-te.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டெஸ்ட் போட்டியில் இலங்கை – அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் தொடரை கைவிட்ட நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்த நிலையில் களத்தில் குதிப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சொஹைப் அக்தார் மீண்டும் சிக்கலில்…

cricket.jpgகிரிக்கெட் உலகில் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சொஹைப் அக்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தது  பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறியதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் பதில் அளிக்குமாறு அக்தாரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்,  அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வஸீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்ற பங்களாதேஸ்

bangladesh-cricket.jpgமேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.

முதலில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ் கிரிக்கட் அணி. இது பங்களாதேஸ்  அணி, சர்வதேச கிரிக்கட் சுற்றுலாவொன்றில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் சந்தித்தது. முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பங்களாதேஸ்  பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் பந்து வீச்சில் மிரட்டிய பங்களாதேஸ் பின்னர் பேட்டிங்கிலும் திறமையைக் காட்டி மேற்கு இந்தியத் தீவுகளை தேல்வியடையச் செய்தனர்.

அபாரப் பந்து வீச்சு காரணமாக ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் டிராவிஸ் டவ்லீன் சிறப்பாக ஆடி 117 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது.

இந்த ஓட்டத்தை  எட்ட பங்களாதேஸ் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர் பங்களாதேஸ் வீரர்கள்.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகம்மது அஷ்ரபுல் ஆகியோர் அரை சதம் அடித்து பங்களாதேஸத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.கேப்டன் ஷாகிப், 61 பந்துகளைச் சந்தித்து 65 ரன்களைக் குவித்தார். ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே கிடைத்தது. அஷ்ரபுல் 77 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.  ஆட்டம் முடிய கடைசி 6 பந்துகள் இருந்த நிலையில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அப்துர் ரஸ்ஸாக். இதன் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. 2வது வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதான் முதல் தொடர் வெற்றி…

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த 200 ஒரு நாள் போட்டிகளிலும், இன்றைய போட்டிதான் பங்களாதேஸ் அணி பெற்ற கூடுதலான ஓட்டமாகும்.

பங்களாதேஸ் அணி வெளிநாட்டு மண்ணில் வென்றுள்ள முதல் ஒரு நாள் போட்டித் தொடரும் இதுவே.

செயின்ட் கீட்ஸ் தீவில் உள்ள வார்னர் பூங்காவில் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இதையும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 07 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறை!

school-books.jpgஅரசாங்கப் பாடசாலைகள் யாவும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக அரசாங்கப் பாடசாலைகள் யாவும் செப்டம்பர் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி தங்கியிருந்த தென்னாப்பிரிக்க வீடு விற்பனைக்கு?

gandhi.jpgதென்னா பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டில் மகாத்மா காந்தி 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீடு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும்,  இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே சிறிதளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு மரங்கள் சுழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். மேற்கூரை வேயப்பட்ட இந்த வீட்டில் 1908-ம் ஆண்டிலிருந்து காந்தி மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் கடந்த 25 ஆண்டுகளாக இதில் வசித்து வந்தார். இவர் தற்போது கேப்டவுனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற இந்த வீட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் அவர் விளம்பரம் கொடுத்து இதை விற்க முடிவு செய்துள்ளார் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீட்டின் விலையை அவர் தெரிவிக்கவில்லை இதனிடையே விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய கல்வி குறித்த பிரிவை உருவாக்கிய ஸ்டீபன் கெல்ஃபின் உதவியை நான்சி பால் நாடியுள்ளார்.

இந்த வீட்டை வாங்கக் கூடிய இந்தியர்களை தேடி வருகிறார் ஸ்டீபன் கெல்ஃப். இந்த வீட்டை வாங்கி இங்கு வரும் பேராசிரியர்கள் தங்கிச் செல்லும் இல்லமாக இதை மாற்றுவது குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் மற்றொரு இடமும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள காந்தி பண்ணையில்தான் தனது ஆதரவாளர்களுடன் சத்யாகிரஹத்தை அவர் போதித்தார்.

தொடக்கத்தில் டர்பனின் வட பகுதியில்தான் மகாத்மா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் குடியேறினர். இங்குதான் சத்யாக்கிரஹத்தை அவர் போதித்தார். பின்னரே அவர் தனது போராட்டத்தை இனவெறிக்கெதிரான போராட்டமாக மாற்றினார். 1800 மற்றும் 1900-ம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவு கூரப்படுகிறது. பல நிறுவனங்களும்,  தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெரும் தொகை கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். தற்போது காந்தி வசித்த வீடு விற்பனைக்கு உள்ளது.

ஸ்லோவேனியா டெனிஸ் போட்டி சபீனா சாம்பியன் கிண்ணத்தை வென்றார்

sabeena.jpgரஷ்யாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தினாரா சபீனா இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை 6-7,6-1,7-5 என்ற செட்களில் இறுதிப் போட்டியில் போராடி வீழ்த்தி ஸ்லோவேனியா ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உலகத் தரவரிசையில் 38 ஆவது இடத்திலும் உள்ள சாரா எர்ரானி, முதல் செட்டில் டைபிரேக் வரை சென்று 7-6 என்று சபீனாவை வீழ்த்தினார்.

மூன்றாவது செட்டில் சாரா எர்ரானி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க 54 என்று முன்னிலை வகித்தார். ஆனால், அதற்கு அடுத்த தன் சர்வை சபீனாவிடம் இழக்க தோல்வியடைந்தார்.

சனா 172 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்

sania-mirza.jpgஇந்தியா வின் டெனிஸ் தாரகையான சானியா மிர்சா ஐ.டி.எப்,சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுக்கான  சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்.,  சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்;  இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் ஜூலி காயினைத் தோட்கடித்தார்.

முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின்பு சானியா 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த சானியா 6-4 என சுலபமாக கைப்பற்றினார். இதையடுத்து சானியா 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.