2022 வரவு செலவுத்திட்டம்

2022 வரவு செலவுத்திட்டம்

“பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதற்காக ஒரு வரவு செலவுத்திட்டம்.” – இரா.சாணக்கியன்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

​​வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.

கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“சாக்கு போக்கு சொல்லுவதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்.” – ஐக்கிய மக்கள் சக்தி அறிவுரை !

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 20% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும்  2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் பேசிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இது தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றுக்கொள்ள முடியும்.  வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.  உண்மையில் ஒதுக்கீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். ஒரு கிளர்ச்சி ஏற்படும் போது, ​​எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதற்கு பதிலாக அரசாங்கம் தனது கொள்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துவதைத் ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்..

அதற்கு பதிலாக மக்கள் செவிசாய்க்கவும், ஏனையவர்களின் குறைகளைக் காணக்கூடாது என்பதற்காக தனது கொள்கைகளை திருத்தவும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.