கொரோனா வைரஸ் இலங்கை

கொரோனா வைரஸ் இலங்கை

300 ஐ தாண்டிய கொரோனா உயிர்ப்பலி – மேலும் எட்டுப்பேர் பலி !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” – நீதியமைச்சர் அலி சப்ரி

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பேசும் போது,

உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இந்தவிடயத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.  மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா ?என கேள்வி எழுப்பியுள்ளது.

தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதியமைச்சர் ஊடகம் ஒன்றில் பேசும் போது “கொரோனாவால் இறந்து போகும் முஜ்லீம்களின் உடல்களை அரசு நிறுத்த வேணடும் என குறிப்பிட்டிருந்ததுடன் இது நிறுத்தப்படா விட்டால் முஸ்லீம் இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக மாற இடமுண்டு எனக்கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கியமக்கள் சக்தி தொடர்ச்சியாக குற்றஞசாட்டி வருகின்ற நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பி.சி.ஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை.முகக்கவசங்கள் தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது .கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்க வண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.