இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் 24ம் திகதி நடைபெற்ற அரசியல் கருத்துப்பகிர்வும் ஆய்வும் என்ற நிகழ்வின்போது தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் தனது அவதானங்களை இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.
ஜெயபாலன் தனது இலங்கைக்கான பயண நோக்கம் பற்றி தெரிவிக்கையில்: செஞ்சோலை காந்தரூபன் குழந்தைகள் இல்லத்தின் நிதிப்பொறுப்பை லண்டன் ‘அகிலன் பவுண்டேசன் பொறுப்பெடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக மன்னார் வன்னிப் பிரதேசத்திற்குப் போயிருந்ததாகவும், இந்த செயற்திட்டத்தை ஏற்படுத்திய ‘லிட்டில் எயிற்’ மற்றும் ‘தேசம்நெற்’ சார்பில் தான் கலந்து கொண்டதாகவும் கூறினார். இந்தக்காலங்களில் தான் அவதானித்த அரசியல் நிலைமைகளை ரிபிசி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு விமான நிலையம் முதல் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா வரையிலான தெருக்கள் வீதிகள் எங்கும் உள்ள பதாகைகள் சுவரொட்டிகள் யாவுமே மகிந்த ராஜபக்கவின் விளம்பரங்களாகவே இருந்தன. கிட்டத்தட்ட 90 சதவிகிதமானவை மகிந்தாவினுடையதாகவும் 10 சதவிகிகதமானவைகள் சரத்தினுடையதாகவும் இருந்தன. இவை தவிர இதர வேட்பாளர்களின் விளம்பரங்களோ அன்றி வேறெந்த அடையாளங்களோ காணப்படவில்லை. இந்த தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவும் பாரபட்சம் நிறைந்ததாகவும் சமத்துவமற்ற பிரச்சாரமாகவும் இருந்தன. மகிந்த ராஜபக்ச பலமடங்கு அதிகமான பணம் செலவு செய்து இத்தேர்தலைச் சந்திக்கின்றார்.
பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த மற்றைய வேட்பாளர்களில் சிவாஜிலிங்கம் விக்கிரமபாகு போன்றோரை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் ஆனால் ஏனையோரை அறிந்திருக்கும் வாய்புக்கள் மிகவும் குறைவானதாகவே தென்படுகிறது. இலங்கையில் உள்ள ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி ஜெயபாலன் குறிப்பிடுகையில் முழு அரசு சார்பு ஊடகங்களும் தமது நேரடி ஆதரவினை மகிந்தாவிற்கு வெளிப்படையாகவும் மற்றைய தேர்தல் வேட்பாளர்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களிடம் பக்க சார்பு ஊடகமுறைமை உள்ளது. இது சமூகத்தின் ஜனநாயக தன்மையின் ஆரோக்கியத்தின் அளவுகோலாக இருப்பதை காணலாம்.
மட்டக்களப்பில் மகிந்தா ஆதரவு சுவரொட்டிகள் பெருமளவில் தமிழில் காணப்படும் அதேநேரம் கருணா பலத்த பாதுகாப்புடன் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து சென்றதையும் நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அநுராதபுரத்தில் லக்மிக செய்தியாளரிடம் கருத்து கேட்டபோது இவர் மகிந்தா மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த குடும்ப அரசு மாற்றப்பட வேண்டும், இதன் மூலமே இலங்கையில் மீண்டும் ஜனநாயக நிலைமைகளை வளர்க்கமுடியும் என்று கூறினார். அநுராதபுரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் ஜேவிபி ஆதரவாளன் என்றும் தமது கட்சியின்படி தான் சரத்தையே முழுமையாக ஆதரிப்பதாகவும் மகிந்தா சகோதரர்களால் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.
தான் சரத்தையே ஆதரிப்பதாக கூறிய மட்டக்களப்பில் பணிபுரியும் டாக்டர், மட்டக்களப்பில் புத்திஜீவிகளும் சமூகத்தின் உயர் மட்டத்தினரும் சரத்தையே ஆதரிக்கின்றனர். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி யாராலும் சரியாக கணிப்பீடு செய்ய முடியாதுள்ளது. ஆனால் இந்த வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையே இலங்கை எங்கும் உள்ளன. ஊடகங்கள் மேல்தட்டு வர்க்கத்தையே பிரதிபலிக்கின்றன. கீழ்மட்டத்து மக்களின் ஆதரவு நிலையில் உள்ள மாற்றங்களை சரியாக கண்டுகொள்ள முடியாது உள்ளதென ஜெயபாலன் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்பே வட-கிழக்கு மக்களில் பெரும்பாலானோர் சரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் கணிசமாணேர் சிவாஜிலிங்கத்திற்கும் ஆதரவளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதன் பின்னரே ரிஎன்ஏ தாமும் சரத்திற்கே ஆதரவளிக்க முடிவு கொள்ள வேண்டியிருந்தது என்ற அபிப்பிராயங்களும் பரவலாக உள்ளது. இதை சிலவேளை ரிஎன்ஏ யினர் தாம் கேட்டுக்கொண்டதன்படி மக்கள் சரத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று பின்னாளில் பிரச்சாரங்களை அவிழ்த்துவிடக்கூடும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இலங்கையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் அந்த ஜனாதிபதி தான் தமிழ் மக்களின் ஆதரவாளன் என்ற கருத்தை முன்வைத்து சிங்கள மக்களிடம் வாக்கு கேட்க முடியாத நிலையே உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வேட்பாளருக்கு சிங்கள மக்கள் பெருபான்மையினர் வாக்களிப்பதில்லை அவர் ஜனாதிபதியாக வந்ததுமில்லை எனவும் ஜெயபாலன் தன் கருத்தைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே தேர்தல் வேட்பாளர்கள் தமது தமிழ் ஆதரவினை மிகவும் கடுமையாகவே கையாளுகின்றனர்.
நீர்கொழும்பில் உள்ள மீனவ குடும்பங்களை சந்திக்கையில் அவர்களின் அபிப்பிராயப்படி இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் மகிந்தாதான் என்றும் இலங்கையில் நடைபெறும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மகிந்த அரசினாலேயே செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து மகிந்தா ஆட்சிக்கு வருவதாலேயே இந்த அபிவிருத்தி தொடரும் எனவும் அபிவிருத்திப்பணங்களில் மோசடி என்ற குற்றச்சாட்டு வருவது தவிர்க்க முடியாதது ஆனால் சரத் ஆட்சிக்கு வந்தால் முழுமையாகவே நிதி மோசடிகளையே செய்வார் என்றும் கருத்து கொண்டுள்ளனர்.
மன்னார் இளைஞர் கருத்துக் கூறுகையில் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது இவர்களே எமது மக்கள் மீது யுத்தத்தை நடாத்தியவர்கள் எமது மக்களை கொன்று குவித்தவர்கள் இவர்களுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கருத்துக் கொண்டுள்ளார். அதே வேளை புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது செய்த வன்முறையிலும் இவ்விளைஞன் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். புலிகள் மக்களை பழிவாங்கியுள்ளனர் என்று கூறினார்.
சுதந்திர நடமாட்டம் பற்றி கருத்து கேட்டபோது அரசியல் நிலைமைகள் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தாண்டி மக்களிடம் வேறான ஒரு போக்கு உள்ளது என்றும் இராணுவம் பொலீஸ் மக்களை சோதனையிடும் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடம் பாரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக போய்வரும் நிலைமைகள் உள்ளதாக கூறிய ஜெயபாலன் அதேவேளை இன்றுள்ள சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் சமாதானம் வந்துவிட்டது என்று முடிவு எடுக்க முடியாதுள்ளது நாட்டில் முக்கியமாக தலைநகரில் இராணுவம் பொலீசார் மிகவும் உசார்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது பிறப்பிடமான அநுராதபுரத்தில் தான் ஒருவிலாசத்தை அறிய முற்பட்டபோது 5 நிமிடத்தில் இரகசியப் பொலீசார் தம்மிடம் வந்து விசாரித்ததாகவும் பின்னர் சீருடைப்பொலிசார் வந்து விசாரித்ததாகவும் ஆனால் எந்த காரணத்திற்காகவும் முறைகேடாக நடாத்தப்படவில்லை என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்களுக்கு புறம்பாக வட-கிழக்கு பிரதேசம் பின்தங்கிய நிலையிலும் தெற்பகுதி பாதிப்படையாத ஆனால் பாரிய முன்னேற்றமடையாத நிலையிலும் மன்னார் வன்னிப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது. கிளிநொச்சி மன்னார் பிரதேசங்களில் புலிகளின் கல்லறைகள், நினைவாலயங்கள் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. வன்னிமுகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெளியேறிவிட்டதை தான் அவதானித்ததையும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் வசதிகள் அற்று அல்லலுறுவதாகவும் இந்த மீள்குடியேற்றம் பொறுப்பற்ற முறையில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்டைவசதிகள் அற்றிருப்பதை அவதானித்ததாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.
தான் சந்தித்த புலி ஆதரவாளர்கள் இன்றும் தமிழ் அரசியல் தலைமைகளையே குறை கூறுகின்றனர். தமிழ் தலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அக்கறையற்று இருப்பதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.
Nackeera
இலங்கையின் இயல்நிலையை அறியும் வாய்பை தந்த சோதிலிங்கம் ஜெயபாலனுக்கு நன்றி. இக்கட்டுரையின்படி தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடப்பதாகத் தெரியவில்லை. தெற்கிலும் அரசியல் பலாற்காரம் தெரிகிறது. இதேவேளை சர்வதேசத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அங்கே சென்றுள்ளார்கள். இவர்களும் முன்னைய மற்றய தூதர்கள் போல் மகிந்தவின் உல்லாச உபசரிப்பில் மயங்கி உ.ம் பாங் கி மூன் போல் ஆகிவிடுவார்களா? இன்று தமிழ்மக்களின் நிலை மயக்கமானதும் தெளிவற்றதுமாக இருக்கும் போது யாரைத் தெரிவு செய்வது என்பது மிக மிகச் சங்கடமானதே. இந்த இருபெரும் வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கில் ஒன்றையும் தெற்கில் அதற்கு முரணான பரப்புரைகளையும் செய்து வருகிறார்கள். இவர்களைத் தமிழ்மக்கள் எப்படி நம்புவது. மூன்றாவது பலமான ஒருகட்சி இல்லாதது இழுக்கே. அதற்கான சந்தர்ப்பமும் குறைவே. இந்த இருபெருங்கட்சிகளில் கொள்கைவேற்றுமை கொண்டவர்கள் கூடிநிற்கின்றனர். ஜனாதிபதி தெரிவு நடந்தபின்பும் பெருமுடைவை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வுடைவுகள் நாட்டின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உகந்தது அல்ல என்பது என்கருத்து.
palli
நன்றி தேசம் சோதிலிங்கம் ஜெயபாலன் யாரோ சொல்ல கேக்கும் எமக்கு எமது ஊடக நிர்வாகிகளே நேரில் பார்த்து சொல்லும்போது அங்கு நடப்பது புரிகிறது; இதை நாம் சொன்னால் பலர் எம்மீது கல் எறிகின்றனர், இதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவார்கள்; அதையும் கேட்ப்போம்:
indiani
செஞ்சோலைப் பிள்ளைகள். இந்தக் குழந்தைகளைப் பாவித்துவிட்டு நடுத்தெருவில் விட்டுவிட்டு நாடு கடந்த தமிழீழமும்,, போகாத நாட்டுக்கு தலைவர் தெரிவும்தான் தேவையாயிருக்கு. இந்தப்பழி தீர இந்த ஜென்மம் பத்தாது புலிகளுக்கு.
முகாமில் இருந்தவங்களுக்கு தம்மாலான உதவி, புலமைப் பரிசில் பரீட்சைக்கு உதவி, க பொ த பிள்ளைகளுக்கு உதவி, இப்போ புலி பாவித்துப்போட்டு கைவிட்ட பிள்ளைகளக்கு உதவ முன்வந்த அகிலன் பவுண்டேசன் தேசம் லிட்டில்எய்ட் உங்கள் உதவிக்குத் தலைவணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் பணி
பார்த்திபன்
சோதிலிங்கம் அவர்களே,
ரிபிசி வானொலியில் பணிப்பாளர் ராம்ராஜ் மகிந்த 2005இல் இலங்கை அதிபர் ஆன பின் மகிந்தவின் இரத்த உறவுகள் 320 பேர் அரச பதவிகளில் வந்துள்ளதாக முன்பு அடிக்கடி கூறினார். அதன் விபரங்களைத் தெரிந்தால் வெளியிடுமாறு அவரிடம் கேட்டதற்கு, சென்ற ஞாயிறன்று (31.01.10) தாங்கள் மகிந்தவின் 640 உறவினரின் விபரங்கள் தங்களிடம் உள்ளதாக தன்னிடம் (ராம்ராஜிடம்) கூறியதாகவும், அதைத் தாங்கள் வெளியிடுவீர்களெனவும் அவர் வானலையிலேயே சொன்னார். அது உண்மையாயின் அவற்றை ஏன் இதுவரை வெளியிடாமலிருக்கின்றீர்கள்??
NANTHA
யாழ்ப்பணத்தில் இந்துக்கள் 90 சதவீத மக்கள் தொகையினராக இருந்த பொழுதிலும் பல “இந்து” தர்ம ஸ்தாபனங்கள் காலப்போக்கில் காணமல் போயுள்ளன. உதாரணமாக திருநெல்வேலி முத்துத்தம்பி பாடசாலையோடு இருந்த “சைவ” அநாதை விடுதி 1987 இல் புலிகளால் பிடுங்கப்பட்டது. ஆனால் புலிகள் கத்தொலிக்கரினால் கொழும்புத்துறையில் நடத்தப்படும் அநாதை விடுதியைப் பற்றி மவுனமாக இருந்தனர். புலிகளுடன் கத்தோலிக்க பீடம் சேர்ந்து இயங்கிய நோக்கம் “தமிழ்” அல்ல. மதமாற்றமே ஆகும். அனாதைகள் எப்போதுமே “இலகுவான” தாக்குதல் இலக்குகள்.
இன்று யாழில் உள்ள பல அநாதை விடுதிகள் அரசாங்க உதவியுடன் இயங்குபவை. ஆனால் அவை அங்கு அபயம் தேடியுள்ள பிள்ளைகளின் மதம், நம்பிக்கைகளை மோசடி என்று பிரச்சாரம் செய்யும் கத்தோலிக்க/கிறிஸ்தவ அமைப்புக்களின் கைகளில் உள்ளன. எதிர்காலத்தில் அவை மீண்டும் ஒரு “குழப்பத்தை” உண்டாக்கும்.
john
//கத்தோலிக்க/கிறிஸ்தவ அமைப்புக்களின் கைகளில் உள்ளன. எதிர்காலத்தில் அவை மீண்டும் ஒரு “குழப்பத்தை” உண்டாக்கும்.//
நன்றி நந்தா , இது பெரிய உண்மை இந்த கத்தோலிக்க /கிறீஸ்தவ அமைப்புக்களின் உள்நோக்கம் எப்போதும் மதமாற்றமே ஏன் சில கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறிக்கொள்ளும் தோழர்களின் இணையத்தளங்களை பார்த்தால் புரியும் முதலாவது இந்து சமயம் அழிக்கப்படல் வேண்டும் அப்போதுதான் சாதி ஒழிக்கப்படும் என்று உள்ளது. பேசும் போது மட்டும் மாதாவே காப்பாற்று (சிலவேளை மாரியம்மனைத்தான் சொல்லுகிறார்களோ)
T Sothilingam
பார்த்திபன்,
நான் ரிபிசியில் 24ம்திகதி- தேர்தலுக்கு முன்பேதான் கலந்து கொண்டு எனது கருத்துக்களை சொல்லியிருந்தேன். அதன் பிறகு நான் ரிபிசி கேட்டதேயில்லை. அன்று அந்த கலந்துரையாடலில் ரிபிசிக்கு ஒரு நேயர் போன் எடுத்து அந்த தேர்தல் காலத்தில் மகிந்தாவின் குடும்பத்தினர் எத்தனைபேர் அரசில் அங்கம் வகிக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும் ஒரு ஈமெயில் பற்றி குறிப்பிட்டும் அதேநேரம் அந்த ஈமெயில் பற்றி அழுத்தமாகவும் கருத்து வைத்திருந்தார். இதே ஈமெயில் எனக்கு தமிழர் தகவல் நடுவத்திடமிருந்து வந்திருந்தது. அஙகே நான் முன்வைத்த கருத்து என்ன என்றால் இது முதல் தடவையல்ல இதற்கு முன்னரும் நான் இப்படி ஒரு ஈமெயிலை வாசித்திருந்தேன் என்றது தான். அதில் மகிந்தாவின் குடும்பத்தினர் 600 பேர்கள் அரசில் அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது என்பது மட்டும்தான். இப்படி பல ஈமெயில்கள் வரும், எல்லாவற்றுக்கும் ஒவ்வோரு நோக்கம் உண்டு. இந்த நேரம் பலரும் மகிந்தா குடும்பஆட்சி என்ற கருத்தில் இணையப் பார்த்தார்கள் கவனிக்க மக்களின் நலனில் அல்ல இதைத்தான் நான் எனது கருத்தினூடாக வெளிப்படுத்த முனைகின்றேன். தயவு செய்து நான் என்ன? எங்கே சொன்னேன் என்பதை தெளிவாக கேட்டுவிட்டு என்னிடம் கேள்விகளை கேட்கவும்.
குறிப்பு நான் ரிபிசி ஒழுங்காக கேட்பவர் அல்ல கடந்த ரிபிசி கலந்தரையாடலுக்குப்பிறகு இன்றுவரை ரிபிசி கேட்டதில்லை யார் என்ன சொன்னார்களோ எனக்கு தெரியாது.
எனது புலிகள் பற்றிய நிலைப்பாடு உமக்கு தெரிந்திருக்கும். அழுத்தம் திருத்மாக அவர்கள் பயங்கரவாதிகள் அவர்களிடம் நான் எதையும் எதிர்பார்த்ததில்லை. முயற்சித்தோம் கொலைகளை குறைப்பதற்கே?
அரசு இனவாத அரசு. தேர்தல் முடிவுகளின் பின்னர் வரும் அறிக்கைகள் அதை நிரூபிக்கிறது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுவரை இலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள் இனவாதிகளாகவே கருதப்படுவர்.
NANTHA
ஜோன்:
“சாதி” அமைப்பை போக்க “மத மாற்றம்” எந்த வழியில் பரிகாரமாகும்? பிலிப்பின்சில் நூறு வீதமும் கத்தோலிக்கர். கத்தோலிக்கம் அரசாங்க மதம். அங்கு மக்களின் வாழ்வு சீரடைந்ததா அல்லது பேதங்கள் மறைந்து விட்டதா? ஆனால் அந்த நாட்டின் “வரலாறு” காணாமல் போய்விட்டது. பெண்கள் “வெள்ளை” கிறிஸ்தவர்களுக்கு “வேலைக்காரர்கள்” என்ற பெயரில் அனுப்பப்பட்டு “விபச்சாரத்தில்” ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அமெரிக்காவின் மிகப் பெரிய “அடிமை” கூட்டங்களாக பிலிபயின்ஸ் இன்று உள்ளது. மக்கள் வறுமையில் இருந்து மீளவில்லை. அதற்கான வழியும் இல்லை. இந்த நாட்டின் தலைவர்கள் ஐ.நா.சபையில் அமெரிக்காவுக்கு “கை உயர்த்துவதே” ஒரே பணியாக கொண்டுள்ளனர்.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் “மத மாற்றம்” என்பது கடவுளைக் காட்ட அல்ல. ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அனுசரித்து வரும் “கலை, கலாச்சாரம் ” என்பனவற்றை பூண்டோடு அழித்து “வெள்ளையர்கள்தான்” உங்கள் மேய்ப்பர்கள் என்பதை நிலை நாட்ட இந்த கத்தோலிக்க / கிறிஸ்தவ அமைப்புகள் பொய்யும், பிரட்டும், பல வேளைகளில் “மிரட்டல், கொலை” போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
புலிகளை “இயேசுவின் புனித படை வீரர்கள்(DIVINE SODIERS OF CHRIST)” என்று ஒரு கத்தோலிக்க பாதிரி சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன். யார் இந்த வீரர்கள்? கத்தோலிக்கர்கள் அல்லாத மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று தள்ளிய ஸ்பானிஷ், போர்த்துகீச படைகளுக்கு 15 , 16 ஆம் நூற்றாண்டுகளில் அப்போதைய வத்திக்கான் போப் வழங்கிய புகழாரம்தான் இந்த “இயேசுவின் புனித படை வீரர்கள்”.
நடந்தேறிய சம்பவங்களையும் கொலைகளையும் பார்க்கும் போதும், கத்தோலிக்க கும்பலின் “புலிக்கூட்டணி” பற்றி ஆராயும் போதும் அந்த “புனித வீரர்கள்’ என்ற புகழாரம் ஏன் என்பது இப்போது தெளிவாகிறது.
புலிகள் “இந்து” தமிழர்களிடையே இருந்த “தலைமைகள்” அனைவரையும் கொன்றுள்ளனர்.
புலிகள் எட்டு இந்து கோவில் ஐயர்மாரைக் கொன்றுள்ளனர்.
இந்து மத விவகார அமைச்சராக இருந்த டக்லஸ் தேவானந்தாவை பதினோருதரம் கொலை செய்ய புலிகள் முயன்றுள்ளனர்.
கத்தோலிக்க பாதிரிகள் பகிரங்கமாகவே புலிகளோடு உறவாடி வன்னி பகுதிகளில் “இந்துக்களை” மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். நூறு வீதம் இந்து மக்களின் பகுதிகளில் கத்தோலிக்க கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த முப்பது வருடங்களில் இந்து கோவில்கள் எதுவும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை தூக்கி வைத்துக்கொண்டு கத்தோலிக்க பாதிரிகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இறுதியில் வன்னியில் உள்ள கிராமங்களில் புலிகளோடு சேர்ந்து அந்த மக்களை ” புலிகள்” தங்களுக்கு “கவசங்களாக'” பாவிக்க முள்ளி வாய்க்கால் வரை துரத்தியுள்ளனர். ஜேம்ஸ் பத்திநாதன் என்ற பாதிரி இன்றும் இராணுவ விசாரணையில் உள்ளது தெரிந்ததே.
தவிர “தமிழே’ படிக்காத புலிகளுக்கு “ஆங்கிலத்தில்” பாண்டித்தியம் எப்படி வந்தது? வெளிநாட்டவர்களுடன் பேச்சு வார்த்தைகள் இந்த கத்தோலிக்க ஆசாமிகளின் நன்கொடைகள்.
கத்தோலிக்க கூட்டம் ஆரம்பத்திலிருந்தே “புலிகளோடு” பங்காளிகளாக உள்ளனர். வங்கி கொள்ளைகள் தொடக்கம் பல “இந்துக்களுக்கு எதிரான” நாச வேலைகள் வரை செய்துள்ளனர். இதுவரையில் புலிகளால் கொல்லபட்டவர்களுக்கு “அனுதாபம்” எதுவும் கத்தோலிக்க பீடம் தெரிவித்தது கிடையாது.
தற்போது “அந்நிய” நாட்டு பரங்கி போப்பினால் “நியமனம்” பெற்ற தோமா சவுந்தரநாயகம் “தமிழ் மக்களின்” அரசியல் பற்றி பேசுகிறாராம். கத்தோலிக்க மதம் “நிறுவன மயப்படுத்தப்பட்டது.” (Organised religion). இவர்களின் தலைமை இலங்கையிலும் இல்லை, தமிழ் நாட்டிலும் இல்லை. வத்திக்கானில் உள்ளது. போப்பைப் பற்றி ஆராய்ந்தால் போப் ஒரு “நாசி” பட்டாளக்காரனாக இருந்தது மாத்திரமின்றி சிறு வயது முதல் “ஹிட்லர் யூத்” (Hitler Youth) இல் இருந்து “மற்றவர்கள்” எல்லோரும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்ற கொள்கையினை கடைப்பிடித்தவர். ஹிட்லரை வத்திக்கான் ஆதரித்தது மாத்திரமின்றி பல “நாசி” கொலை காரர்களை தென்னமரிக்கவுக்கு தப்பியோட “பாஸ்போர்ட்” கொடுத்து உள்ளது.
முக்கியமான விஷயம். வத்திக்கான் இன்றும் “கத்தொலிகரல்லாதவர்களைக் கொல்லலாம் என்ற கொள்கையை கொண்டுள்ளது. அதனை “inquisition” என்று சொல்லுவார்கள். ஆயிரக் கணக்கான இந்துக்கள், பெளத்தர்கள், யூதர்கள், உட்பட யாழ்ப்பாண “அரசு” வாரிசுகள்” அனைவரும் இந்தியாவிலுள்ள கோவாவில் கத்தோலிக்கரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த “inquisition” என்பது கத்தோலிக்கர் அல்லாதவர்கள் , மதம் மாற எதிர்ப்போர், கத்தோலிக்க அதிகாரத்தின் எதிரிகள் என்று கருதபட்டோர் ஆகியோரை “சித்திர வதை” மூலம் கொலை செய்து எஞ்சியுள்ள மற்றவர்களுக்கு “பாடம்” புகட்டும் ஒரு பயங்கரவாதம். ஒரு நபர் உயிரோடு இருக்கும் போதே “கைகளை, விரல்களை, காதுகளை, அறுத்தல் என்பன இந்த கத்தோலிக்க சித்திரவதைகளின் “முறைகள்.” இவை மற்றையவர்களின் முனனால் நடத்தப்படும் என்பது இன்னொரு குரூரம்.
புலிகளால் பிடித்துச் சென்ற ஆயிரக் கணக்கான தமிழர்களும், சிறுவர்களும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் “இரத்தக் கறை” படிந்த சித்திர வதை கூடங்களையே இராணுவத்தினர் கண்டுள்ளனர். புலிகளோடு கூடவிருந்த கத்தோலிக்க பாதிரிகளுக்கு இந்த சித்திர வதை கூடங்கள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். பாதிரிகள்” தங்களின்” மத முறைப்படி கொல்லும் சித்திர வதை முறைகளை புலிகளுக்கு பயிற்றுவித்திருக்க வேண்டும். அதனால்த்தான் புலிகளை” இயேசுவின் புனித படை வீரர்கள் என்று புகழ்ந்திருக்கிறார்கள்.
தற்போது கிடைக்கும் தகவல்களின்படி கடத்தப்பட்ட சிறுவர்கள் தப்பியோட முயற்சிக்கும் பொது சிறுவர்களை மரண பயம் கொள்ள வைக்கும் முறையில் ” தப்பியோடிய” சிறுவனை/சிறுமியை காலில் பிடித்து சுவரோடு மோதி கொல்லுதல் என்ற பயங்கரம் புலிகளால் செய்யப்பட்டுள்ளது. மற்றைய சித்திரவதைகள் பின்னர் வெளியாகும்.
பார்த்திபன்
//தயவு செய்து நான் என்ன? எங்கே சொன்னேன் என்பதை தெளிவாக கேட்டுவிட்டு என்னிடம் கேள்விகளை கேட்கவும்.- சோதிலிங்கம் //
முதலில் உங்கள் பொறுப்பான பதிலிற்கு நன்றிகள். நான் எனது கேள்வியைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். “ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜ்; சென்ற ஞாயிறன்று (31.01.10) தாங்கள் மகிந்தவின் 640 உறவினரின் விபரங்கள் தங்களிடம் உள்ளதாகக் தன்னிடம் (ராம்ராஜிடம்)கூறியதாதகவும், அதைத் தாங்கள் வெளியிடுவீர்களென வானலையிலேயே கூறியிருந்தார். அது உண்மையாயின் அவற்றை ஏன் இதுவரை வெளியிடாமலிருக்கின்றீர்கள்??” ராம்ராஜின் தகவலில் எந்தளவு உண்மையுள்ளதென்பதை தங்களின் பதிலின் மூலமே தெரிந்து கொள்ள முடியும். அதனால்த் தான் இந்தக் கேள்வியைத் தங்களிடம் வைத்தேன். புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்.
பார்த்திபன்
நந்தா,
மடுமாதாவின் திருவுருவத்தை பீடத்திலிருந்து அகற்றினால், போப்பாண்டவருட்பட பல உலக நாடுகளின் கண்டனங்கள் இலங்கைக்கு வரும், என்ற ஐடியாவையும் பிரபாகரனுக்கு கொடுத்ததும் ஒரு பாதிரியார் தான் என்பது அப்போது கசிந்த விடயம்.
chandran.raja
முழு இலங்கையுமே தமிழ்- சிங்களமக்களின் பாரம்பரிய பிரதேசங்கள்தான். இதில் தமிழ்பிரதேசங்கள் என்று வரையறுப்பது கடந்தகால தமிழ்சிங்கள இனவாதிகளது வரண்ட அரசியல் கருத்துமல்லாமல் உழைப்பாளி மக்களை மேலும் துன்பத்திற்க்கும் இட்டுச் செல்லும்.
Constantine
Philippines not consist of 100% Catholics – Its utter rubbish… Catholics are less than 83%. Also, to classify the Philippines female workers are ‘Prostitutes’ is complete deformation and also reflects your nasty and 3rd grade stereotype thinking. YOU ARE A WORSE THAN LTTE
john
கிறீஸ்தவ கத்தோலிக்க சபைகள் இப்படித்தான் இயங்குகின்றது புலிகளுடனும் இப்டிபடியே தான் இயங்கியது இலங்கை வடக்கு கிழக்கில் ஒரு கத்தோலிக்க மாகாணத்தை உருவாக்க முயன்றுள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது சரியான காலம் வரும்போது இலங்கையில் இது வெளிவரும்.
மன்னார் மடுமாதாவை வைத்து ஏதோ செய்யலாம் என்ற எண்ணத்ததை கொடுத்தவர்கள் பாதிரியார்கள் என்பதற்கு பல புலிகளின் வாக்கு மூலங்கள் உண்டு இதை இலங்கை புலனாய்வுப்பிரிவினர் பெளத்த பீடாதிபதிகளுக்கு வீடியோ பதிவுகள் மூலம் காட்டியுள்ளனர் இதை திரும்பவும் இந்து குருமார்கள் சிவசிறி ரவிசங்கர் மற்றும் இந்திய தலைவர்களுக்கு பெளத்த மதகுருமார்கள் காட்டி தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.
palli
//மகிந்தவின் 640 உறவினரின் விபரங்கள்//
இந்த கேள்வியை எதிர்கட்ச்சியினர் பலமுறை பாராளமன்றத்தில் மகிந்தாதரப்பிடம் கேட்டனர்; ஆனால் ஒரு போதும் மகிந்தா தரப்பு அதை மறுத்து கருத்து தெரிவிக்க இல்லை; தகுதியானவர்களே பதவியில் உள்ளனர் எனதான் பதில் வந்தது, பார்த்திபன் இதை சோதிலிங்கம் சொல்ல முடியாது என்பது உங்கள் நம்பிக்கை, ஆனால் சொல்லமுடியும் ஆனால் அதுக்கான நேரத்தை சோதிலிங்கம் செலவு செய்வது வீண் எனதான் நான் நினைக்கிறேன்; ரிபிசி க்கு அரசு பணம் கொடுக்கிறது என அரசு சார்ந்த குமாரதுரை சொன்னபோது இல்லாத அக்கறை ரிபிசி சோதிலிங்கத்திடம் கேக்க சொன்னவுடன் பார்த்திபனுக்கு வந்தது வேதனைதான், சமூகத்தைபற்றி சிந்திக்கும் மிககுறைந்தவர்கள் கூட மகிந்தாவை காப்பாற்ற முற்படுவதால் எம்சமூகம் எப்படிதான் வாழமுடியும்;
மகிந்தாவுக்கு அடுத்தாபோல் இலங்கையில் (2ம்)அதிகாரம் (3ம்) அதிகாரம் யாரிடம் இருக்கு என்பதை தாங்களே கவனத்தில் கொள்ளவும்; வடக்கின் வக்கில் ஒருவர்(ரவி என நினைக்கிறேன்) டன் ரிவி க்கு பேட்டி கொடுக்கும் போது (சரியான பெயர் தேவையாயின் எடுத்து தருகிறேன்) இலங்கையில் மகிந்தாவுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் பஸ்சிலுக்கும் உண்டு; அதனால்தான் அவர் சில காரியங்களை செய்ய முடிகிறது என சொன்னார்,
அதேபோல் மகிந்தாவின் சின்னதம்பிக்கு உள்ள அதிகாரம்தான் போர் வெற்றி பெற காரனம் என சொன்னார்; இவைகளை கூட்டி பெருக்கி பாருங்கள் நீங்கள் தேடும் 640 கிடைக்கும்; சங்கரியர் கூட ஒரு பேட்டியில் சொல்வார் மகிந்தா குடும்பம் தமிழருக்கு ஏதாவது செய்வார்கள் என சொன்னார்; அதுக்கான பின்னோட்டம் அன்றே நான் விட்டேன், இன்று சங்கரியர் நிலை தாங்கள் அறியாததா? மகிந்தா நல்லது செய்தால் பாராட்டுவோம் தப்பில்லை; ஆனால் மகிந்தா என்ன எல்லாம் செய்கிறாரோ அதுவே நல்லது என்பது எப்படி சரியாகும்; தேர்தலுக்கு முன் உள்ள நிலை இன்று தமிழர் பிரதேசங்களில் இல்லை; (இதை நீங்கள் மறுக்ககூடும்) ஆனால் அதுவே உன்மை; அதுக்கான காரனம் என்ன, மகிந்தாவுக்கு தமிழர் வோட்டு போடாததா? அல்லது தேர்தலுக்கு முன் வோட்டுக்காய் அரசு நடகமாடியதா? எதுவாயினும் இது தவறான செயல்தானே; சுகந்திரத்துக்காய் (தினத்தன்று)1600 கைதிகளுக்கு மேல் விடுதலை செய்யபட்டது ;அவர்கள் யாரென கவனியுங்கள்; ஆனால் பல தமிழர் சந்தேக கைதிகள் கூட விடுதலை செய்ய படவில்லை என்பது வேதனையில்லையா? ரி பி சிக்கு அரசால் கிடைக்கும் பணம் நிறுத்தபடுகிற போது நீங்கள் தேடும் 640 பேரின் விபரமும் ஒரு ஊடகமாய் ராமராஜன் தருவார்,அதுவரை தாங்கள் சோதிலிங்கத்திடம் தான் கேட்டு அறிய வேண்டுமாம்; எனக்கு உங்கள் மீது உள்ள வருத்தம் என்னவெனில் பல உலக நாடுகளின் விபரங்களை மிகவும் தெளிவாய் சொல்லும் நீங்கள் கூட மகிந்தா அரசின் தவறுகளை சுட்டி காட்ட மறுப்பதுதான்,நானே பல தகவல்களை பார்த்திபன் சந்திரராஜா நக்கீரன் போன்றோரிடம் இருந்துதான் திருடுவேன்; அது எனது பின்னோட்டத்தில் தெரியும்;ஆகவே தாங்கள் அழிந்த புலியை விமர்சிப்பதைவிட ஆளும் அரசை விமர்சியுங்கள் பாராட்டுங்கள்; அதுவே எமது சமூகத்துக்கு இன்று தேவை,இது பல்லியின் கருத்து மட்டுமே:
பார்த்திபன்
பல்லி,
நீங்களும் நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். மகிந்த தவறு செய்யவில்லையென்று நான் எங்காவது வாதாடினேனா?? ஆளாளுக்கு மகிந்தவின் உறவினர் 300 என்றும் 640 என்றும், அரச பதவிகளில் அமர்த்தப்பட்டள்ளார்கள் என்று கதையளப்பதை விட, அதன் ஆதாரத்தை வெளியிடலாமே. ரிபிசி யில் ராம்ராஜ்; சோதிலிங்கம் தன்னிடம் மகிந்தவின் அரச பதவியுள்ள 640 உறவினர்களின் விபரங்கள் இருப்பதாக சொன்னதாக வானலையிலேயே சொன்னார். அது உண்மையாயின் அந்த ஆதாரங்களை வெளியிடுமாறு தான் நான் சோதிலிங்கம் அவர்களைக் கேட்டேன். அதிலென்ன தவறு?? தவறுகள் யார் செய்தாலும் அதை ஆதார பூர்வமாக விமர்சிப்பது தான் அழகு. அதை விடுத்து ஊகங்கங்களாக வெளியிடுவதில் என்ன பயன்?? மகிந்தவின் சகோதர்கள் முக்கிய பதவிகளில் இருப்பது எம் அனைவருக்கும் தெரிந்த விடயமே. அது கூட பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு, உறுதுணையாக இருந்தது என்பதை நீங்கள் உட்பட எவரும் மறுக்க முடியாது?? போர் வெற்றி கொள்ளும் வரை தேவைப்பட்ட மகிந்தவின் உறவுகள் போர் வெற்றியின் பின் கசப்பது கூட சுயநலமல்லவா??
எதிர்க்கட்சிகள் பல தடவை மகிந்தவிடம் கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அங்கு எதிர்க்கட்சிகள் கூட 310 உறவினரென்று தான் கேள்வி கேட்டனர். அதனை நம்மவர் சிலர் இன்று 640 ஆக கூட்டிப் பெருக்கியெல்லாம் உலா விட்டது தான் மிச்சம். மகிந்தவின் உறவினர்கள் பலபேர் ஏற்கனவே அரச பதவிகளில் இருந்திருக்க முடியாதா?? இனி சிங்களத்தில் “ராஜபக்ச” என்ற குடும்பப்பெயர் உள்ளவர்கள் எல்லாம் மகிந்தவின் உறவுகள் தான் என்று பட்டியல் வந்தாலும் ஆச்சரியமில்லை.
இன்றுவரை சிங்கள மக்களின் வரிப்பணத்திலும் சிங்கள மக்களின் கடன் சுமையிலும் தான் பயங்கரவாத ஒழிப்பும் நடந்தது. அரச நிர்வாகமும் நடந்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட சம்மளம் அவர்களிடமிருந்து தான் கொடுக்கப்பட்டது. சிங்கள மக்களின் பணத்தைச் சம்பளமாகப் பெற்றுக் கொண்டே அவர்களையே கேவலமாக விமர்சித்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏன் சம்பளம் கொடுக்கின்றீர்களென்று எந்த சிங்களக் குடிமகனும் கேள்வி கேட்கவில்லை. இன்று மகிந்த நம்மவர்கள் எடுத்துவிடும் அளவில் ஊழல்கள் செய்திருந்தால் சிங்கள மக்களின் பெரும்பாண்மை வாக்குகளை பெற்றிருக்க முடியுமா??
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பகுதிகளிலிருந்து ஏதாவது வரிப்பணம் அரசிற்குச் சென்றதுண்டா?? ஆனால் தமிழர்களுக்கு அது கிடைக்கவில்லை , இது கிடைக்கவில்லையென்று கூப்பாடு மட்டுமே போட்டு வந்துள்ளோம். அரசை முழுமூச்சாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அரசு எமக்கான சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. ஆளும் அரசுடன் நாமும் நியாயமாக நடந்து கொண்டு, அந்த அரசு தவறு செய்யும் போது விமர்சிப்பதற்கு எமக்கும் உரிமையுண்டு. ஆனால் வெறுமனே விர்சிப்பது மட்டுமே எமது வேலையெனில் அதனால் யாருக்கு இலாபம்??
கடந்த காலங்களில் ஜி. ஜி.பொன்னம்பலம், துரையப்பா போன்றவர்கள் அரசுடன் சேர்ந்தியங்கி தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்த போதெல்லாம், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து அவர்களைத் துரோகிகளென்று விர்சித்ததும் போட்டுத் தள்ளியதும் தான் மிச்சம். ஆனால் 40 -50 வருடங்களைத் தாண்டியும் ஜி. ஜி.பொன்னம்பலம், துரையப்பா போன்றவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் செய்த அபிவிருத்திக்குப் பின், என்ன அபிவிருத்தி தமிழ்ப் பகுதிகளில் நடந்துள்ளது?? பயங்கரவாதம் எல்லாவற்றையும் சுடுகாடாக்கியது தான் மிச்சம். இன்று வடகிழக்கில் பல அபிவிருத்தி வேலைகள் நடப்பதை பல்லி அறியவில்லையா?? தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள் அதே நேரத்தில் அரசினால் நடைபெறும் அபிவிருத்திகளையும் பாருங்கள்.
எனவே திரும்பவும் சொல்கின்றேன் அரசின் தவறுகளை நிச்சயம் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுங்கள். அதுபோல் அரசில் நாமும் அங்கமென்பதை உணர்ந்து அந்த அரசிற்கு ஆதரவாக என்ன செய்தோம் அல்லது என்ன செய்யப் போகின்றோமென்பதையும் சிந்தியுங்கள்…….
T Sothilingam
பார்த்திபன் நீங்கள் கேட்டதற்கு எனது பதிலை நான் தெளிவாகவே முன்வைத்துள்ளேன். திரும்பவும் வாசித்துக் கொள்ளவும். ஆனால் உள்ளார்ந்தமாக ஒன்றை வைத்துக்கொண்டு அதை நோக்கி என்னை இழுப்பதையே குறியாக கொண்டுள்ளீர்கள் என்பதை தொடரும் உங்கள் பின்னோட்டங்கள் தெளிவுபடுத்துகிறது. இதேபோல் முன்பு ‘இறுதியில் ஜெயபாலனை நம்பி பல்லியும் சோதிலிங்கமும் ஏமாந்தது தான் மிச்சம்’ என்றும் ஒரு கருத்து நீங்கள் கூறியதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். http://thesamnet.co.uk/?p=18819
மாயா
பார்த்தீபனின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது கேள்விகளும் யதார்த்தமானவையே! அரசியல்வாதிகள் எவரும் சுத்தமானவர்கள் அல்ல. மகிந்த , ஆரம்ப காலத்தில் ஜேவீபியனருக்காக மனித உரிமைகள் விடயத்துக்காக கடுமையாக உழைத்தவர். எனவே , மகிந்தவுக்கு , ஜேவீபியினர் யார் என்று நன்கு தெரியும்? அது போல ஐதேகட்சியின் தலைவர் , ரணில் எதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது மகிந்தவுக்கு மட்டுமல்ல, தலைக்குள் மசாலா உள்ள அனைத்து சிங்களவருக்கும் தெரியும். ரணில் , ஜனாதிபதி வேட்பாளாராகி தோற்றிருந்தால் , ஐதேகட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டி வந்திருக்கும். அதை உணர்ந்த ரணில் , சரத்தை வேட்பாளராக்க முன் வந்தார். இனி 2018ம் ஆண்டு வரை ரணில் ஐதேகட்சியின் தலைமைப் பதவியில் இருக்கலாம். தோற்றது ரணில் அல்ல, சரத்.
கண்டிச் சிங்களவர் அடிக்கடி சொல்லும் ஒரு கதை. தென் பகுதி நாயொன்றைக் கூட களுத்தறையின் கலுகங்கவைத் தாண்டிக் (கறுப்பு ஆறு : wikimapia.org/2930430/Kalu-Ganga) கொண்டு வர வேண்டாம் என்பது. கறுப்பு ஆற்றுக்கு அப்பால் இருந்து ஒரு நாய் வந்தாலும் , அது எல்லா நாயையும் துரத்தி விடுமாம். அது கண்டி மற்றும் ஏனைய சிங்களவர்களுக்கும் தற்போது நடந்து உள்ளது. எனவே எத்தனை ராஜபக்ஸ¨என்பதை விட களுகங்கைக்கு அப்பால் இருந்து எத்தனை சிங்களவர்கள் பொறுப்பான பதவிகளுக்கு வந்துள்ளார்கள் என்பதே முக்கியமாகிறது. தென் பகுதியிலிருந்து வந்த முதலாவது பிரதமரும், ஜனாதிபதியும் மகிந்த ராஜபக்ஸதான். ( பார்த்திபன் சொல்வது போல ராஜபக்ஸ என்று பெயருள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களல்ல. இவர்கள் வடமாராட்சி என்று பிரபாகரன் ஆக காட்டும் வர்க்கத்தினரல்ல?) எனவே தேர்தல் நிலவரம் குறித்து சிலர் , தமிழரிடம் கருத்துக் கேட்டு சரத் வருவார் என முடிவெடுத்திருக்கலாம். அவர்கள் சிங்கள கிராமங்களுக்கும் , சிங்களப் பகுதிகளுக்கும் போய் சற்று கருத்துக் கேட்டிருந்தால் தமது கருத்தை சரியாக சொல்லியிருக்க முடியும். பரவாயில்லை. அடுத்த முறை ஒரு முறை சிங்களப் பகுதிகளுக்கும் போய் வாருங்கள். TBC ராமராஜனுக்கு , மகிந்த பணம் கொடுக்காத கோபத்தில் , லண்டனில் இருந்து பேசியிருக்கலாம். உங்களது கருத்துகள் சிங்களவர்களுக்கு விளங்காது. காரணம் , அவர்கள் தமிழ் தலைமைகளை நம்பி வாழ்வோரல்ல. இனி , தமிழ் வாக்குகளும் சிறீலங்காவை மாற்றாது. தமிழ் தலைமைகளும் சிறீலங்காவை மாற்றாது. இப்போ நிலமையே வேற?
பார்த்திபன்
சோதிலிங்கம் அவர்களே,
ரிபிசி யில் ராம்ராஜ் தனது கருத்தை நியாயப்படுத்த உங்களைத் துணைக்கழைக்கின்றார், என்பது புரிந்து தான் உங்களிடம் அதனைக் கேள்வியாக முன் வைத்தேன். நீங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் 600 பேரென வந்ததாகக் கூறியதை, சோதிலிங்கம் 640 உறவுகளின் விபரங்களை வைத்துள்ளாரென வானொலியில் ராம்ராஜ் கதையளந்தார். எனவே உண்மை என்ன என்பதை உங்களது பதில் தெளிவுபடுத்தி விட்டது. ஆனால் நான் உங்களிடம் அப்படிக் கேட்டதே தவறென்பது போல் பல்லி கருத்தெழுதியதால், ஏன் கேட்டேன் என்பதை பல்லிக்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதனைத் தான் நான் சுட்டிக்காட்டியுமுள்ளேன். முடிந்தால் நான் எழுதிய பதில்களை, ஒருமுறை திரும்பவும் வாசித்துப் பாருங்கள். உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதுமில்லை…….
palli
//அங்கு எதிர்க்கட்சிகள் கூட 310 உறவினரென்று தான் கேள்வி கேட்டனர்//
(முதலில் என்னை மன்னிக்கவும் நான் மதிக்கும் ஒருவருடன் நானே வாதம் செய்ய வேண்டிய நிர்பந்தம்) அதுக்கான பதிலை அரசே கொடுக்காத போது தாங்கள் சோதியிடம் கேள்வி கேப்பது நியாயமா?? 310க்கான விட மகிந்தா தரப்பிடம் இருந்து வரும்போது 640க்கான கேள்வி
பார்த்திபனிடம் இருந்து வராது என பல்லி நம்புகிறேன்;
//மகிந்தவின் உறவினர்கள் பலபேர் ஏற்கனவே அரச பதவிகளில் இருந்திருக்க முடியாதா?? :://
முடியும் அது இங்கு பிரச்சனை இல்லை கவனிக்கவும் களத்தை;
//“ராஜபக்ச” என்ற குடும்பப்பெயர் உள்ளவர்கள் எல்லாம் மகிந்தவின் உறவுகள் தான் என்று பட்டியல் வந்தாலும் ஆச்சரியமில்லை. //
அப்படி பழி தீர்க்கும் மனபக்குவம் பல்லிக்கு இல்லை புலியையே மன்னிக்கும் பக்குவம் பல்லிக்கு ;
//இன்றுவரை சிங்கள மக்களின் வரிப்பணத்திலும் சிங்கள மக்களின் கடன் சுமையிலும் தான் பயங்கரவாத ஒழிப்பும் நடந்தது.//
இது தவறான வாதம் ஏன் அங்கு உள்ள தமிழர் யாரும் வேலைக்கு போகவில்லையா? வரி கட்டவில்லையா? எனது குடும்பம் இன்று வரை அரசுக்கே வரி செலுத்துகிறது;
//தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட சம்மளம் அவர்களிடமிருந்து தான் கொடுக்கப்பட்டது.//
எனது குடும்ப வரியில் மகிந்தாவின் சம்பளம் போகிறது என்பதை தாங்கள் மறுக்க முடியாது,
//போர் வெற்றி கொள்ளும் வரை தேவைப்பட்ட மகிந்தவின் உறவுகள் போர் வெற்றியின் பின் கசப்பது கூட சுயநலமல்லவா?? //
அப்படியாயின் அதே போரை வெற்றி கொண்ட நாயகனை திர்த்துகட்ட அரசு நினைப்பது பார்த்திபனுக்கு நியாயமாக படுகிறதோ;
// இன்று வடகிழக்கில் பல அபிவிருத்தி வேலைகள் நடப்பதை பல்லி அறியவில்லையா?? தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள் அதே நேரத்தில் அரசினால் நடைபெறும் அபிவிருத்திகளையும் பாருங்கள்.//
இதைதான் பல்லி செய்து கொண்டு இருக்கிறேன்; ஆனால் நீங்களோ அபிவிருத்திகளை மட்டும் பார்க்கிறியள் தவறுகளை மறுக்கிறியள் அதுவே இங்கு பிரச்சனை; உணவாய் அபிவிருத்திகளையும் விஸ்சமாய் தவறுகளையும் பார்க்க உங்களால் முடியவில்லை; இங்கே உங்கள் கருத்து மறைந்து அரசின் நிலையே உங்கள் மூலம் வருகிறது;
//மகிந்த நம்மவர்கள் எடுத்துவிடும் அளவில் ஊழல்கள் செய்திருந்தால் சிங்கள மக்களின் பெரும்பாண்மை வாக்குகளை பெற்றிருக்க முடியுமா??//
ஒரு நிதானமான அரசியல் வாது தனக்கு கிடைத்த (வெற்றி) வாக்குகளை விட (தோற்றவருக்கு)கிடைத்த வாக்குகளை பற்றியே சிந்திக்க வேண்டும்; அதன்படி 41வீதம் மகிந்தா சிந்திக்க வேண்டிய வாக்குகள், பார்த்திபன் புலிக்குதான் கூட்டம் அதிகம் அதனால் புலி செய்வது நியாயமாகுமா??
://எனவே திரும்பவும் சொல்கின்றேன் அரசின் தவறுகளை நிச்சயம் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுங்கள். //
அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது? அப்படியாயின் பார்த்திபன் மகிந்தா செய்வதெல்லாம் மகிமைதான் என சொல்லுறியளா?? எமக்கு மகிந்தாவுடன் குடும்பபகை இல்லை என்பதை ஏன் பார்த்திபன் புரிய மறுக்கிறியள்;
//அந்த அரசிற்கு ஆதரவாக என்ன செய்தோம் அல்லது என்ன செய்யப் போகின்றோமென்பதையும் சிந்தியுங்கள்…….//
இதை சிந்திக்க பலர் முகாமிட்டு கொழும்பிலும் சிலர் புலத்தில் இருந்து கொழும்புக்கும் போயியுள்ளனர்; எனது கவலை நாமெல்லாம் எப்போது அந்த அனாதை மக்களை பற்றி சிந்திக்க போகிறோம்;
//ஜி. ஜி.பொன்னம்பலம், துரையப்பா போன்றவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் செய்த அபிவிருத்திக்குப் பின், //
அவர்கள் செயத அபிவிருத்தி என்ன என்பதை பல்லி தெரியலாமா??
//கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பகுதிகளிலிருந்து ஏதாவது வரிப்பணம் அரசிற்குச் சென்றதுண்டா?? ஆனால் தமிழர்களுக்கு அது கிடைக்கவில்லை , இது கிடைக்கவில்லையென்று கூப்பாடு மட்டுமே போட்டு வந்துள்ளோம். அரசை முழுமூச்சாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அரசு எமக்கான சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. ஆளும் அரசுடன் நாமும் நியாயமாக நடந்து கொண்டு, அந்த அரசு தவறு செய்யும் போது விமர்சிப்பதற்கு எமக்கும் உரிமையுண்டு. ஆனால் வெறுமனே விர்சிப்பது மட்டுமே எமது வேலையெனில் அதனால் யாருக்கு இலாபம்??//
பார்த்திபன் நீங்களே உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் நாள் விரைவில் வரும், அதனால் இதுக்கான பதிலை நான் சொல்லவில்லை,
palli
புலியை எதிர்பதால் அறிவுஜீவிகள் அல்ல; அரசை எதிர்ப்பதால் புலி ஆதரவாளரும் அல்ல; என்பதை உணராதவரை நாம் யாரும் யாரையும் உள்வாங்க முடியாது;
சாந்தன்
//எனவே திரும்பவும் சொல்கின்றேன் அரசின் தவறுகளை நிச்சயம் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுங்கள். //
டி.பி.சி/ராமராஜன்/சோதிலிங்கம் எதுவும் எனக்குத்தெரியாது ஆனால் நீங்கள் தானே சுவிஸில் தீக்குளித்த இளைஞனின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘கதாநாயனாக’ வைத்து பொலிசார் விசாரணை/கைப்பற்றல்/திட்டமிட்ட கொலை என பல ‘அங்கிருந்து வரும் செய்திகள்’ கதை விட்டது. அதற்கான ஆதாரம் இன்றுவரை சமர்ப்பித்ததுண்டா? நான் பலமுறை கேட்டும், வசதியாக நழுவினீர்களே! இன்னும் ஆதாரம் கைக்கு எட்டவில்லையா?
NANTHA
Constantine,
Can you tell why current President of Phillipines, Megapagal Gloria Arroya banned the house maids from her country?
Further I quoted the story from the Pilipinos.
Radio Veritas (Tamil Service),based in Manila, did propaganda in support of the LTTE. Why?
People of Phillippines have no proble with others but their Catholic Church is not the same.
I do not want Sri lanka be another Phillipines.
Saraniyan
கட்டுரையாகி வந்த வானொலிப் பேட்டியில் அதிகமான பகுதி அச்சம் குறைந்த இனநடமாட்டம்> பரவலான அபிவிருத்தி என்பவன்றின் சாட்சியமாகவே உள்ளது. இது மகிந்த அரசுக்கிருந்த பாரிய சவாலோடு அது முடிந்த குறுகிய நிர்வாக காலத்தில் கிடைத்த வெற்றி. இதைத் தான் மக்களும் திரும்பப் பொறுப்பை ஒப்படைக்கும் காரணியாக்கினர்.
தேர்தலுக்கான போஸ்டர்கள் விளம்பரங்களின் சமமின்மை என்பது அரசின் பணம் பாவிக்கப்பட்டது என்ற காரணமாக மட்டுமல்ல.அதையும் விட அதிகமான பணப்புழக்கம் சரத்திடமும் இருந்தது. எத்தனை எம் பிக்களை வேண்டுமானாலும் கொள்வனவு செய்ய வல்ல கோடிக்கணக்கான பணத்தை கொடுக்க அமொpக்கா நோர்வேயூடாக அனுமதித்திருந்தது. ஆகவே காரணம் அதுவல்ல!அரசியலுக்கு வந்து நாற்பதே நாள்> எந்தக் கட்சியும் இல்லை. பதவியிலிருக்கும் இராணுவத்தில் இவரது அனுதாபிகள் இருந்தால் கூட அவர்கள் பிரச்சார வேளைகளில் ஈடுபடக் கூடாது. இலங்கை பூராவும் இப்பணிகளில் ஈடுபாடு காட்டத் தொண்டர்களில்லை. வடக்குக் கிழக்கில் சம்பந்தருக்கும் வயசாச்சு இரவில ஓடித்திரிய முடியாது.
அதே வேளை நான்கு பிரதமர்கள் மூன்று ஜனாதிபதிகள் என்று நாட்டின் உயரத்தில் நின்ற கட்சியும்> கால் நூற்றாண்டு வளர்ச்சி கண்ட பாரிய கட்சியான சுதந்திரக் கட்சிக்கு நாடு பூராவுமுள்ள தொண்டர்களை செல்வாக்குகளைச் சரத்தோட ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியாது என்பதோடு தேர்தல் நடக்கும் போது பதவியிலிருக்கம் கட்சிக்கு பணிபூpய வருபவர்களும் அதிகம் என்பதும் காரணங்கள். வெறுமனவே பார்த்ததைச் சொல்ல ஒரு பத்திரிகையாளன் தேவையில்லை! பார்வை தொடர்பில் சிந்தனையும் வேண்டும்.
Saraniyan
பின்னூட்டததில் மதமாற்றக் கருத்துக்களில் அதிகம் உண்மைகளிருந்தன. கத்தோலிக்க மதம் ஒரு மனிதனைக் கண்டாலே முதலில் அவனைத் தனக்குள் உள்வாங்விடவேண்டும் என்ற பார்வையிலேயே வளர்க்கப்பட்ட மதம். இலங்கையின் ஏனைய மதங்களிடம் இத்தன்மை மிகமிக அரிது. கத்தோலிக்கம் ஜாதி அமைப்பை மாற்றும் என்ற வகையில் நம்பிக்கையூட்டிய போதும் நடைமுறை அதுவல்ல. சாதிய வேறுபாடுகளை இன்னும் மிகைபடக் காட்டி மக்களிடம் நுளைந்தது. அதிகம் இணைந்தவர்கள் மீனவ சமூகத்தவர்கள்> வேறு சிறு தொழிலாளர்கள்.
மதம் வேர்விட்ட அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர்மட்டுமே குருவானவர்கள். ஆனால் காலங்காலமா ஆயர்கள்! மறைமாவட்ட ஆயர்கள்!! ஆண்டகைகள் என்ற அத்தனை பேரும் கரம்பனை> நெடுந்தீவைச் சேர்ந்த சாதி வெள்ளாளர்களே என்பது நடைமுறை உண்மை. இது போல் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட முகாந்திரம்> மணியக்காரன்> உடையார் போன்ற எந்தப் பதவியும் சாதிமான்கள் என அடையாளம் கண்டே வழங்கப்பட்டன.
அஜீவன்
மேலே நடக்கும் விவாதத்துக்கு இந்த கலந்துரையாடல் மூலம் பல தகவல்கள் கிடைக்கும் என நினைத்து இணைக்கிறேன்.நன்றி.
http://www.radio.ajeevan.com/
ஒலி வழி: http://www.zshare.net/audio/721954391d8bf148/ அல்லது http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=e84eef1c-4c6d-4d8d-bfce-d8abea9c8e82
BC
பார்த்திபனின் கேள்விகளில்(Feb.5 .2010 5:01 pm) உள்ள நியாயத்தை உணர்கிறேன்.
palli
//பார்த்திபனின் கேள்விகளில்(Fஎப்.5 .2010 5:01 ப்ம்) உள்ள நியாயத்தை உணர்கிறேன்.//
எந்த கேள்விகள் என சொன்னால் முடிந்தால் அதுக்குரிய விளக்கத்தை (வில்லங்கத்தை) தரலாம்; குறிப்பிடுங்கள்;
palli
//மேலே நடக்கும் விவாதத்துக்கு இந்த கலந்துரையாடல் //
நன்றி அஜீவன், இது கலந்துரையாடல் அல்ல; இது ஒரு சொற்பொழிவு, கலந்துரையாடல் என்னும்போது இருதரப்பு கருத்துக்களும் வர வேண்டும்; உதாரனத்துக்கு துரையப்பாவும் ஜீ ஜீ தான் கருதாளர்களுக்கு தெரிகிறது; நாடு முன்னேற அல்லது தமிழர் முன்னேற தமிழரசு கட்ச்சிகள் காரனம் என்பதில் கருத்து முரன்பாடு கிடையாது, ஆனால் அத்துடன் தறுதலைகளும் காரனம் என்பதை மறுக்ககூடாது (அனைத்து ஆயுததாரிகளும்தான்) புலி கூடாது சந்தேகமே இல்லை; கூடமைப்பு அது ஒரு கூதமைப்புதான்; அப்படியானால் தமிழர் தரப்பில் யார்தான் நல்லவர்கள், அதுக்கான விடை தேவை, அதுக்கு என்ன செய்யலாம்;திரும்பவும் ஒரு உதாரனம், ரிபிசி உடைத்தார்கள்; எல்லோரும் புலி உடைத்துவிட்டது என கத்தினோம் (பல்லியும்தான்) ஆனால் உடைத்தது யார்?? புலிகளா?? நாக்கில் நீர் படாமல் தண்ணீர் அருந்தும் புரட்ச்சியாளர்கள்தானே, அதை ரிபிசி யோ அல்லது வேறு மாற்று கருத்தாளர்கள் விமர்சித்தீர்களா?? இப்படி பல்லியால் பல விடயத்தை சொல்ல முடியும், ஆனால் அது இங்கு பிரச்சனையல்ல, புலி விட்ட தவறுக்காய் அரசு செய்யும் செய்ய துடிக்கும் தவறுகளை பொறுக்க முடியாது; அதுவே எனது சொற்பொழிவல்ல வாதம்;
NANTHA
Saraniyan :
உங்கள் தகவல்கள் உண்மையானவையே. கத்தோலிக்க பாதிரிகளில் பலர் “பிள்ளை” என்ற இந்தியாவில் உள்ள வேளாளரின் சாதிப்பெயரை தங்களின் பெயர்களோடு சேர்த்து வைத்த நோக்கம் “கத்தோலிக்கர்கள்” உயர்சாதிகள் என்பதனைப் பறை சாற்றவே ஆகும்.
ஆனால் உண்மையில் இவர்கள் “வேளாளர்கள்” தானா என்று ஒரு கேள்வி? நீர் வளம் இல்லாத “தீவு”களில் எப்படி வேளாண்மை(நெல்) செய்து வேளாளர்கள் இருக்க முடியும்?
போர்த்துகீசர் காலத்து யாழ்ப்பாண தேசப்படங்களில் தீவுகள் மனித சஞ்சாரமற்றவையாகவே இருந்துள்ளன. அப்படியாயின் இப்போது அங்கு உள்ள “வேளாளர்கள்” யார்? “வெள்ளையாக” இருந்தால் வேளாளர்களோ? இந்த வெள்ளை நிறமும், பூனைக் கண்களும் இலங்கைக்கு வந்த போர்த்துகீசர், ஒல்லாந்தர், ப்ரிடிஷ்காரர்களின் “நன்கொடை”.
1830 ஆம் ஆண்டு நடந்த முதலாவது சனத் தொகை கணக்கெடுப்பு சைமன் காசி செட்டி முதலியாரால் நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால் “தற்போது” பல சாதிகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் “வேளாளர்” ஆகியுள்ளனர் என்ற உண்மை தெரிய வரும்.
பல குடும்பங்கள் “கத்தோலிக்க/கிறிஸ்தவ மத மாற்றங்களின் பின்னர் உத்தியோகங்கள் பெற்று “வசதியாக” வந்தும் வேளாளர்கள் ஆகியுள்ளனர்.
இதனால்த்தான் “யாழ்ப்பாணச்” சரித்திரம் என்பது தமிழ் சினிமா போல் கேடு கெட்டதகாவும், மற்றவர்களால் நம்பப்பட முடியாததாகவும் உள்ளது. இரண்டாயிரம் வருட பாரம்பரியம் நகைப்புகுள்ளாகியதும் இப்படியான “தகிடு தத்தங்கள்” தொடர் கதையாகியுள்ளதனால்த்தான் என்றும் நம்புகிறேன்!
BC
பல்லி, பார்த்திபனின் கேள்விகள் எல்லமே நியாயமானவை.அதில் பொதுவானது முக்கியமானதுமான கேள்வி என்னவென்றால்
அரசை முழுமூச்சாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அரசு எமக்கான சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. ?
மாயா
நம்மில் பலர் இலங்கையில் உள்ள கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மதம் குறித்து பேசுகிறார்கள். இதுவும் சாதிக் கொடுமை போன்ற மற்றுமொரு கொடுமை. தமிழீழத்துக்காக போராடிய பலரை காப்பாற்றிய இடங்கள் தேவாலயங்காளகவே இருந்தன. அத்தோடு தமிழீழ போராட்டத்துக்காக செத்தவர்களில் அநேகமானோர் கிறிஸ்தவர்களில் அடக்கம். அருட் தந்தை சிங்கராயர் போன்றவர்கள், உண்மையில் தமிழுக்காக வாழ்ந்து இறந்தவர்கள். சிலரது எழுத்துகள் இஸ்லாமிய சகோதரர்களை வார்த்தைகளால் வதைப்படுத்தியது போல கிறிஸ்தவர்களையும் வதைபடுத்தத் தொடங்கியுள்ளது. இந்த வகையில் தமிழர்கள் மேல் இடம்பெறும் சிங்களவர்களின் கொடுமை குறித்த என் போன்றோரது பார்வை சாதாரணமாகிவிடும். தமிழ் பேசும் மக்களை பிரிக்கும் எழுத்துகளை அல்லது கருத்துகளை தவிர்க்க தமிழினம் முயலாவிட்டால், விரைவில் அவர்களும் சிங்களவர்களாக மாறும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே புத்தளம் முதல் நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர்கள் (பரவர் , முக்குவர், செட்டிகள்)சிங்களவர்களாகி உள்ளதை நாம் ஒரு முறை சிந்திப்பது நல்லது.
நாம் இந்துகளாக இருக்கலாம். இந்து மத குருமாருக்காக இதுவரை ஒரு அமைப்பும் இல்லை. அவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை. எனவே அவர்களை எவரும் கணக்கெடுப்பதுமில்லை. அவர்களையும் நாம் பார்ப்பனர்கள் என ஏளனப்படுத்தியே பழகி விட்டோம். இலங்கை (ஈழ) தமிழன் தன்னைத் தவிர அடுத்தவனுக்கு மதிப்பளித்து வாழாத சுயநலவாதிகள். புலிகளின் கையிலிருந்த ஆயுதங்களுக்கு பயந்து வாய் திறக்காத தமிழன்தான் ஈழத் தமிழனேயன்றி, உண்மையான மொழி பற்றால் ஒன்றிணைந்தவனல்ல ஈழத் தமிழன்.
palli
BC//அரசை முழுமூச்சாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அரசு எமக்கான சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. ?//
இதை பல்லி எங்கே சொல்லியுள்ளேன்?? எனது வாதம் அரசு செய்யும் செயல்களையும் தட்டி கேக்கவோ அல்லது சுட்டி காட்டவோ ஒரு சிலரே உள்ளனர்; அவர்களும் அரசின் பெருமைகளை பேச வேண்டுமா?? என்பதுதான், நாம் அரசின் பெருமைகளை மட்டும் பேசுவோமேயானால் மக்களை வியாபாரிகள் இலகுவாக கவர்ந்து விடுவார்கள், நான் பலமுறை அரசின் நல்ல காரியங்களை பாராட்டி இருக்கிறேன்; ஆனால் என்னால் முடிந்த வரை யார் தமிழர் மீது சவாரி செய்தாலும் அவர்களுக்கு ஒரு வெகதடை போட முயல்வேன்; அரசை புகழ பலர் உண்டு, எம்மினம் சார்பாய் பேசவோ அல்லது சொல்லவோ
சாந்தன்
//….கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பகுதிகளிலிருந்து ஏதாவது வரிப்பணம் அரசிற்குச் சென்றதுண்டா??…//
நான் அறிந்தவரை உலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா வரிப்பணம் சென்றதில்லை. ஆனால் சுனாமிக்கு அள்ளீக்கொடுத்தது உலகம். அதையும் விழுங்கி ஏப்பம் விட்டது ஸ்ரீலங்கா அரசு. இன்னும் கணக்குக்காட்டவில்லை 600 மில்லியனுக்கு. மிச்சம் 400 மில்லியன் சுனாமியில் ச்ம்பந்தப்படாத இடங்களில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அள்ளிக்கொடுத்த பணத்தில் ஈழத்தமிழரின் வரிப்பணமும் உண்டு.
மக்கள் வரிப்பணம்/அரச உதவிகள் பற்றிப்பேசுவதாக இருந்தால் தனித்தலைப்பில் விவாதிக்க வேண்டிய அளவு விடயங்கள் என்னிடம் இருக்கிறது. சிலோன் ரெயில்வே காலத்தில் இருந்து இன்றைய தேங்காய் வியாபாரம் வரை. மத்தியகிழக்கு வீட்டுப்பணிப்பெண்கள் விடயம் தனி!
//…அரசை முழுமூச்சாக நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் அரசு எமக்கான சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது….//
ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை கோரிக்கைகளை முழுமூச்சுடன் எதிர்க்கவேண்டும் ஆனால் அவர்கள் GSP+ சலுகை தந்தே ஆகவேண்டும் என நினப்பதில் என்ன நியாயம் இருக்கின்றதோ அதற்கு மேலான நியாயம் இருக்கிறது. இம்முறை எதிர்க்கட்சியினர் நாட்டின் சுதந்திர தினத்தையே பகிஷ்கரித்தனர் அதனால் அவர்களுக்கு தலையில் குண்டு போடப்படுமா?
kamal
வடக்குக் கிழக்கில் சம்பந்தருக்கும் வயசாச்சு இரவில ஓடித்திரிய முடியாது.// சரியாகச் சொன்னீர்கள் Saraniyan . வயதான காலத்தில் ஓடித்திரியவும் ஏலாது சரியாகச் சிந்திக்கவும் ஏலாது. அதற்கு ஓய்வெடுக்க வேண்டியதானே. சங்கரியும் சம்பந்தரும் எப்ப மற்றவர்களுக்கு வழிவிடப்போகினமோ தெரியவில்லை. காலத்தோடும் நடைமுறை வாழ்வோடும் சிந்திக்கக்கூடிய உள்ளுர் வாசிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
மாயா
//நான் அறிந்தவரை உலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா வரிப்பணம் சென்றதில்லை. ஆனால் சுனாமிக்கு அள்ளீக்கொடுத்தது உலகம். அதையும் விழுங்கி ஏப்பம் விட்டது ஸ்ரீலங்கா அரசு. இன்னும் கணக்குக்காட்டவில்லை 600 மில்லியனுக்கு. மிச்சம் 400 மில்லியன் சுனாமியில் ச்ம்பந்தப்படாத இடங்களில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அள்ளிக்கொடுத்த பணத்தில் ஈழத்தமிழரின் வரிப்பணமும் உண்டு. – சாந்தன் on February 6, 2010 5:26 pm //
புலிகளோ அல்லது புலி பகுதியில் வாழ்ந்தவர்களோ அரசுக்கு வரி செலுத்தவில்லை. அத்தோடு நிழல் அரசு அமைத்து ஆட்சி செய்த புலிகள், மக்களிடம் வரி வசூலித்தது. சுனாமிக்கு , சிறீலங்கா அரசுக்கு கிடைத்த பணத்தில் , புலிகளுக்கும் பெருந் தொகையான பணம் வழங்கப்பட்டது. ஆனால் புலிகள் , அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள். உண்மை சொல்வார்கள். தமது பகுதியில் எவரும் வந்து புணரமைப்புகளை செய்யக் கூடாது. தாமே தரும் பணத்தை பெற்று மக்களுக்கு உதவப் போவதாக சொன்னதோடு , அரசிடமிருந்தும், உலக நாடுகளிடமிருந்தும் உதவிகளை நேரடியாக பெற்றனர். அவற்றில் மக்களுக்கு என்ன செய்தார்கள்? சொல்லுங்கள்? வெளிநாடுகள் கொடுத்த படகுகளைக் கூட புலிகள் பறித்துக் கொண்டனர். இது போன்ற கொள்ளையடிப்புகள்தான் நடந்தன. புலிகள் , கொள்ளைக் கோஸ்டியினரே தவிர , கொடுத்து எவரையும் வளர்த்தவர்கள் அல்ல.
புலிகளின் அழிவிலிருந்துதான் , தமிழனது வாழ்வே உதயமாகியுள்ளது. புலி போன்ற இனியொரு அமைப்பு உருவாக இலங்கையில் வாய்பபே இல்லை. அதை சிங்களவர்கள் தடுக்கிறார்களோ இல்லையோ தமிழரே தடுப்பார்கள். இப்போது கூட கையில் ஆயுதங்களோடு இருக்கும் ஏனைய போராட்டக் குழுக்களது கைகளில் இருக்கும் ஆயுதங்களைக் கழையவே தமிழரது வாக்குகள் சரத்துக்கு கொடுக்கப்பட்டன. அவை வேறு எதற்காகவும் கொடுக்கப்பட்டவை அல்ல. “தான் ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஆயுதக் குழுக்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்களையும் களைவேன்” என சொன்ன சரத்தின் பேச்சுக்கு அதிக தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள்.
எனவே தமிழர்கள் இனி ஆயுத போராட்டத்துக்கு எதிராகவே செயல்படுவார்கள். எனவே மக்களது வரிப் பணத்தில் அந்த மக்களைக் கொன்றதில் புலிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. அது அரசுக்கு மட்டுமல்ல.
palli
//நம்மில் பலர் இலங்கையில் உள்ள கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மதம் குறித்து பேசுகிறார்கள். இதுவும் சாதிக் கொடுமை போன்ற மற்றுமொரு கொடுமை.//
இதைவிட யதார்த்தமாய் சொல்லமுடியாது ; அருமை மாயா.
:://போராட்டக் குழுக்களது கைகளில் இருக்கும் ஆயுதங்களைக் கழையவே தமிழரது வாக்குகள் சரத்துக்கு கொடுக்கப்பட்டன//
இது உன்மைதான்; அதையும் விட மகிந்தாவைவிட சரத் வந்துவிடுவாரோ என பயந்தவர்களும் இவர்கள்தான்;
அரசுக்கு பிடிக்காதவர்களை இவர்களது ஆயுதமே பதம் பார்க்கும், இரு நாள் முன்பு வவுனியாவில் (நெடுங்குளத்தில்) கிணத்தில் இருந்து ஒருவர் பிணம் எடுக்கபட்டது; இதை செய்தது யார்?? மக்களுக்கு தெரியும்; ஆனால் அதே புலி பயத்தால் அடங்கி வாழ்கிறார்கள்; இது தொடருமா??
NANTHA
மாயா:
இந்து, பௌத்த மதங்கள் “மற்றைய” மதங்களை விட “சுதந்திரம்” என்ற கோட்பாட்டை அனுசரிப்பவை. மாதம் மாதம் தவணைப்பணம் கட்டித்தான் கோவிலுக்கு போக வேண்டும் என்று இந்து மதத்தில் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. இந்துக்கள் கண்டிப்பாக கோவிலுக்கு போகவேண்டும் அல்லது ஐந்து நேரம் கும்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது. இந்துக்களும், பௌத்தர்களும்தான் முஸ்லிம்களாகவும் கத்தோலிக்கராகவும்/ கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். அதன் காரணம் “இந்து” மதத்தில்” இந்த இஸ்லாமியர்களாலும், கிறிஸ்தவ/ கத்தொலிக்கர்களாலும் “கண்டு” பிடிக்கப்பட்ட” குறைபாடுகள் அல்ல.
கடந்த 1000 வருடங்களுக்கு மேலாக இந்துக்களிடம்/பௌத்தர்களிடம் “அரசியல்” அதிகாரம் இல்லை என்பதுதான் மிக முக்கிய காரணம்.
இலங்கையில் “தமிழ்” என்ற போர்வையில் வத்திகானின் “கொலைகாரப்” பங்காளிகள்தான் புலிகள். வத்திகான் ஒன்றும் ‘மகாத்மாகாந்தியின்” அஹிம்சையை கடைப்பிடிக்கும் சமயமல்ல. வத்திக்கன் இலங்கை அரசை விட “பணபலம்” கொண்ட இயக்கம். அதன் ஏஜண்டுகளான “பாதிரிகள்” புலிகளோடு சேந்து “தமிழர்களுக்கு “விடுதலை” எடுக்கவா புறப்பட்டார்கள்? தமிழ் அரச வாரிசுகளையும், யாழ்ப்பாணத்து தமிழ் அரசையும் அழித்த ‘கத்தோலிகர்கள்” தமிழ் உரிமைக்கு போராட்டம் நடத்தினார்கள் என்று நம்புவது எப்படி சாத்தியமாகும்?
இந்துக்களை “நிந்தனை” செய்வதே கொள்கையாகக் கொண்டிருக்கும் “கத்தோலிக்க” பாதிரிகள், தமிழருக்கு, அதாவது 95 % இந்துக்களுக்கு “ஆட்சி” அதிகாரம் கிடைக்க புலிகளோடு சேர்ந்தனர் என்று யாருக்கு காது குத்துகிறீர்கள்? கத்தோலிக்க/கிறிஸ்தவ கோஷ்டிகள் “இந்துக்களை அழிக்க எந்தவித “கிரிமினல்’ கோஷ்டிகளுடனும் சேர்வார்கள் என்பது உலகறிந்த விஷயம்.
கத்தோலிக்க/ கிறிஸ்தவ பாதிரிகள் உலகத்தின் எந்த மூலையிலும் “விடுதலை” வேண்டி போரிட்ட இயக்கங்களோடு இருந்தது கிடையாது. “விடுதலையை’ ஆதரித்ததும் கிடையாது. அப்படி எங்காவது நடந்திருந்தால் நீங்கள் கூறலாம்.
நிகராகுவாவின் சன்டினிஸ்டா இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்த கத்தோலிக்க பாதிரிகளை வத்திக்கன் துரத்தியது. கியூபா புரட்சியின் பின்னர் தென் அமெரிக்காவில் பல கத்தோலிக்க பாதிரிகள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர் என்ற “குற்றச் சாட்டில்” அவர்களை கத்தோலிக்க குருத்துவ பதவியிலிருந்து வத்திக்கான் துரத்தியதுதான் வரலாறு.
ஆனால் புலிகள் போன்ற “பயங்கரவாதிகளோடு” சேர்ந்து சிங்கராயர் போன்றோர் “வங்கிக் கொள்ளைகள்” நடத்தியும் அவர்களை வத்திக்கான் “கண்டிக்காத” காரணம் என்ன? தமிழ் விடுதலையா அல்லது புலிகள் இந்துக்களையும் பௌத்தர்களையும் கொன்று தீர்க்கிறார்கள் என்பதுதான் காரணமா? புலிகளுக்கு கத்தோலிக்க பாதிரி இம்மானுவேல் “DIVINE SOLDIERS OF CHRIST” என்று புகழாரம் சூடியதும் “95 சதவீதம் இந்துக்களைக் கொண்ட தமிழ் சமூகத்துக்கு அரசியல் அதிகாரம் பெற்றுக் கொடுக்கவா?
புலிகள் கொலைகள் செய்த “மாதிரி” களை நோக்கும் போது முதலில் தமிழர்களிடையே எந்த “இந்து” தலைமையும் தோன்றக்கூடாது என்பது புலனாகும்.
சிங்கள பாதிரிகள் “தமிழ் இந்துக்கள்”தான் சிங்களவருக்கு பிரச்சனை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதே நேரத்தில் இந்த “தமிழ்” பாதிரிகள் “பௌத்த சிங்களவர்கள்” தமிழுக்கு பிரச்சனை என்கிறார்கள். அது எப்படி ஒரே “பாதிரிகள்” நேரெதிரான கதைகளை சொல்ல முடியும்? சிங்கள / தமிழ் கத்தோலிக்கர்கள் என்ன புண்ணிய ஆத்மாக்கள் என்ற எண்ணமோ?
1983 கலவரத்தில் உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய தமிழர்களை “கொழும்பில்” எந்த கத்தோலிக்க/கிறிஸ்தவ பாதிரியும் தங்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கவில்லை. பம்பலபிட்டி இந்துக் கல்லூரிக்கும், கப்பிதவத்தை பிள்ளையார் கோவிலுக்கும்தான் ஓடி அடைக்கலம் பெற்றனர்.
அல்பிரட் துரையப்பாவின் கொலையை இன்று நோக்கும் போது அமிர்தலிங்கத்தை விட கத்தோலிக்க பாதிரிகள் அவரை கொல்ல வேண்டும் என்று முனைந்துள்ளனர். அதனால்த்தான் துரையப்பாவை “இந்து” கோவிலின் முன்பாக கொலை செய்தனர். துரையப்பா கத்தோலிக்கனாக இருந்து கொண்டு எப்படி “பெருமாளை” கும்பிடலாம் என்பது கத்தோலிக்க பாதிரிகளின் கோபம். அப்படி கத்தோலிக்க மதத்தை விட்டுச் செல்பவர்களை ” தண்டிக்கலாம்” என்பது கத்தோலிக்க மதத்தில் பின்பற்றப்படும் “INQUISITION” அல்லது “தண்டனை” பற்றி தெரிந்தவர்கள் அறியலாம்.
சிங்கராயர் என்ற பாதிரியின் தாய் வல்வெட்டித்துறையை சேர்ந்த பெண் என்பது பலருக்கு தெரியாத விடயம். பாதிரி சிங்கராயர் போன்றவர்கள் மூலம் வல்வெட்டித்துறை கிரிமினல்கள் “கத்தோலிக்க” கூலிகளாக மாறினார் என்பதுதான் உண்மை. புலிகளின் “தனாதிகாரிகள்”, “அட்வைசர்கள்” அனைவரும் கத்தோலிக்க பாதிரிகள். வன்னி மக்களை புலிகள் மனித கேடயங்களாக பாவிக்க அவர்களைப் புலிப்பகுதிக்குள் விரட்டியதில் ஜேம்ஸ் பத்திநாதன் போன்ற பாதிரிகள் அடங்குகிறனர்.
புலிகளோடு கத்தோலிக்க கோஷ்டிகள் சேர்ந்து “தமிழ் ஈழம்” எடுக்க முயலவில்லை. மாறாக கிழக்கு திமோர் போன்ற ஒரு கத்தோலிக்க ராஜ்யத்தை உண்டாக்க முயன்றனர்.
புலிகளின் எந்த” அராஜகத்தையும்” கத்தோலிக்க/ கிறிஸ்தவ பாதிரிகள் கண்டித்தது கிடையாது.
புலிகள் பௌத்தர்களின் “புனித அரச மரத்தையும்”, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையையும் தாக்கியது எதற்கு? அது புத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பெரும் பிளவை உண்டு பண்ணவே ஒழிய “தமிழ்” உரிமைக்காக அல்ல.
பௌத்தர்களும், இந்துக்களும் “எதிரிகள்”” என்று கதைகள் கட்டி விடுவதில் கத்தோலிக்க/ கிறிஸ்தவ ஆசாமிகளும் அவர்களுடைய கூலிகளுமே முன் நிற்கிறார்கள்.
இந்து மதமும், பௌத்த மதமும் பெரும்பாலான விடயங்களில் ஒரே கருத்துடையவை. அவற்றிற்கு “வெளி நாட்டு” தலைமைகள் கிடையாது. இதனை இந்து தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்களாக இருந்தால் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும். புத்தளம் மாவட்டத்தில் உள்ள இந்து, தமிழ் கிராமங்களான உடப்பு, மதுரங்குளம் ( முன்னாள் வானொலி அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்தின் ஊர்), முன்னேஸ்வரம் என்பன இன்றும் தமிழ் பேசும் கிராமங்களாக உள்ளன.
கத்தோலிக்கர்களாக மாறியவர்கள் இப்போது” தமிழ்” பேசும்” சிங்களவர்களாக மாறியுள்ளனர். செல்வநாயத்தின் சம்பந்தி , எம் வி நாகநாதனின் மனைவி புத்தளம் சேனைக் குடியிருப்பை சேர்ந்தவர்கள். அவர்களால் தொடங்கப்பட்ட சென்ட். ஆன் பாடசாலை, சென் அன்றூ பாடசாலை என்பன இன்று “சிங்கள” மகா வித்தியாலயங்களாக உள்ளன.
ஜே ஆர் ஜெயவர்த்தனா 1944 ஆம் ஆண்டு சட்டசபையில் “சிங்களம்” மாத்திரம் என்று மொழிய முன்னரே வடமேல் மாகாண கத்தோலிக்க பிசப் எட்மன்ட் பீரிஸ் 1933 ஆம் ஆண்டு கத்தோலிக்க தமிழ் பாடசாலைகள் அனைத்தும் “சிங்கள” மொழி பாடசாலைகளாக மாற்றியவர். அதனை எதிர்த்த சில பாடசாலைகள் இப்போதும் தமிழ் பாடசாலைகளாக உள்ளன. அது” எவ்வளவு” காலத்துக்கு என்பதுதான் கேள்விக்குறி.
வத்திக்கானைப் பொறுத்தளவில் “இலங்கை” கத்தோலிக்க நாடாகினால் போதும். வத்திக்கானுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? தவிர வத்திக்கான் “சிங்களத்தை” ஆதரிக்குமே ஒழிய “தமிழ்” பேசும் இந்துக்களை ஆதரிக்கப் போவதில்லை. காரணம் எண்பது வீதம் இந்துக்களை கொண்டுள்ள இந்தியா என்பதை உணர வேண்டும். புலிகள் “இந்தியாவிற்கு” எதிராக கச்சை கட்டியது “கத்தோலிக்க” உபதேசமே ஒழிய வேறில்லை.
கடவுள் இல்லை என்ற கம்யூனிஸ்டுக்களை “விஷமாக” எதிர்க்கும்” கத்தோலிக்க/கிறிஸ்தவ கோஷ்டிகள் திமுக வுடன் பேணும் உறவின் அடிப்படையே கருணாநிதியினது “இந்துமத எதிர்ப்பே” ஆகும்.
ஐரோப்பியர்களைப் பொறுத்தளவில் இந்து, தமிழ், புத்தம் என்பன “எதிரிகளே” ஆவர். அவர்களின் ஏஜன்டுகளாக செயல்படும் கத்தோலிக்க/ கிறிஸ்தவ பாதிரிகள் “தமிழ் உரிமை” போராட்டம் செய்கிறார்கள் என்று மண்டையில் மசாலா உள்ள எந்த தமிழனும் நம்ப மாட்டான்.
மாயா
நந்தாவின் தகவல்களுக்கு நன்றி. உங்கள் எழுத்துக்களில் பல எனக்கும் உடன் பாடானவை. நான் புத்தளம் சேனைக்குடியிருப்பில் வாழ்ந்தவன். சென். அன்றூஸ் மகாவித்தியாலயத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவன். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எனது உறவுக்காரர். எனக்கு இப் பகுதி அத்துப்படி. சேனைக்குடியிருப்பில் வாழ்வோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள். அங்கே சென்.மேரிஸ் தமிழ் வித்தியாலம் இருக்கிறது. சற்றுத் தொலைவில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகே தமிழ் இந்து மகாவித்தியாலம் இருக்கிறது. புத்தளம் நகரில் வாழும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்கள். பாலாவி ( முன்னர் குருவிக்குளம்) தொடக்கம் கல்பிட்டி வரையிலான பகுதியில் தளுவை , பாலக்குடா , தலவில் ஆகிய பகுதிகளில் சிங்களவர்களும் , நுரைச்சோலை , ஏத்தாலை, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியரும் வாழுகின்றனர். ஏனைய பகுதிகளில் வாழ்வோர் தமிழர்களேயாகும். அடுத்து சிலாபம் பகுதியை நோக்கினால் உடப்புக்கு அருகேயுள்ள கட்டைக்காடு போன்ற இடங்கள் தமிழர் பிரதேசங்களே. ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் , கட்டைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்டு சிலாபத்தின் காக்கைப்பள்ளி என்ற இடத்தில் வாழ்ந்தவர். இவரது பெரும்பாலான உறவினர்கள் கத்தோலிக்கர்கள்.
இங்கே நான் மதங்களுக்காக போர் தொடுக்க முயலவில்லை. மாற்றங்கள் மனிதனுக்கு தேவை. ஆனால் மொழியின் பேரால், மதங்களின் பேரால் மனித வதைகள் செய்வதை அல்லது பிரிவுகளை உருவாக்குவதில் எனக்கு