“இந்தியா இலங்கையை அச்சுறுத்தமுடியாது” என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரதிய ஜனநாயக கட்சி இலங்கையில் தனது கட்சியை உருவாக்க முயல்வது குறித்து அண்மையில் கருத்துகள் அதிகம் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவுசெய்தனர் . இன்னொரு நாட்டின் சுதந்திரத்தில் மற்றுமொரு நாடு செல்வாக்குசெலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கின்றது .
இலங்கை ஒரு ஜனநாயக சுதந்திர அணிசேரா நாடு என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை எந்த நாட்டுடனும் பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடனேயே இந்த கருத்துக்கள் வெளியாகியிருக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.