(கொவிட்-19) தடுப்பூசி
(கொவிட்-19) தடுப்பூசி
உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து பெப்ரவரி நடுப்பகுதியில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளதாக மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் இதனை தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர்,அமெரிக்கா ரஸ்யா சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பைசர்-பயோன்டெக் நிறுவனங்களின் மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை போன்ற நாடுகளில் அதனை சேமிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.