(கொவிட்-19) தடுப்பூசி

(கொவிட்-19) தடுப்பூசி

அமெரிக்காவில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்டார் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் !

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.
இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அமெரிக்க நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேயர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.
அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – 2021 பெப்ரவரியில் இலங்கையில் !

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து பெப்ரவரி நடுப்பகுதியில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளதாக மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் இதனை தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர்,அமெரிக்கா ரஸ்யா சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பைசர்-பயோன்டெக் நிறுவனங்களின் மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை போன்ற நாடுகளில் அதனை சேமிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.