சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஆடம்பர ஹோட்டல்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கை

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்களை தாக்குவது கடினமா கவுள்ளதால் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 2001 ம் ஆண்டு தாக்கப்பட்ட பின் பயங்கரவாதத்துக் கெதிரான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.

பாதுகாப்புகளும் கடுமையாக்கப்பட்டன.  இதனால் பயங்கரவாதிகளின் இராணுவ, அரசியல் இலக்குகள் தோல்வியடைகின்றன. சில தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்கவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தவும் பயங்கரவாதிகள் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஹோட்டல்களும், நலன்களுமே தாக்குதலுக் குள்ளாகலாமென அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் வெள்ளத்தால் பலியானோர் தொகை 31

110909turky.jpgதுருக்கி யில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் தொகை 31ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமிரவு துருக்கியில் பாரிய மழை பெய்தமையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியுள்ளனர். ஐம்பது வருடங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அறிவிக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மக்கள் கூரைகளிலும் வாகனங்களிலும் ஏறி காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பினர். சிலர் உயர்ந்த வாகனங்களுக்கு மேல் ஏறி நின்றனர். ஆனால் காட்டு வெள்ளம் போல் பாய்ந்து வந்த வெள்ளம் வாகனங்களையும் அடித்துச் சென்றது. தொள்ளாயிரம் தீயணைப்புப் படையினர் ஆறு இராணுவ ஹெலிகொப்டர்கள், முப்பது பாரம் தூக்கி இயந்திரங்கள் என்பன மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் 18 பேரின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் பல பெண்களும் இறந்து கிடந்தனர். உள்துறை அமைச்சர் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மேலும் மழை பெய்யலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

துருக்கிய பிரதமர் தையிப் எடார்கன் தலைநகர் ஸ்தான்புலுக்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார். இதுவரை ஆயிரம் பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு உதவ கிரேக்கம் முன்வந்துள்ளது.

கூடாரங்கள், உணவுப் பொருட்கள், உடுதுணிகள் ஆகியவற்றை எகிப்தின் செம் பிறைச் சங்கம் வழங்கி வருகின்றது. வெள்ளம் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்தோரின் புள்ளி விபரங்களை மதிப்பீடு செய்ய துருக்கி உள்நாட்டமைச்சு உத்தரவிட்டுள்ளது. 150 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெள்ளத்தில் நஷ்டமடைந்துள்ளன.

அரச சாகித்திய விருதுகள்

இவ்வாண்டுக்கான இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் தங்க விருது பேராசிரியர் க. குணராசாவுக்கு (செங்கை ஆழியனுக்கு) வழங்கப்பட்டுள்ளது. சிங்களப் பிரிவில் கலாநிதி திஸ்ஸ காரியவசம் மற்றும் ஆங்கில பிரிவில் கலாநிதி ஆஷ்லி கல்பே ஆகிய இருவருக்கும் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசுத் தொகையாக ரூ. 75,000/- இவர்களுக்கு வழங்கப்படும்.

நேற்று கலாசார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டதோடு இவ்வாண்டு சாகித்திய பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில், எட்டுப் பிரிவுகளில் தமிழ் நூல்களும் அவற்றின் படைப்பாளர்களின் பெயர்களும் அடங்கும். ஒவ்வொரு துறையிலும் இருவரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

14ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் வைபவத்துக்கு இவர்கள் அழைக்கப்படுவர். அங்கேயே பரிசு எவருக்கு என்பது தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு விருதும் மற்றவருக்கு சான்றிதழும் வழங்கப்படும் என இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நாவல் இலக்கியம்: விதி வரைந்த பாதையில் – வவுனியர் இரா உதயன்

வயலான் குருவி – அkஸ் எம். பாயிஸ், அக்கரைப்பற்று

சிறுகதை இலக்கியம் : ஆத்ம விசாரம் – அ. ச. பாய்வா, மட்டக்களப்பு

உடைந்த கண்ணாடி மறைந்த குருவி – ஓட்டமாவடி அரபாத்

கவிதை : என்னைத் தீயில் எறிந்தவள் – அஷ்ரப் சிகாப்தீன்

வேறுடன் பிடுங்கிய நாளிருந்து – நீ. பி. அருளானந்தம், கல்கிசை

நாடக இலக்கியம் : ஒரு கலைஞனின் கதை – கலைஞர் கலைச்செல்வன்

வீர வில்லாளி – எஸ். முத்துக்குமாரன் – மட்டக்களப்பு

சிறுவர் இலக்கியம் : பூனைக்கு மணி கட்டிய எலி- சி. எம். எம். ஏ. அமீன்

குட்டி முயலும் சுட்டிப் பயலும் ஓ. கே. குணநாதன், மட்டக்களப்பு

நானவித இலக்கியங்கள் : கர்மயோகி பவுல் – வண. கலாநிதி எஸ். ஐ. மத்தியு, கல்முனை

மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் – எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பு

மொழிபெயர்ப்பு இலக்கியம் : நெடும் பயணம் – மடுளுகிரியே விஜயரத்ன

குருதட்சனை – திக்குவளை கமால்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பு : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – சரோஜனி அருணாசலம்

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : ஆஸ்ட்ரேலியா வெற்றி

999cri.jpgநேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 6 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட நாட்-வெஸ்ட் தொடரில் 3-0 என்ற போட்டிக் கணக்கில் ஆஸ்ட்ரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஸ்கோர் விபரம் வருமாறு

NatWest Series [Australia in England] – 3rd ODI

England v Australia

Australia won by 6 wickets (with 9 balls remaining)
ODI no. 2885 | 2009 season
Played at The Rose Bowl, Southampton
9 September 2009 – day/night (50-over match)
       
 England innings (50 overs maximum)
 AJ Strauss c Clarke b Hauritz  63 
 RS Bopara  c Hopes b Bracken  10
 MJ Prior†  c Hopes b Johnson  0
 OA Shah  lbw b Johnson  8
 PD Collingwood  c Bracken b Watson  28
 EJG Morgan  c Johnson b Lee  43 
 LJ Wright  c sub (AC Voges) b Hopes  9
 TT Bresnan  not out  31 62 37 3 0 83.78
  GP Swann  lbw b Watson  3 
 RJ Sidebottom  c White b Watson  24 
 Extras (lb 1, w 4, nb 4) 9     
      
 Total (9 wickets; 50 overs) 228 (4.56 runs per over)
 Did not bat JM Anderson 
Fall of wickets1-41 (Bopara, 7.5 ov), 2-41 (Prior, 8.4 ov), 3-62 (Shah, 14.5 ov), 4-98 (Strauss, 22.3 ov), 5-132 (Collingwood, 31.4 ov), 6-147 (Wright, 35.4 ov), 7-183 (Morgan, 42.3 ov), 8-188 (Swann, 43.3 ov), 9-228 (Sidebottom, 49.6 ov) 
        
 Bowling    B Lee 9 1 58 1 
 NW Bracken 10 0 36 1
 MG Johnson 10 1 39 2  
 NM Hauritz 6 0 24 1 
 SR Watson 8 0 36 3

Australia innings (target: 229 runs from 50 overs)
 SR Watson  lbw b Anderson  7 
 TD Paine†  lbw b Collingwood  29 
 CL White  c Sidebottom b Wright  105 
 MJ Clarke*  b Swann  52
 CJ Ferguson  not out  20  
 MEK Hussey  not out  8  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
Total (4 wickets; 48.3 overs) 230 (4.74 runs per over)
Did not bat JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, NW Bracken 
Fall of wickets1-16 (Watson, 4.6 ov), 2-52 (Paine, 13.3 ov), 3-195 (Clarke, 43.4 ov), 4-220 (White, 47.2 ov) 
        
 Bowling
 JM Anderson 9.3 1 52 1
 RJ Sidebottom 10 1 39 0
 TT Bresnan 10 1 46 0  
  PD Collingwood 7 0 39 1 ) 
  LJ Wright 7 1 16 1
 GP Swann 5 0 35 1
 
Match details
Toss England, who chose to bat
Series Australia led the 7-match series 3-0
Player of the match CL White (Australia)
Umpires PJ Hartley and AL Hill (New Zealand)
TV umpire RA Kettleborough
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire NJ Llong
 

இலங்கைக்கு இந்திய அணி செல்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

999.jpgஇலங் கையில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக, இந்திய கிரிக்கட் இலங்கை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 512 சட்டத்தரணிகள் ஆதரவு கையொப்பங்களை இட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை விதிக்க சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிட்ப்பட்டிருந்த இந்திய கிரிக்கட் சபை, நேற்று தமது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தது.

அதில் தமது சபைக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்வதில்லை என்றும் தமது சபையை அரசாங்கம் அமைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தது. எனவே இந்த மனுத்தாக்கல்  தொடர்பில் தமக்கு பதிலளிக்கமுடியாது என்றும் இந்திய கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை விதிக்க மறுத்துள்ளது

இருபது ஓவர் போட்டிகளால் எனது திறமை மேம்பட்டுள்ளது: பிரெட்லீ

cricket_stadium.jpgஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடியதால் தனது பந்துவீச்சுத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரெட்லீ அளித்துள்ள மின்னஞ்சல் பேட்டியில், இருபது-20 போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடிய போட்டி என்றாலும், இதில் விளையாடியதால் எனது பந்துவீச்சுத் திறன் மேம்ப்பட்டுள்ளது.

யார்க்கர், ஸ்லோ பால் மற்றும் ஸ்லோ-பாலில் பவுண்சர் வீசுவது உள்ளிட்டவை தற்போது எனக்கு அத்துபடியாகி விட்டது. இதேபோல் இருபது ஓவர் போட்டிகளில் பேட் செய்யும் போது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக பிரெட்லீ தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடுவதற்காக பிரெட்லீ இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயஸ், பூபதி இணைகள் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி

999bhupathi-knowles.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டங்களில் லியாண்டர் பயஸ்-லூயி இணையும், மகேஷ் பூபதி-மார்க் நோல்ஸ் இணையும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

4ஆம் தரவரிசையில் உள்ள பயஸ்-லூயி இணை, 7ஆம் தரவரிசையில் உள்ள பலமான தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி, டிக் நார்மன் இணையை 6- 3, 5- 7, 6- 4 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

பயஸ்-லூயி இணை 7 டபுள் ஃபால்ட்களையும், 20 முறை கிரவுண்ட் ஷாட்களில் தவறையும் செய்தனர். இருப்பினும் வெற்றி பெற்றதற்கு காரணம் முதல் சர்வில் வெற்றி பெற்றது அதிகம். மேலும் தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையின தவறுகளை குறைவாக செய்தாலும் அந்த தவறுகள் முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்ததால் பயஸ்-லூயி இணை வெற்றி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3ஆம் தர நிலையில் உள்ள மகேஷ் பூபதி- மார்க் நோல்ஸ் இணை, தர நிலையில் இல்லாத குரேஷிய-பிரான்ஸ் இணையான லுபிசிச்-லோத்ரா இணையை 6- 4, 4- 6, 7- 6 என்ற செட்களில் சற்றே தட்டுத் தடுமாறி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பம்! முதல் போட்டியில் இலங்கை வெற்றி

cricket_stadium.jpgஇலங்கை,  இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு அணியும் ஏனைய இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

‘கொம்பக்’ கிண்ணத்துக்கான இந்தச் சுற்றுத் தொடரில் இறுதி ஆட்டம் உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. சகல போட்டிகளும் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டங்களாகவே இடம்பெறும்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகளிடையே 11ஆம் திகதியும் மூன்றாவது போட்டி இலங்கை-இந்திய அணிகளிடையே 12ஆம் திகதியும் இடம்பெறும். இறுதி ஆட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியபோதும் இரு அணிகளுக்குமிடையில் நடந்த இருபது ஓவர்களைக் கொண்ட இரண்டு ‘ருவன்டி-20’ போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றியீட்டியது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள இன்றைய முதலாவது ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர்- பிரகாஷ் ராஜ்; சிறந்த படம் – காஞ்சிவரம்

pracas-raj.jpgதிரைப் படத்துறையில், கடந்த 2007ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘காஞ்சிவரம்’ சிறந்தப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயகிய ‘காஞசிவரம்’ சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தில், கதாநாயகனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு, ‘குலாபி டாக்கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்த நடிகை உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாலு பெண்கள் என்ற படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படம், சிறந்த குடும்பநல திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.

2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கான போட்டியில், ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’வும், அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ம் முதல் இடத்தில் இருந்தன. இந்த இரு படங்களும் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் என்பது மட்டுமின்றி, சமூக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன.

இதனால், இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று, சிறந்த படத்துக்கான விருதை பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான ‘காஞ்சிவரம்’ சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் பாடிய ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தார்ம்’ படத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான விருது கிடைக்கவுள்ளது.

‘காந்தி மை ஃபாதர்’ படம் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளது. அதோடு, சிறந்த திரைக்கதை (பெரோஷ் அப்பாஸ்) மற்றும் சிறந்த துணை நடிகர் ( தர்ஷன் ஷாரிவாலா) ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.

‘திங்க்யா’ என்ற மராத்திப் படத்தில் நடித்த சிறுவன் சரத் கோயங்கருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. விருதுப் பெறுவோர் பட்டியல் கடந்த வாரமே தயாராகி விட்டது. எனினும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக, இதுபற்றிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

யு.எஸ். ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

venus-williams.jpgஅமெரிக் காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.

நடந்து முடிந்த இப்போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ், வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் கிளிஸ்டர்ஸ் வென்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 6-0 என்ற புள்ளிக்கணக்கில் 2வது செட்டை வீனஸ் கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் இறுதி செட் ஆட்டத்தில் கிளிஸ்டர்ஸ் சிறப்பாக விளையாடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, வீனஸை வீழ்த்தினார்.

குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கிளிஸ்டர்ஸ், இந்த யு.எஸ். ஓபன் தொடரில் மீண்டும் களமிறங்கினார். வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.