பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு !

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் குறித்த சட்டமூலங்கள் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த சட்டமூலத்திலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என பல்வேறு தரப்பினர்களினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதன் பின்னணியிலேயே அனைத்து தரப்பினரதும் ஆலாசேனைகளை பெற்று குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷச தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *